Showing posts with label அரசியல். Show all posts
Showing posts with label அரசியல். Show all posts

Wednesday, January 23, 2013

ஆர்.எஸ்.எஸ், பா.ஜ.க தீவிரவாத முகாம்கள் குறித்த ஆதாரங்களை வெளியிட தயார்! – திக்விஜய் சிங்

இந்தியாவில் ஆர்.எஸ்.எஸ்ஸும், பா.ஜ.கவும் நடத்தும் தீவிரவாத முகாம்கள் குறித்த ஆதாரங்களை வெளியிட தயார் என்று காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளரான திக்விஜய்சிங் கூறியுள்ளார்.

ஜெய்ப்பூர் காங்கிரஸ் கட்சி கூட்டத்தில் வைத்து இந்தியாவில் ஆர்.எஸ்.எஸ்ஸும், பா.ஜ.கவும் தீவிரவாத முகாம்களை நடத்திவருவதாகவும், நாட்டில் குண்டுவெடிப்புகளை நிகழ்த்திவிட்டு அவற்றை சிறுபான்மையினர் மீது பழிபோடுவதாகவும் மத்திய உள்துறை அமைச்சர் சுசில் குமார் ஷிண்டே கூறியிருந்தார். இதனால் பதட்டமடைந்த சங்க்பரிவாரம் அறிக்கைகளை வெளியிட்டு வருகிறது. இதற்கான ஆதாரங்களை ஷிண்டே வெளியிடவேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

காவி தீவிரவாதம்: சுஷில்குமார் ஷிண்டே மன்னிப்புக் கோர வேண்டிய அவசியம் இல்லை -

காவி தீவிரவாதம் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டே கூறிய கருத்துக்கு அடுக்கடுக்கான நிகழ்வுகள் உண்டே. அப்படிக் கூறியதற்காக அவர் வருத்தம் தெரிவிக்க வேண்டும் என்று பி.ஜே.பி. கூறுவது பொருட்படுத்தப்பட வேண்டிய ஒன்றல்ல என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள முக்கிய அறிக்கை வருமாறு:

ஆர்.எஸ்.எஸ். போன்ற இந்துத்துவா அமைப்புகள் இந்து பயங்கரவாதத்தினை முன்னிறுத்தி நடத்துவதாகவும், அதற்காக பயிற்சிகள் அளிப்பதாகவும் உள்துறை அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டே அவர்கள் கூறியிருப்பதை எதிர்த்து பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ்., அமைப்பினர் வானத்திற்கும் பூமிக்குமாக குதித்து ஆர்ப்பாட்டம் செய்கின்றனர்; அதற்கு அவர் மன்னிப்புக் கோர வேண்டும்; இல்லையேல் 24ஆம் தேதி கிளர்ச்சி, கண்டன ஆர்ப்பாட்டம் செய்வோம்; ஷிண்டே பதவி விலக வேண்டும் என்றும் உடனே ஆர்ப்பரித்துள்ளனர்!

Sunday, November 11, 2012

ஏன் ஹிந்துத்துவாவாதிகள் முஸ்லிம்களை வெறுக்கின்றனர்?

முஸ்லிம் மன்னர்கள் இந்தியாவின் மீது படையெடுத்து உண்மையில் கோவில்களை சிதைத்தார்களா?  இந்திய நாட்டின் மீது படையெடுத்து வந்தவர்கள்தானே இஸ்லாமியர்கள்? இந்துக் கோயில்களை இடித்துச் சிதைத்தார்கள்?

இந்துக்களாக இருந்தவர்மீது ‘ஜிஸியா’ என்னும் தண்டனை வரி?முஸ்லிம்கள் ஹிந்துகளாக கட்டய மத மாற்றம்?இந்தியா-பாகிஸ்தான் பிரிவினைக்கு முஸ்லிம் லீக் கட்சிதானே காரணம்?முஸ்லிம்கள் என்றால் பயங்கரவாதிகளா?ஏன் கஷ்மீரில் தீவிரவாதம் அதிகரிக்கிறது ?மேலும் முஸ்லிம்கள் மீது சுமத்த படும் பல பொய் குற்றசாட்டுகளுக்கும் மிகவும் அற்புதமாகவும்,ஆழமாக சிந்தித்தும் இந்த கட்டுரையில் விளக்கம் அளித்துள்ளார் தோழர் அ.மார்க்ஸ் அவர்கள்.....

Friday, July 22, 2011

கழகத்திற்கோர் 'எமெர்ஜென்சி'; கலக்கத்தில் கருணாநிதி..?

