Thursday, April 11, 2013

சவூதி "ஆஸாத் விசா" விதிமுறை மீறல் மற்றும் அபராதங்களின் பட்டியல்"

சவூதி உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள "விதிமுறை மீறல் & அபராதங்களின் பட்டியல்" (08.04.2013 தேதிப்படி) வெளியிட்டுள்ளது அதனை
இங்கு பதிவிட்டு உள்ளோம் பார்க்கும் சகோதரர்கள் பிறருக்கும் கொண்டு செல்லுங்கள்....

1. இக்காமா காலாவதி ஆகும் தேதிக்கு (எக்ஸ்பைரி தேதி) 3 நாட்கள் முன்னதாக, இக்காமாவை புதுப்பிக்க (ரெனிவ் செய்ய) சமர்ப்பிக்க வேண்டும்.

மீறினால்: இக்காமா கட்டணத்தின் இருமடங்கு செலுத்த வேண்டும்

2. அரசு அதிகாரிகள் இக்காமா-வை காண்பிக்கச் சொல்லி கேட்கும்போது, தகுந்த காரணங்கள் அன்றியே அல்லாமல், காண்பிக்க வேண்டும்

மீறினால்: முதல் முறை - SR 1000 அபராதம்; இரண்டாம் முறை - SR 2000 அபராதம்; மூன்றாம் முறை - SR 3000 அபராதம்

Saturday, April 6, 2013

ஐயயோ, ஹோட்டல்லயா சாப்பிடப் போறீங்க?

நம்ம தமிழ்நாட்டு ஹோட்டல்களில் எப்படி எல்லாம் டுபாக்கூர் வேலை நடக்குது என்று அந்தக் கடைக்காரர்களிடமே போட்டு வாங்கிய தகவல்கள்...

இட்லி: பொதுவா இட்லி மெத்துனு இருக்கணும்னா, ஒரு டம்ளர் இட்லி அரிசிக்கு கால் டம்ளர் உளுந்து தேவை. இரண்டையும் தனித்தனியா ஊறவெச்சு, தனித்தனியாதான் அரைக்கணும். அஞ்சு மணி நேரம் புளிக்கவெச்சு, சுட்டீங்கன்னா பஞ்சு மாதிரி இட்லி தயார். ஆனா, என்ன நடக்குது இங்க? கடை இட்லி அரிசி கால் பங்கு, ரேசன் அரிசி முக்கால் பங்கு, உளுந்து கால் பங்கு, ஜவ்வரிசி முக்கால் பங்கு, நைட்டு ஊறவெச்ச பழைய சாதம் கொஞ்சம், சோடா உப்பு எக்கச்சக்கமா... எல்லாத்தையும் அரைச்சு, மூணு மணி நேரம் வெயில்ல வெச்சுட்டு எடுத்து சுட்டால், கும்முன்னு குஷ்பு இட்லி தயார். அந்த இட்லியும் மீந்துருச்சின்னா, அப்பவும் பிரச்னை இல்லை. அடுத்த நாள் அரைக்கிற மாவுல மீந்துபோன இட்லியைப் போட்டு அரைச்சிடுவாங்க!

Wednesday, April 3, 2013

'ஆஸாத்' விசாவில் செளதிக்கு செல்பவர்களே..... உஷார் ... உஷார்!

