பழனிபாபா பதில்

37. "தெற்கே டீகோகார்ஷியா தீவில் அமெரிக்கா கப்பற் படைத்தளம் அமைத்துள்ளது. வடக்கே(?) ஆப்கானிஸ்தானில் ரஷ்யப்படை நிற்கிறது. பாகிஸ்தானிடம் நவீன போர்விமானமும் அணுகுண்டும் உள்ளது. நம் இந்தியாவுக்குச் சொந்தமான பல லட்சம் சதுர (?) மைல்களை சீனா பிடித்துள்ளது. அருணாசல பிரதேசத்தில் முக்கியமான (?) பகுதிகளை சீனா 1988ல் ஆக்கிரமித்துள்ளது. இவைகள் வெளிநாட்டு அபாயங்கள்."

நல்ல Black Mail ஐயரே! கூந்தல் உள்ளவன் அள்ளி முடிகிறான். நீ குடுமி உள்ளவன், குரைத்து ஆவதென்ன? நீ சொல்வது எப்படியிருக்கிறது தெரியுமா? வித்தை காட்டுபவன், கூட்டத்தைச் சேர்த்தப்பின்; அவனுடைய ஆளையே ரத்தக்கலரில் உமிழச்சொல்லி பணம் தாருங்கள், இல்லாவிட்டால் உங்களுக்கும் வாயிலிருந்து ரத்தம் வரும் என்று ஏமாற்றிக் காசு பறிப்பானே! அதைப்போல் உள்ளது.

"சந்திரன் தலைக்கு மேல் உள்ளது; சூரியன் சூடாக உள்ளது; கடல் கொந்தளிக்கிறது; அரபுநாடு பாலைவனம் ஆகிவிட்டது; அடுத்த வீட்டில் கறி சாப்பிடுகிறான்; பக்கத்து வீட்டில் பாயா சாப்பிடுகிறான்; இந்து மதத்துக்கு ஆபத்து; இந்துஸ்தானத்துக்கு ஆபத்து; அய்யய்யோ கஜினி-கோரி கொள்ளையடித்து விட்டனர்; இந்தியாவின் கக்கூஸிலிருந்த கற்களை காலிஸ்தான்காரன் கருமம் பிடித்த ஆண்டில் பிடித்த ஆண்டில் பீடை பிடித்த தேதியில் கொள்ளையடித்து விட்டான்; பறக்கும் தட்டிலிருந்து வந்து அழகிய பெண்களை படுக்கையறைக்குத் தூக்கிப்போய்விட்டார்கள்; தார்மீக தர்மம், பூஜை, புனஸ்காரம், யோகம், தெருப்புழுதிகள் அழிகின்றன; காரணம், சீனாவில் சிறுத்தை குட்டி போட்டு விட்டது; அரபுக்காரன் வீட்டில் பூனை குட்டி போட்டுவிட்டது. அய்யய்யோ ஆபத்து! ஆயிரம் ஆண்டு காப்பாற்றிய கழுதைக்கு ஆபத்து! இந்துக்களே, என் (பார்ப்பான்) தலைமையில் ஒன்று திரளுங்கள்; என்னைத் தலைவனாக்கி - சங்கராச்சாரியை செயலாளராக்கி விட்டு நீங்கள் போராடுங்கள்; ஊருக்கெல்லாம் மனைவி இருக்கிறது; எங்களுக்கு வேண்டாமா? போப் ஆண்டவர் வருகிறார்! ஐயய்யோ! தொழுநோய் இல்லம் திறக்கிறார்; இதனால் தொன்றுதொட்டு வரும் தொழுநோய் ஒழித்தால் அருணகிரிநாதரின் அப்பன், பாட்டன் பெயரைச் சொல்லி யார் பிச்சை எடுப்பார் என்று பிதற்றுவது போலுள்ளது.

தெனாலிராமனாவது அறிவோடு செய்ததாக நம்பவைத்தீர். உனக்கு அதுவும் இல்லை ஐயரே! சீனா ஆக்கிரமிப்பு நேரு (பார்ப்பனர்) செய்த முட்டாள்தனத்தால் தானே! தலாய்லாமா விஷயத்தில் தலையிட்டதால் அது நடந்தது. அவரது மகளால் நடந்தது பாகிஸ்தான் - பங்களாதேஷ் யுத்தம். அருணாசலபிரதேசத்தில் பல லட்சம் சதுர மைல்கள் ஆக்கிரமிப்பு நடந்தபோது பிரதமர் யார்? ராஜீவ் (பார்ப்பனர்)- ராணுவ மந்திரி யார்? K.Cபந்த் (பார்ப்பனர்)- ஜனாதிபதி வெங்கட்ராமன் (பார்ப்பனர்)- வெளியுறவு மந்திரி நரசிம்மராவ் (பார்ப்பனர்).

நமது ராணுவத்தை இலங்கைக்கு ஏன் அணுப்பினாய் - புடுங்கவா? உனது வாதம் சரியென்றாலும் கூட நேருவால் பல லட்சம் - சாஸ்திரியால் பல லட்சம்- இந்திராவால் பல லட்சம் சதுர மைல்களை இழந்தோம். போதாக்குறைக்கு கச்சத்தீவை இலங்கைக்கு தாரை வார்த்தார் இந்திரா. அப்போது நீ என்ன கூறினாய்? இந்திராவும் ஜெயவர்த்தனேயும் ஒரே இனம் ; மூக்கைப் பார்! நீண்டிருக்கும் என்றாய். உன் பார்ப்பன ஏடுகளும் துதிபாடின.

ஜெயலலிதா (பார்ப்பனத்தி) ராஜீவுக்கு அத்தை மகள் ஆகிறது என்று ஆராய்ச்சி செய்தாய். ஜானகியும் பார்ப்பனத்தி- ஜால்ரா அடித்தாய். ஆக, பார்ப்பனர்களால்தான் இந்தியா பல லட்சம் சதுர மைல்களை இழந்தது. இனியும் இழக்காதிருக்க, பார்ப்பானை நாடு கடத்தினால் எல்லாம் சரியாகிவிடும்.

38."நேபாளத்துக்குள் 250 லாரிகளில் நவீன ரக ஆயுதங்களை சீனா அனுப்பியுள்ளது."