தமிழகத்தில் ஆக்கிரமிக்கப்பட்ட நிலங்கள் குறித்து வரும் புகார் குறித்து நடவடிக்கை  மேற்கொள்ள காவல்துறையில் தனிப் பிரிவை ஏற்படுத்தியுள்ளார் முதல்வர் ஜெயலலிதா. இதையடுத்து அடுத்தடுத்து நில மோசடி வழக்கில் திமுக புள்ளிகள் கைதாவது திமுக தலைவருக்கு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது போல் தெரிகிறது. 

Friday, July 1, 2011

அட அரசியல்ல இதெல்லாம் சாதரணமப்பா...!

அட அரசியல்ல இதெல்லாம் சாதரணமப்பா...! இந்த என்ற வாசகம் பெரும்பாலோர் அடிக்கடி உச்சரிப்பதாகும். அதை அட்சரம் பிசகாமல் காட்டியுள்ளார் புதுவை முதல்வர் ரங்கசாமி. தேர்தலுக்கு முன்பாக காங்கிரசிலிருந்து விலகிய அவர், என்.ஆர். காங்கிரஸ் என தனிக்கட்சி தொடங்கி, எனது கட்சி யாருடனும் கூட்டணி சேராது என்று சொன்னார். சொல்லிய அடுத்த நாளே அந்தர் பல்டியடித்து அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதாவை சந்தித்து, கூட்டணியும் அமைத்துக் கொண்டார். அப்போதே இவர் மீதான நம்பகத்தன்மை ஆட்டம் காணத் தொடங்கிவிட்டது.

Saturday, April 23, 2011

குஜராத் கலவரத்தில் மோடிக்கு தொடர்பு! ஐபிஎஸ் அதிகாரி குற்றச்சாட்டு

அஹமதாபாத்: கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தை அடுத்து குஜராத் முழுவதும் நிகழ்ந்த கலவரத்துக்கு அந்த மாநில முதல்வர் நரேந்திர மோடியும் உடந்தை என்று மூத்த ஐபிஎஸ் அதிகாரி சஞ்சீவ் பட் குற்றம்சாட்டியுள்ளார்.  இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் அவர் ஏப்ரல் 14-ம் தேதி நேரடியாக பிரமாணப் பத்திரம் ஒன்றை தாக்கல் செய்தார். இது கோத்ரா கலவரம் குறித்து சிறப்பு விசாரணை அமைப்பு நடத்தி வரும் விசாரணை தொடர்பானது என்று அப்போது சஞ்சீவ் பட் தெரிவித்திருந்தார். அதில் தான் கூறியுள்ள விஷயங்கள் குறித்து முழுமையாகத் தெரிவிக்க அவர் மறுத்து விட்டார்.  இந்நிலையில் பிரமாணப் பத்திரத்தில், அவர் கூறியுள்ளதாக சில விவரங்கள் வெளியாகியுள்ளன.

Monday, April 4, 2011

இஸ்லாம் இல்லா உலகம்-ஒரு தொலை நோக்குப் பார்வை!

(டாக்டர் எ.பீ. முகம்மது அலி, பிஎச்.டி, ஐ.பீ.எஸ்(ஓ)

மேற்கத்திய ஏகாதிபத்திய உலகத்தால் இஸ்லாமியரும், இஸ்லாமிய அரசுகளும் சோதனைக்கு ஆளாகி உள்ளனர் என்று இஸ்லாமியர் என்னுவது இயற்கையே! மேலை நாட்டவர் இஸ்லாத்தினை வெறுப்புடனும், விநோதமாகவும், பழைமை வாத கொள்கை கொண்டதாகவும் நோக்குகின்றனர். ஆனால் அந்த இஸ்லாம் இல்லாத உலகம் எப்படி இருக்கும் என்று ஒரு தொலை நோக்குப் பார்வையினை மக்களுக்கு சற்று புரிய வைக்கலாம் என எண்ணுகிறேன்.

Monday, March 28, 2011

லிபியா மீதான அமெரிக்க ஆக்கிரமிப்பு! அதிர்ச்சியூட்டும் உண்மைகள்!!