நேபாளம் இந்து நாடு- புண்ணிய பூமி - புலக்கடை என்று புகழ்ந்து கூறுய சங்கராச்சாரியும் நீயும் அங்கு சென்று கூடிக் குலாவினீர்கள். இன்று பார்! யார் துரோகி என்று! அடுத்த பதிலையும் படி! அடுத்து அந்தமானுக்கு போவதற்கு தயாராக இரு!

39. "நமது நாட்டுக்குல்ளேயே அமெரிக்க-ரஷ்ய- சீன-பாகிஸ்தான் உளவாளிகள் உண்டு. தக்க நேரத்தில் உல்நாட்டுப் போர் துவங்க உதவுவார்கள்."

ஐயருக்கு ஞாபக மறதி! கூமர் நாராயணன் உட்பட 7 பார்ப்பனர்கள் வெறும் 10 அமெரிக்க டாலருக்குஅ கூட ராணுவ ரகசியம் விற்றத்னால் தார்மீக பொறுப்பெற்று பதவி விலகினர். முன்னால் பிரதமர் ராஜீவின் தனிச்செயலர் அலெக்ஸாண்டர். பின்னர் லண்டன் தூதுவர் பதவி- இன்று தமிழக ஆளுனர். கைது செய்யப்பட்ட கூமர் நாராயணன் கோஷ்டி குளுகுளு ஹோட்டலில்; இதுபோன்று 13 முறை நடைபெற்றதற்கு பார்ப்பனரே கையாள்.

முன்னாள் ராணுவ தளபதி சங்கட்ஜி (பார்ப்பனர்) தான் போபர்ஸ் ஊழலுக்கு உடந்தை; இன்று நாடகமாடி ஊட்டியில் உல்லாச வாழ்வு!

எங்கலைப் பார்த்து தேசத்துரோகி என்று சொல்வதற்கு உனக்கு என்ன தகுதி இருக்கிறது?

இந்து- முஸ்லிம் ஒற்றுமை வேண்டும் என்றதற்காகக் காந்தியாரைச் சுட்டுக்கொன்ற கூட்டமல்லவா நீ! அவரைக் கொன்றது 1/2 டஜன் RSS பார்ப்பனர்கள் என்பது எவ்வளவு உண்மை என்பதைப் படித்துப்பார்!

இந்து - முஸ்லிம் ஒற்றுமையின் மூலம் சுதந்திரத்திற்கான போராட்டத்தை நடத்த வேண்டும் என்ற காந்தியாரின் கொள்கையை RSS கூட்டம் ஆரம்பகாலத்தில் இருந்தே கடுமையாக எதிர்த்து வந்தது என்பதை மறுக்க முடியாது.

காந்தியார் இந்துக்களை கோழையாக்கிவிட்டார் என்று அவர்கள் தொடர்ந்து குற்றம் சாட்டி வந்தனர். காங்கிரசுக்குள்ளே காந்தியார் எதிர்ப்பு உணர்வை ஏற்படுத்தும் முயற்சிகளில் இடைவிடாது ஈடுபட்டு வந்திருக்கின்றனர்.

RSSபார்ப்பனக் கூடாரம் காந்தியார் மீது எப்படிப் பகைமை கொண்டிருந்தது என்பதை பியாரிலால் (காந்தியின் செயலர்) தனது நூலில் கீழ்க்கண்டவாறு விவரிக்கிறார்;

"இந்து ராஷ்டிரம் அமைய வேண்டும் என்ற முரட்டுத்தனமான கூட்டம் மராட்டிய மாநிலத்தில் இருந்தது. அவர்கள் பார்ப்பனப் பிற்போக்காளர்கள். காந்தியாருக்கு எதிராக 25 ஆண்டுகாலம் இடைவிடாத பிரச்சாரத்தை அவர்கள் செய்து வந்தனர். காந்திஜியின் செல்வாக்குவளர்வது- அவர்களுக்கு விரக்தியை உண்டாக்கியது. இந்தக்கூட்டம் தான் 1934ல் புனேயில் காந்திஜி மீது வெடிக்குண்டு வீச முயற்சிசெய்தது. அப்போது காந்திஜி தீண்டாமை எதிர்ப்புப் பிரச்சாரம் செய்துகொண்டிருந்தார்.

இப்போது அவர்கள் காந்தியை கொலை செய்திருக்கிற திட்டம்- அவர்களால் மிகவும் திட்டமிடப்பட்ட ஒன்றாகும். அதற்கு சரியான இளைஞரை தேடிப்பிடித்து அதற்கான பயிற்சிகலைக் கொடுத்து திட்டமிட்டு இதனைச் செய்திருக்கிறார்கள். அவர்கள் காலில் போட்டிருக்கும் ஷுக்களுக்குள் காந்தி, நேரு உட்பட பல காங்கிரஸ் தலவர்களின் படம் இருக்கும். அந்தப்படத்தை வைத்து-துப்பாக்கியால் சுட்டு, பயிற்சி பெறுவது அவர்கள் வழக்கம்" என்று பியர்லால் மிகத்தெளிவாக தனது நூலில் எழுதியிருக்கிரார். (பக்கம் 751)

காந்தியார், பார்ப்பனர்களின் திட்டமிட்ட சதியால் படுகொலை செய்யப்பட்ட அந்த நேரத்தில்- மராட்டிய மக்கள் எப்படிப்பட்ட உணர்வுகளைக் கொண்டிருந்தார்கள் என்பதை புரிந்துகொண்டால் கூட்டத்தின் பார்ப்பனத் தன்மையினை தெளிவாகவே அடையாளம் கண்டுகொள்ளமுடியும்.

மராட்டிய மண்ணில்- காந்தியார் கொலை செய்யப்பட்டார் என்ற செய்தி வந்தவுடன் பார்ப்பனர்களுக்கு எதிராக பார்ப்பனரல்லாத மக்கள் வீறுகொண்டு எழுந்தார்கள்.

கொலை செய்த 'கோட்சே'வுக்கும்- தங்களுக்கும் ஒரு சம்பத்தமும் கிடையாது என்று R.S.S. காரர்கள் சாதிக்க முயன்ராலும், மராட்டிய மக்களுக்கு அந்த மண்ணிலே உருவான இயக்கத்தின் பின்னனிகள் புரியாதா? எனவே RSS காரர்களுக்கு எதிராக மட்டுமல்ல- பார்ப்பனர்களுக்கு எதிராகவே- மராட்டிய பார்ப்பனரல்லாத சமுதாயம் கொதித்து எழுந்தது!

தமிழ்நாட்டுப் பார்ப்பன ஏடுகள் இந்தச் செய்திகலை எல்லாம் அப்போது திட்டமிட்டு இருட்டடிப்பு செய்துவிட்டன.

மராட்டிய மாநிலத்திலே மிகப் பெரிய கொந்தளிப்பு எழுந்த அந்தக் காலக்கட்டத்திலே அந்த மாநிலத்தில் உள்துறை அமைச்சராக இருந்தவர்- துவாரகா பிரசாத் மிஸ்ரா! அவரும் ஒரு பார்ப்பனர்தான்.

அப்போது, மத்திய அரசின் உள்துறை அமைச்சராக இருந்த சர்தார் பட்டேல், அவரின் நம்பிக்கைக்குப் பாத்திரமான இவர்- அன்றைய காங்கிடஸ் கட்சியிலே மிகப் பெரிய புள்ளி!

இவர் " LIVING AN ERS" என்ற தலைப்பில் தனது சுய சரிதையை எழுதியிருக்கிரார். அது இரண்டு பகுதிகளாக வெளிவந்திருக்கிறது. (விகாஸ் பதிப்பகத்தின் வெளியீடு)

காந்தியார் கொலை செய்யப்பட்டார் என்ற செய்தி வந்தவுடன் மாராட்டிய மாநிலத்திலே RSS பார்ப்பனர்களுக்கு எதிராக நடந்த மிகப்பெரிய கலவரத்தை அவர் தனது சுயசரிதையின் இரண்டாவது தொகுப்பில் விவரித்திருக்கிறார்.

RSS காரர்களை கைது செய்து கலவரத்தை அடக்குவதற்கு உத்தரவுகளைப் பிறப்பித்தவர் என்ற முறையில் அவருடைய கருத்துக்கு மிக முக்கியத்துவம் உண்டு.

நான் RSS பற்றி சில ஆதாரபூர்வமான தகவல்களை வெளியிட்டு சில உண்மைகளை வெளிச்சத்துக்குக் கொண்டு வர விரும்புகிறேன். காரணம் இந்தப் பிரச்சினையில் எனக்கு நேரடியான தொடர்பு உண்டு.

காந்தியார் கொலையில் ஒரு அரை டஜன் மராட்டியப் பார்ப்பனர்களுக்கு பங்கு உண்டு; அதன் காரணமாக ஏராளமான பார்ப்பனர்கள் கடும் விலைகொடுக்கு வேண்டியதானது. மக்கள் தொகையில் 4 சதவீத பேர் மட்டுமே உள்ள பார்ப்பனர்கள் மராட்டியத்தில் எல்லா துறைகளிலும் ஆதிக்கம் செலுத்தி வந்தனர். அந்தக் காலத்தில் மகாராஷ்டிரர்கள் என்று சொன்னாலே அது பார்ப்பனர்களைத்தான் குறிக்கும். பெரும்பாலன பார்ப்பனரல்லாத மக்கள் 'மராத்தா' என்று அழைக்கப்பட்டனர். தேசத்தந்தை காந்தியடிகளை கோட்சே சுட்டுக்கொன்ற செய்தி பரவியவுடன் பார்ப்பனரல்லாத மக்கள் ஆத்திரம் கொண்டனர். பார்ப்பனர்களுக்கு எதிராக திரண்டு எழுந்தனர்.

அப்போது RSS தலைவர் 'சர் சங் சாலக்' எம்.எஸ்.கோல்வார்க்கர் சென்னையில் இருந்தார். அங்குதான் அவருக்கு இந்தச் செய்தி கிடைத்தது. உடனே அவர் RSS தலைமை அலுவலகம் இருக்கும் இடமான நாக்பூருக்கு விரைந்தார். தலைமை அலுவலகத்தில் கோல்வார்க்கர், நிர்வாகக்குழு கூட்டத்தை நடத்திக்கொண்டிருக்கிறார் என்பதை கேள்விப்பட்ட பார்ப்பனரல்லாதவர்கல் அந்த அலுவலகத்தை சுற்றி சூழ்ந்து கொண்டுவிட்டனர். அலுவலகக் கட்டிடத்தையே தீ வைத்து கொளுத்த திட்டமிட்டனர். போலிஸ் ஐ.ஜி உடனே என்னுடைய அலுவலத்துக்கு விரைந்து வந்தார். அலுவலகத்துக்குள்ளே இருக்கும் 40 பேரும் தீவைத்துக் கொளுத்தப்பட்டு விடுவார்கள் என்றார்.

RSSகாரர்களின் சிலர் எனக்கு நண்பர்களாக இருந்தாலும் அரசியலில் எனக்கு எதிரிகளாகவே இருந்தனர். பல வகுப்புவெறி பார்ப்பனர்கள் என்னைத் தீர்த்துக்கட்டப் போவதாக பல கொலைமிரட்டல் கடிதங்களையும் எழுதினார். இருந்தாலும் அந்தப் பகுதியின் உள்துறை அமைச்சர் என்ற பொறுப்பை ஏற்றிருக்கும் நான் எனது கடுமையான அரசியல் எதிரிகளாக இருந்தாலும் அவர்களை சாக விட்டுவிடக்கூடாது. எனவே RSSகாரர்களை கைது செய்வதன் மூலம்தான் பார்ப்பனரல்லாத மக்களிடையே அமைதியை ஏற்படுத்த முடியும் என்று கருதி அவர்களைக் கைது செய்ய உத்தரவிட்டேன்.