நன்றி: வினவு
நேட்டோ படைகளின் சீறும் போர்க்கப்பல்கள் மத்தியதரைக் கடலின் நீரைக் கொதிநிலைக்குக் கொண்டு சென்றிருக்கின்றன. உலக ரவுடியாக தன்னைத் தானே நியமித்துக் கொண்டிருக்கும் அமெரிக்காவின் தலைமையில் நேட்டோ படைகள் லிபியாவின் தலைநகர் திரிப்போலியின் மேல் குண்டு வீச்சு நடத்தி வருகின்றன. அதில் வழக்கம் போல அப்பாவி மக்கள் பலர் கொல்லப்பட்டுள்ளனர். கடந்த நாற்பத்தியிரண்டு வருடங்களாக லிபியாவின் சர்வாதிகாரியாய் இருந்து வரும் முவாம்மர் கடாஃபியை எதிர்த்து ஜனநாயகத்துக்காகப் போராடி வரும் ஜனநாயக வீரர்களுக்கு உதவும் பொருட்டு 'மனிதாபமானத்தின்' அடிப்படையில் தான் தாங்கள் இந்தத் தாக்குதலைத் துவங்கியதாக நேட்டோ நாடுகள் அறிவித்துள்ளன.
அமெரிக்க மனிதாபிமானத்தின் கந்தக நெடியை லிபியர்களுக்குப் பரிசளிக்கும் விதமாய்க் கடந்த 19-ஆம் தேதி நேட்டோ நாடுகளின் நாசகாரிக் கப்பல்களில் இருந்து லிபியாவை நோக்கி நூற்றுக்கணக்கான தொமொஹாக் ஏவுகணைகள் பறந்து சென்றன.

Sunday, March 20, 2011

இந்திய முஸ்லிம்களின் அவல நிலையும் - அதற்கான தீர்வும்!!!

  ந்தியநாடு சுதந்திரம் பெற்ற பின்பு இன்றுவரையுள்ள எந்த ஒரு அரசும் இந்திய முஸ்லிம்களுக்கு அவர்களுக்குரிய உரிமைகளை வழங்க எந்த ஒரு முயற்சியும் மேற்கொண்டதில்லை என்பதே உண்மை. இந்திய பாகிஸ்தான் பரிவினையின்போது முஹம்மது அலி ஜின்னா மாத்திரம் பிரிவினைக்கு ஆதரவு அளித்தபோது, மௌலானா அபுல்கலாம் ஆஸாத், ஜாஹிர் ஹுஸைன், பக்ருதீன் அலி அஹமது போன்ற முஸ்லிம் பெரும் புள்ளிகள் இந்திய பாகிஸ்தான் பிரிவினைக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்திய மக்களுடன் கைகோர்த்து கொண்டார்கள்.
தனிமனிதராக நின்ற முஹம்மது அலி ஜின்னா, தான் நினைத்ததைச் சாதித்துக் கொண்டார். ஆனால் இந்திய மக்களுடன் கைகோர்த்த மௌலானா அபுல்கலாம் ஆஸாத், ஜாஹிர் ஹுஸைன், பக்ருதீன் அலி அஹமது போன்ற முஸ்லிம் பெரும் புள்ளிகள் உள்ளடங்கிய இந்திய முஸ்லிம் சமுதாயம் சாதித்தது என்ன என்பதை இன்றைக்கும் நாம் கண்கூடாக கண்டு கொண்டிருக்கிறோம்........

Saturday, March 19, 2011

ஏன் இளைத்தாய் என் எழுச்சிமிகு சமுதாயமே?

(டாக்டர் ஏ.பீ. முகம்மது அலி, பிஎச்.டி, ஐ.பீ.எஸ்.(ஓ)



பேட்டை முதலாளி என்று செல்லமாக அழைக்கப்பட்ட தோல் வியாபாரத்தில் கொடிகட்டிப் பிறந்த கண்ணிய மிகு காயிதே மில்லத் தனது உடல், பொருள், ஆவி அத்தனையும் இஸ்லாமிய சமூகத்திற்காக அர்ப்பணித்து தமிழகத்தில் மட்டுமல்லாது இந்தியாவிலும் தலை நிமிர்ந்து நிற்க வைத்த பெருமை படைத்த அப்பழுக்கற்ற அரசியல் வாதிமட்டுமல்ல நாடடுப்பற்று மிக்க புகழ் மிக்கவர். தமிழகத்தில் மூதறிஞர் ராஜாஜி, பகுத்தறிவு பகலவன் பெரியார், ஏழைப்பங்காளன் காமராஜர் போன்றவர்களுடன் இணையாகப் பேசப்பட்டவர் காயிதே மில்லத் அவர்கள்.
 1967 ஆம் ஆண்டு நான் புதுக்கல்லூரி மாணவனாக இருந்த போது பேரறிஞர் அண்ணா அவர்கள் முதல்வர் பொருப்பினை ஏற்ற போது குரோம்பேட்டை வீடு தேடிச் சென்று வாழ்த்துப் பெரும் அளவிற்கு உயர்ந்தவர் காயிதே மில்லத். தனது நீண்ட மேலாடையில்(ஓவர்கோட்) மெலிந்த உருவமானாலும் உயர்நது விளங்கினாரர்.