கோல்வாக்கரும் அவரது சகாக்களும் கைது செய்யப்பட்டு நாக்பூர் சிறைக்கு அப்போதுதான் கொண்டுபோய் இருப்பார்கள். அப்போது எனக்கு இந்துமகா சபைத் தலைவர் எல்.வி.பரஞ்சிபேயிடமிருந்து டெலிபோன் வருகிறது. ஒரு பொதுக் கூட்ட மேடையிலே என்னோடு மோதியவர் இவர். "ஒரு பெரிய கூட்டம் என் வீட்டை சூழ்ந்துகொண்டு தாக்குகிறது; என்னை காப்பாற்றுங்கள்" என்று டெலிபோனில் அவர் சொன்னார். நீங்கள் உயிர் பிழைக்க வேண்டுமானால் அதற்கு இப்போது பாதுக்காப்பான ஒரே இடம் நாக்பூர் சிறைதான் என்று சொல்லி அவரைக் கைது செய்ய உத்தரவிட்டேன்.

பிறகு நான், காந்தியடிகளின் அஸ்தியை நர்மதை ஆற்றில் கரைப்பதற்கு டில்லிக்கு சென்றுவிட்டேன். அந்த நேரத்தில் நாக்பூரில் பார்ப்பனரல்லாதாரின் எதிர்ப்புக் கிளர்ச்சி உச்ச கட்டத்திற்குப் போய்விட்டது. உடனே புறப்பட்டு வருமாறு எனக்கு அவசரச் செய்தி வந்தது. நாக்பூருக்கு சென்றபோது இதற்குமுன் எப்போதும் நடந்திராத அளவுக்கு கலவரங்கள் நடந்துகொண்டிருப்பதைப் பார்த்து அதிர்ச்சியுற்றேன்.

காந்தியடிகளைப் பார்ப்பனர்கள் கொலை செய்துவிட்டார்களே என்ற ஆத்திரத்தில் பார்ப்பனர்களின் வீடுகள் தாக்கப்பட்டன. பார்ப்பனரின் கல்வி நிலையங்கள் தீ வைத்து கொளுத்தப்பட்டன. பார்ப்பன நிறுவனமான ஜோஷி உயர் நிலைப்பள்ளி தீயில் எரிந்தபோது, தீயை அணைக்க வந்த தீயணைக்கும் படை வர முடியாமல் பார்ப்பனரல்லாத மக்கள் கூட்டத்தால் திருப்பி விரட்டப்பட்டது; அதற்குப்பின் கண்டதும் சுடும் உத்தரவு போலிசாருக்குப் பிறப்பிக்கப்பட்ட பிறகுதான் நிலைமை ஓரளவு கட்டுக்குள் வந்தது.

பார்ப்பனர்களுக்கு எதிராகத் திரண்ட பார்ப்பனரல்லாதார்களில் காங்கிரஸ்காரர்களே மிக அதிகமாக இருந்தனர். காங்கிரஸ் கட்சியின் முக்கிய பொறுப்புகளில் இருந்த பலரும் இந்த யுத்தத்தில் இறங்கினர். கலவரத்தை ஒட்டி கைது செய்யப்பட்டவர்களில் 100க்கும் அதிகமானவர்கள் காங்கிரஸ்காரர்கள்!!

காந்தியடிகள் கொலையைத் தொடர்ந்து - பார்ப்பனர்களுக்கு எதிர்ப்புத் தீவிரமானது. நாக்பூர், பேரார் ஆகிய இடங்களில் காங்கிரசார் மாநாடு கூட்டினர். அங்கே பேசிய பேச்சு - ரகசிய புலனாய்வுத் துறை மூலம் எனக்குக் கிடைத்தது. "காந்தியாரைக் கொலை செய்தது ஒரு பார்ப்பனர். எனவே இந்தப் பகுதியின் நிர்வாகப் பொறுப்பு எந்தப் பார்ப்பனரிடமும் இருக்கக்கூடாது. மத்திய அரசிலே பார்ப்பன அமைச்சர்கள் இருக்கிறார்கள். இது காங்கிரஸ் கட்சிக்கே மிகப்பெரிய சவாலாகும்" என்று அந்தக் கூட்டத்திலே காங்கிரசார் பேசினர்.

தொடர்ந்து பிப்ரவரி 4ம் தேதி RSS தடை செய்யப்பட்டது.

நாட்டின் பல பகுதிகளில்RSSகாரர்கள் வன்முறையில் இறங்கி கலவரத்தை உருவாக்கிவருகிரார்கள். அரசு இதைத் தடுப்பதற்காக அந்த அமைப்பை சட்டவிரோதமாக அறிவிக்கிறது" என்று தடை உத்தரவில் குறிப்பிட்டிருந்தது.

தடையை எதிர்த்து கிளர்ச்சிகள் நடத்துமாறு கோல்வாக்கர் RSS காரர்களுக்கு கடிதம் எழுதினார். RSSகாரர்களும் ஆங்காங்கே கிளர்ச்சிகளை நடத்தினார். அதே நேரத்தில் அன்றாடம் பார்ப்பனர் எதிர்ப்புக் கூட்டங்களும் நடந்து கொண்டே இருந்தன. கோல்வாக்கரைத் தூக்கில் போடு என்ற முழக்கங்கள் வீதிகள் முழுவதும் எதிரொலித்தன.

ஒரு பக்கம் RSS காரர்கள் போராட்டம் நடத்திக்கொண்டிருந்தாலும் - இன்னொரு பக்கம் கோர்வாக்கர் அரசாங்கத்திடம் மனு போட்டுக்கொண்டே இருந்தனர். உள்துறை அமைச்சர் பட்டேலுக்கும் கோல்வாக்கருக்கும் கடிதப் போக்குவரத்துக்கள் நடந்தன. அவ்வப்போது கைதான RSS காரர்கள் விடுதலை செய்யப்பட்டாலும் தடை நீக்கம் செய்யப்படவில்லை." - இவ்வாறு அன்றைய சூழ்நிலையை துவாரகா பிரசாத் மிஸ்ரா தனது சுயசரிதையில் படம்பிடித்துக் காட்டுகிறார்!

இந்தக் கருத்துக்கள் விளக்குகின்ற உண்மைகள் என்ன? காந்தியார் கொலையில் அரை டஜன் RSS பார்ப்பனர்கள் தொடர்பு கொண்டிருந்தார்கள் என்பதே!

இன்னும் சரித்திரம் வேண்டுமா ஐயரே?

அன்று தொட்டு இன்று வரை நாட்டில் துப்பாக்கிச்சூடு என்பது மலிந்து சிந்துக்கும் இந்துக்கும் தகராறாகி முடிவில் தினம் 5 இந்துக்கள் வீதம் சீக்கியன் எமனுலகு அனுப்புகின்றான். RSS வாடை இன்று பஞ்சாபில் இல்லை. அங்கு இருந்து குடிபெயரும் பார்ப்பான் கும்பகோணம் வர தமிழகம் பஞ்சாபாக மாறுகிறது - காரணம் பார்ப்பனரே!

பிறகு கடைசி 20வது பக்கத்தில் சித்தாந்தம் பேசுகிறாய். மகாந் சித்தர் என்று வேதாந்தம் பேசி - திராவிட, ஆரிய வாதத்தை ஒழிப்போம் என்கிறாய் (அப்போதுதான் நீ எங்களவனில் கலக்க முடியும்). அதைக் கட்டுக்கதை என்கிறாய்! முடிவில், பாரதம் - ஹிந்துஸ்தாந் ஹிந்துவுக்கு ஹிந்து பூமி- ஹிந்து ராஷ்டிரம் என்கிறாய்!

இந்தியா, "ஹிந்து ராஷ்டிரம்" ஆக வேண்டும் என்று கூறும் ஐயரே! உலகில் இருந்த ஒரே இந்து ராஜ்ஜியத்தின் அலங்கோலத்தை உங்களவரே கூறுவதைப் பாரும்! இந்திய வரலாற்றில் இதுவரை முஸ்லிம் அல்லாத எந்த மதவாதியின் ஆட்சியும் 30 ஆண்டுகளுக்குமேல் நீடித்ததே இல்லை. இந்த வரலாற்று உண்மைகூட புரியாது வாயைக் கிழித்துக்கொண்டுள்ளீரே ஐயரே!

"ஜனநாயகம் கோரும் கிள்ர்ச்சி, மன்னராட்சியைக் குறிவைத்து தாக்கியது. இது முன்னெப்போதும் நடந்திராத விஷயம் காத்மண்டுவில் தடிக்கி விழுந்தால் மன்னர் குடும்பத்தை கேலி செய்யும் கார்ட்டுன்கள் ஒரு கோஷம்; பம்பா தேவி ஹாய் ஹாய், வீநெந்திரா பை பை! (பம்ஃபா தேவி ஒழிக, வீரேந்திரா வெளியேறு) அரசி ஐஸ்வர்யா தேவியை ஏன் பம்ஃபா தேவி என்கிறார்கள்? மக்கள் தரும் விளக்கம் இது 'பம்ஃபா தேவி என்ர பெயரில் நிறைய ரகசிய பாங்க் கணக்கு வைக்கப்பட்டிருக்கிறது. அது அரசியின் புனைப்பெயர்.

பிலிப்பைந்சின் ஊழல் ராணி இமெல்டா மார்க்கோஸ் போன்ற ஒரு இமேஜ் அரசிக்கு உண்டு என்பது சரிதான். அரசிதான் 'சமாஜிக சேவா சமன்வய பரிஷத்' என்ர அமைப்பின் தலைவி இதன் அனுமதியில்லாமல் எந்தத் தொழில் அமைப்போ, சமூக அமைப்போ உருவாகமுடியாது. உண்மையில் நேபாளத்தை ஆளுவது அரசிதான் என்றே மக்கள் நம்புகிறார்கள். மன்னரின் வாய் பூட்டப்பட்டு, சாவி அரசி கையில் உள்ள கார்ட்டூன்களை எல்லா இடங்களிலும் பார்க்கலாம். சமீப நாட்களில் இந்த அரச தம்பதியை மிஸ்டர் அன் மிஸஸ் சொஸஸ்கு (ருமேனியாக் கொடுங்கோலர்) என்று குறிப்பிடும் கார்ட்டூன்களும் முளைத்தன.

பல ஊழல்களில் மன்னர் குடும்பத்தினர் பெயர் அடிபட்டது போதைப் பொருள் வியாபாரம், கடத்தல், அந்நியச் செலவாணி மீறல் என்று இப்படி ஊழல்களையெல்லாம் அம்பலப்படுத்த உதவியவர் மன்னரால் அரண்மனைச் சலுகைகள் பறிக்கப்பட்டு பிரிட்டனில் வசிக்கும் மன்னரின் சகோதரரான தீரேந்திரா என்று சொல்லப்படுகிறது.

உலகின் ஒரே இந்து ராஜ்யத்தை ஆளுகிற நபர்களின் அந்தஸ்து என்ன கதி ஆகியிருக்கிறது என்பதற்கு அருமையான எடுத்துக்காட்டாக ஒரு சம்பவம் நடந்தது. காத்மாண்டுவில் ஒரு பெரிய விளம்பர போர்டில் ஆர்பாட்டக்காரர் ஒருவர் ஏறினார். அதில் இருந்த அரசு முத்திரையை அடித்து உடைத்தார். இதை போலிஸ்காரர்கள் பார்த்துக்கொண்டே நின்றார்கள்." நன்றி இந்தியா டுடே ஏப்.21-மே5, 1990

மதச்சார்பற்ற இந்தியாவை ராம.கோபலனும் அவன் எடுபிடிகளும் 'ஹிந்துஸ்தான்' என்றால்- பஞ்சாபி கேட்கும் காலிஸ்தான் நியாயமே! பிறகு தேவர்கள் தேவர்ஸ்தான், பறையர் பறஸ்தான், கவுண்டர் கவுண்டர்ஸ்தான், முஸ்லிம்களுக்கு என்ன கபர்ஸ்தானா (இடுகாடா)? இந்த நிலையை தவிர்க்கவே 'ஜிஹாத் அமைப்பு.'

மதச்சார்பற்ற நாடு என்பதே ஏமாற்றுவேலை. இந்தியாவின் மிக உயர்ந்த பரிசு 'தர்மவீர சக்ரா' அப்படி என்றால் என்ன என்று எனது அமெரிக்க நண்பர் கேட்டப்போது தர்மன் என்ற ஒருவன் மனைவியை வைத்து சூதாடினான். அதுவும் 5 பேருக்குப் பத்தினி திரெளபதி எனக் கூறும்போது கூனிப் போகிறேன். அடுத்து 'அர்ச்சுனா' அவார்டு! அர்ச்சுணன் யார்? ஐந்து ஷேர் ஹோல்டரில் (Share Holder) அவனும் ஒருவன். சூத்திரன் - ஏகலைவன் - வில்வித்தையைக் கற்றுக் கொண்டதால்- அவனுடைய கட்டைவிரலை குருதட்சணையாக கேட்டு வர்ணாசிரமப்படி நடந்துகொண்ட பார்ப்பான் 'துரோணாச்சாரி' பெயரில் விருது! இதுவா மதசார்பற்ற நாடு? திரிசூலன் விமான நிலையம், ஆரியப்பட்டா ராக்கெட் இப்படி எதிலும் கலப்படமாகும் 'பார்ப்பானீயம்' ஒழியும்வரை இந்நாட்டை நேசிக்க மனம் வராது.

இந்தியாவின் 'அரசியல் சாசன சிற்பி' ஒரு அரிஜனர் என்பதற்காகவே அந்த மாபெரும் மனிதர் டாக்டர் பாபா சாகிப் அம்பேத்காரை இதுவரை மூடிமறைத்தீர்கள். இன்று அவர் இறந்து 34 ஆண்டுகள் கழித்து அவருடைய படத்தை வி.பி.சிங் பாராளுமன்ரத்தில் திறந்து வைத்தார். 13.4.1990ல் அவருக்கு 'பாரத ரத்னா' விருது வழங்கினார்கள். எத்தனை காலன்கடந்த செயல் இது! அவரும் வீராமாய் சுதந்திரத்திற்கு போராடினார். ஆனால் அன்று அவரை RSS வெறுத்தது. இன்று அவருக்கு நூற்றாண்டு விழா! உடனே தாழ்த்தப்பட்ட இனத்தின் மீது RSS க்கு பாசம் (?) வருகிறது.

டாக்டர் அம்பேத்கர் இவர்களைப்பற்றி என்ன கூறினார்? 'இந்துமதப்புதிர்' எனும் நூலில் ராமனைப் பற்றியும் சம்புகன் என்ற தாழ்த்தப்பட்டவனை, வர்ணாசிரம தர்மத்தை மீறி, சூத்திரனாகிய அவன் தவம் செய்த காரணத்தினால் ஒரு பார்ப்பானின் மகன் இறந்துவிட்டதாக எவ்வித நியாயமுமின்றி ராமன் சம்புகனை படுகொலை செய்த பாவத்தைப் பற்றியும், கிருஷ்ணன் செய்த அக்கிரமங்கள், அநியாயங்கள் பற்றியும் எழுதிய அந்த நூலை மராட்டிய மாநில அரசே வெளியிட்டதை பார்ப்பனர்கள் தடை செய்யக் கோரியும் பலன் இன்றிப் போனது. அவர் இந்து மதத்தின் மானக்கேடான விலங்கிலிருந்து வெளியேறி, விடுதலைப் பெற்று 14.10.1956ல் பல லட்சம் மக்களுடன் புத்த மதத்திற்கு மதம் மாறினார். 15.10.1956 அன்று நாக்பூரில் பல லட்சம் மக்களிடையே பேசியதை 'பிரபுபாரத்' இதழ் (அக் 27, 1956ல்) வெளியிட்டது. "Why go for Convertion" - "மதமாற்றம் ஏன்?" எனும் தலைப்பில் பேசி இப்போது நூலாகவே வெளிவந்துள்ளது. (D.S.A 324வது தெரு, வெங்கடேஸாபுரம் புது காலனி, அம்பேத்கர் கல்லூரி சாலை, சென்னை)

டாக்டர் அம்பேத்கர் இந்து மதத்தின் இழிகுணங்களை அதன் மூலம் தோலுரித்துக் காட்டுகிறார்-

" இந்நாட்டில் தொழுநோயாளிக்கு இருக்கும் மரியாதை கூட அரிஜன மக்களுக்கு இல்லை." பக்கம் 22

"அரிஜனங்களிலிருந்து இஸ்லாம், கிரிஸ்துவராக மாறியவர்க்குக் கூட சமத்துவம் கிடைக்கிறது." பக்கம் 22
"இஸ்லாம், கிறிஸ்துவம் மனிதாபிமானத்தைத் தம் மதங்களின் மூலாதாரமாகக் கருதுகின்றன. ஒருவரும் மற்றவரை அவமதிக்கக்கூடாது. சமத்துவமின்றி யாரையும் நடத்தக்கூடாது. சமத்துவமின்றி யாரையும் நடத்தக்கூடாது. மனிதாபிமானமே இம்மதங்கள்." பக்கம் 23

" இவ்வித போதனைகள் இந்து மதத்தில் இல்லை. ஒரு மனிதனின் மனிதாபிமான உணர்வுக்கு மதிப்பளிக்காத மதத்தால் என்ன பயன்? அதில் தொடர்வதில் பலன் என்ன? பக்கம் 23

"இந்த இந்துக்கள் மிகக் கொடுமையான மனிதர்கள். அவர்களுடைய சரிசனையும் வெளிக்காரியங்களும் இரு மாறுப்பட்ட துருவங்கள். அவர்கள் நாவிலே ராமனையும், கையில் கூர்வாளையும் வைத்திருப்பார்கள். யோகியைப்போல் பேசி கொலைகாரனைவிட கோரமாய் நடப்பார்கள்." பக்கம் 24

"பண்டைய மதம் என்பதால், ஒருவன் அம்மதத்தில் தொற்றிக்கொண்டிருக்கவேண்டும் என்று ஒரு முட்டாள் மட்டுமே சொல்லமுடியும். அறிவுஜீவி இதை ஏற்க மாட்டான். நீங்கள் வாழும் சூழ்நிலையிலேயே வாழுங்கள் என்பது விலங்குகளுக்கு பொருந்தும். மனிதனுக்குப் பொருந்தாது. மனிதனுக்கும் மிருகத்துக்கும் உள்ள வேறுபாடு, மனிதன் மேன்பாடு அடையக்கூடியவன்; ஆனால், விலங்கு அப்படிப்பட்டதல்ல, மாற்றமில்லாது மேம்பாட்டை உண்டாக்க முடியாது. மத மாற்றம் ஒரு மேம்பாடு." பக்கம் 35

"இருக்கின்ற் சுத்ந்திரத்தைப் பயன்படுத்தி அரிஜனங்களின் இளைய தலைமுறையினர் தங்களை விடுவித்துக் கொள்ளாவிட்டால் (இந்துமத சங்கிலி விலங்கை உடைக்காவிட்டால்) எதிர்காலத்தில் இவன் கயவன், சுயநலவாதி, அடிமை என்று இம்மண்ணில் பழிக்கப்படுவர்." பக்கம் 34

"இறைவன் எங்கும் எதிலும் உள்ளான் என்பார்கள். ஆனால் மிருகத்தைவிட கேவலமாய் மனிதனை நடத்துவார்கள். இந்த இந்துக்களுடன் சேர்ந்திருக்காதீர்கள். இவர்கள் மிகக் கொடிய வஞ்சனையாளர்கள். எறும்பிற்கு சர்க்கரை உணவிடுவர். ஆனால், தாழ்குடிமகன் தண்ணிர் குடிக்க எடுக்க தடைவிதிப்பர். இவர்களால் உங்கள் தன்மானத்தை இழந்தீர்கள்." பக்கம் 24
"இவர்களிலிருந்து விடுபட ஒரே வழி உங்களை பின்னிப் பிணைந்துள்ள இந்துமத சங்கிலியை அறுத்து எறிந்துவிட்டு வெளியேறுவது ஒன்றே சிறந்த வழி என்று நான் உறுதியாகக் கூற முடியும்." பக்கம் 25

"சட்டப் பாதுகாப்பு வீண்; அது என்னவெனில், ஒரு சிறைக்கைதி சங்கிலிகளிலிருந்து விடுபடுகிறான்." பக்கம் 26

"மகார் இனத்திலும் தீண்டாமை உண்டு என்று இந்து துவேஷிகள் கூறுவர்; அதைக் கற்றுக்தந்தது யார்? கற்பித்தவன் குற்றவாளியே ஒழிய கற்றுக்கொண்டவன் அல்ல!" பக்கம் 29

"இந்துமத விலங்கை அறுத்தெறிவது அவசரமானது - அவசியமானது." பக்கம் 28

"தீண்டத்தகாத மக்களின் தீண்டாமை ஒழிய மதமாற்றமே மாபெரும் மருந்து." பக்கம் 39

"சாதி ஒழியாது; கொடிய விஷம் அமிர்தமாகாது." பக்கம் 39

"சமபந்தி போஜனம், கலப்புத் திருமணங்களால் தாழ்வு ஒழியாது." பக்கம் 39

"இந்து மதம் உங்கள் முன்னேற்றத்துக்கு பல திசைகளிலும் முட்டுக்கட்டையாய் உள்ளது; உங்கள் எண்ணச் சுதந்திரத்தை மூட்டைகட்டி முடக்கிப்போட்டு உங்களை நிரந்தர அடிமையாக்கிவிட்டது; வெளியுலகில் கூட நீங்கள் அடிமைகளாய் சித்தரிக்கப்படுகிறீர்கள்; நிங்கள் சுதந்திரம் பெற கட்டாயம் மதம் மாற வேண்டும்." பக்கம் 28

இதைப்போல் லட்சக்கணக்காண கருத்துக்களை கருத்துக்களை டாக்டர் அம்பேத்கர் கூறியுள்ளார். இதனால் தான் பார்ப்பனர்கள் அவரை இத்தனை காலமாகப் புறக்கணித்து பாரத ரத்னாவை நிறுத்தி வைத்திருந்தனர்.

இந்து மதக் கோட்பாடுகள் மிகப் புனிதமானவையாம்! போற்றத்தகுந்தவையாம்! இஸ்லாம், கிறிஸ்துவ மதங்கள் மோசமானவையாம்! அதனால்தான் அம்பேத்கர் இதில் ஏதாவது ஒன்றில் சேராமல் புத்த மதத்தில் சேர்ந்தாராம்! புத்தமதம், புனிதமான (?) இந்து மதத்தின் கிளை மதமாம். அம்பேத்கர் இப்படியெல்லாம் சொன்னதாக ராம. கோபாலப் பார்ப்பனர் அறிக்கை விடுகிறார். அதை, "பிரபாகரன் மாத்தையாவால் சுட்டுக் கொலை; மிஸ்டர் அந்துமணி மலம் தின்கிறார்; காரணம், மகாவிஷ்னு வராக அவதாரத்தில் அதக் தின்றார் என்றும், எனவே மக்களும் அதைக் கடைப்பிடித்து ஈசனின் வாசலுக்குச் செல்ல வேண்டும் என்றும் ஒரு நீண்ட பேட்டியளித்தார்" இப்படிப்பட்ட உண்மையான செய்திகளை மட்டுமே வெளியிடும் தினமல(ம்)ர் மட்டுமே வெளியிட்டு இ(ஈ)ன புத்தியைக் காட்டுகிறது.

இப்போது அம்பேத்கருக்கு நூற்றாண்டு விழா என்றதும் குல்லூகப்பட்டர்களும் காகப்பட்டர்களும் கூடிச் சேர்ந்து கொண்டு உன்னை ஏமாற்றத் திட்டம் தீட்டி விட்டார்கள்.

தாழ்த்தப்பட்ட இனமே! இனியும் ஏமாறாதே!! நீ தாழ்ந்தவனல்ல! தரங்கெட்ட்வர்களால் தாழ்த்தப்பட்டவன்! உன் விடுதலை பள்ளிவாசலிலும், சர்ச்சிலும், புத்த ஆலயத்திலும், சீக்கிய குருதுவாராவிலும், பெரியாரின் பாசறையிலும் மட்டுமே உண்டு.

உன் இழிநிலை ஒழிய எதில் சேர வேண்டும்? தலீத் முஸ்லிம் விடுதலை இயக்கத்துக்கு உடனே எழுது உன்னை தக்கப் பாதுகாப்போடு சேர்த்து விடுகிறேன். உன்னயும் மனிதமாக- சகல கெளரவம் உள்ள ஸம மரியாதை உள்ள சகோதரனாய் வாழ வைக்க எங்கள் வாழ்வையே அர்ப்பணித்து கோடான கோடி முஸ்லிம்களும் காத்துள்ளோம்.

எங்களுக்கு நாடகம் போடத் தெரியாது; நடிப்பதற்கும் தெரியாது; "உலகம் கடவுளுக்குக் கட்டுப்பட்டது - கடவுள் மந்திரத்துக்குக் கட்டுப்பட்டவர் - மந்திரம் பார்ப்பனருக்குக் கட்டுப்பட்டது" என்று ராம கோபாலப் பார்ப்பனர்கள் சொல்வதைப் போல் எங்களுக்குச் சொல்லத் தெரியாது; பள்ளிவாசலுக்குள் வராதே - குர்ஆன் ஓதாதே - நீ வந்தால், தொட்டால் தீட்டு என்று எங்களுக்குச் சொல்லத் தெரியாது.

சமத்துவமாய் நடந்துக் கொள்ளவும் - எல்லோரையும் சமத்துவமாய் நடத்தவுமே நாங்கள் பயிற்றுவிக்கப்பட்டுள்ளோம்.

உன்னை அடிமைப்படுத்திய ராம. கோபால வம்சத்தை எட்டித்தள்ளி விட்டு - உன்னைப் பிணைத்திருக்கின்ற சாதீயச் சங்கிலிகளை உடைத்து எறிந்து விட்டு - சாத்திரச் சகதியில் இருந்து விடுப்பட்டு சந்தனக் காற்றை நுகர்வதற்கு - சாந்தி, சமாதானம், சகோதரத்துவம், சமத்துவம் பெறுவதற்கு வா என உன்னை அன்போடு அழைக்கின்றேன்.

தவறு செய்வது பார்ப்பான்; பழிப்போடுவது முஸ்லிம்கள் மீது!

இது மதச்சார்பற்ற நாடு; இங்கு -

"ஹிந்துஸ்தான் லீவர் லிமிடெட்"
"ஹிந்துஸ்தான் போட்டோ பிலிம்ஸ்"
"ஹிந்துஸ்தான் டெலிபிரிண்டர்ஸ்"
"ஹிந்து நாளிதழ்"

இப்படி மதவெறியைத் தூண்டக் கூடிய பெயர்களைக் கொண்ட நிறுவனங்கள் ஏராளம்!

மேலும், முன்னாள் மத்திய அமைச்சர் T.T. கிருஷ்ணமாச்சாரி மகன் T.T.K வாசுவுக்குச் சொந்தமான நிறுவனம் "பிரிட்டானியா பிஸ்கட் கம்பெனி."

"பிரிட்டானியா" என்றால், பிரிட்டிஷ் அரசு - பிரிட்டனின் நேசன் எனப் பொருள்; நம் பகையாளி வெள்ளையன் பெயரால் குழந்தை உணவு தயாரிப்பது தவறு இல்லை என்றால், நம் பங்காளி "பாகிஸ்தான்" பெயர் வைப்பதும் குற்றமில்லைதானே!

தமிழர் - முஸ்லிம் ஒற்றுமை!

"முக்குலத்துச் சிங்கம்" - "தேவர் திருமகனார்" முத்துராமலிங்கத் தேவருக்கு சிறுவயதில் தாய்ப் பால் தந்தது ஒரு முஸ்லிம் மாதுதான் என்பதனை தேவர்குல மக்கள் அனைவரும் அறிந்த ஒன்று.

ஒரு பார்ப்பனப் பெண்ணுக்கு இப்படிப்பட்ட பாசம் வருமா? இருந்தாலும் பார்ப்பனர்களுடைய ஆகம அனுஷ்டானங்கள் தான் ஏற்குமா?

இதிலிருந்து முஸ்லிம்களின் நேச நெஞ்சத்தைப் புரிந்துக் கொள்ளமுடியும்!

ஒரு முஸ்லிமுக்கு எதிரியே கிடையாது. அவன் உலக ஜீவன்களை நேசிப்பவன்; பார்ப்பனர்களைப் போல் உயர்வு - தாழ்வு கருதமாட்டான்; இதனால் தான் அவன் பார்ப்பானுக்கு ஆகாதவனான்.

தாழ்த்தப்பட்டோர் - முஸ்லிம் ஒற்றுமை!

நான் ஒரு அரிஜனனுடன் ஒரே தட்டில் உணவு உண்ணத் தயார்! சங்கராச்சாரி சக்கிலியனுடன் ஒரே தட்டில் உண்ணத் தயாரா?

நான், உன்னால் பிரிந்து வைக்கப்பட்ட எந்தத் தாழ்குடியிலும் பெண்ணெடுத்து வாழத் தயார்!

பெண் கொடுக்கவும் எங்களவர் தயார்! இதே சங்கரமடத்தவர் தயாரா?

இவைகளுக்கு விடைக் கொண்டுவரட்டும் ராம. கோபால பார்ப்பனர்கள்; பின்னர் யோசிப்போம்- இவனுடன் நேசமாய் வாழ்வது குறித்து; அதுவரை பார்ப்பானை விரட்டிக்கொண்டிருப்போம்! இந்தப் பெரும் பணியினை முடிக்கும் வரை -

ஜிஹாத் அமைப்பும்
கிறிஸ்துவ அமைப்பும்
தலீத் இயக்கங்களும்
தேவர் பேரவையும்
வன்னியர் பேரவையும்
சீக்கிய, பெளத்த அமைப்புகளும்
ஏனைய தமிழர் அமைப்புகளும்

ஒன்றாய்க் கூடி, ஒருமைப்பாடு காப்போம்

அதற்காக மரணத்தையும் ஏற்போம்!!

அர்ப்பணம் : ஆரியரின் அறியாமைக்கு

உரிமை : மதம் மாறுவோர்க்கும் - மாறியோர்க்கும்

சமர்ப்பணம் : காஷ்மீர் புலிகளுக்கு
 

No comments:

Post a Comment