நம்மில் எத்தனையோ பேர் வெளிநாடு சென்று கை நிறைய பணம் சம்பாதிக்க வேண்டுமென்ற கனவுகளோடு பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் யாரையாவது பிடித்து எப்படியாவது விசா வாங்கி வெளிநாட்டிற்கு வந்து விடுகிறோம். நம்மில் சிலர் முறையாக கம்பெனி விசாக்களிலும், பலர் விசிட் விசா அல்லது ஃப்ரீ விசாக்களிலும் பல்வேறு நாடுகளுக்கும் வந்து விடுகிறோம். இதில் கவனிக்கத்தக்க விஷயம் என்னவெனில் கம்பெனி விசாவில் வருபவர்களுக்கு எவ்வித பிரச்சனைகளும் இல்லை. விசிட் விசா மற்றும் ஃப்ரீ விசாவில் வருபவர்களுக்குத் தான் சிக்கல்கள் அதிகம். விசிட் விசாவில் வருபவர்கள் தொழிலாளர் விசா கிடைக்காமல் தலைமறைவாக ஒளிந்து கொண்டு வேலை செய்து பிழைப்பதும், ஃப்ரீ விசாவில் வருபவர்கள் கிடைக்கும் வேலையை விசாவுக்கு சம்பந்தமில்லாத இடங்களில் செய்து பிழைப்பதும் தான் தற்போதைய சவூதி அரேபியாவின் நிலை.

Tuesday, April 2, 2013

சர்க்கரை உணவா...விஷமா?

கரும்பு, பனை, தென்னை முக்கியமானவை. பனை, தென்னை மரங்களிலிருந்து இப்போதும் சர்க்கரை உற்பத்தி செய்யப்படுகிறது. என்றாலும், உலக சர்க்கரை வர்த்தகத்தில் பெரும்பகுதியாக இருப்பது கரும்பிலிருந்து கிடைக்கும் சர்க்கரைதான். ஆகவே, இதை முதலில் தெரிந்துகொள்வோம்.

'இதைத் தெரிந்து கொண்டு நமக்கு என்ன ஆகப்போகிறது?'

இன்றைக்கு, சர்க்கரை நோயாளிகள் பட்டியலில் உலக அளவில் நாம் முதலிடம் பிடித்திருப்பதற்கான காரணத்தை தெரிந்து கொள்ளத்தான்! ஆம்... சத்துமிக்க பொருளாக விளையும் கரும்பு, 'வெள்ளைச் சர்க்கரை' என்கிற பெயரில் எப்படி நஞ்சாக மாற்றப்படுகிறது என்பதை புரிந்து கொள்ளத்தான்!

Saturday, March 30, 2013

உங்கள் செல்போன் ஒரிஜினல்தானா கண்டுபிடிப்பது எப்படி?

நீங்கள் அதிகம் விலைக்கொடுத்து வாங்கிப் பயன்படுத்தும் செல்போன்கள் அனைத்தும் ஒரிஜினல்தானா என்பதை சோதித்துப் பார்ப்பது தற்போது கட்டாயமாகும். சில ஆயிரம் ரூபாய் முதல் பல ஆயிரம் ரூபாய்வரை கொடுத்து ஒரு புதிய மாடல் செல்போனை வாங்கும்போது, அதனுடைய உண்மைத்தன்மையை அறிய வேண்டும் அல்லவா?

உண்மையான நிறுவனத் தயாரிப்பாக இருக்க வேண்டும் இல்லையா? உண்மையான நிறுவனத்தைப் போன்றே தற்போது போலியான தயாரிப்புகள் தற்போது விலைக்கு வந்து அசல் எது? போலி எது என்று கண்டுபிடிக்க முடியாதவாறு எந்த வித்தியாசமும் இல்லாமல் காணப்படும். இவ்வாறான போலி தயாரிப்பு மொபைல்களைக் கண்டறிய கீழ்க்கண்ட வழிமுறைகள் உங்களுக்கு உதவும்.

முதலில் நீங்கள் உங்கள் மொபைல் போன் ஒரிஜினல்தானா என்பதைக் கண்டறிய International Mobile Equipment Identification எனப்படும் IMEI எண்ணை அறிந்துகொள்ள வேண்டும்.

Wednesday, March 27, 2013

வீட்டில் வைத்திருக்க வேண்டிய முதல் உதவிப் பொருட்கள்...

டி.வி, ஃபிரிட்ஜ், வாஷிங் மெஷின், செல்போன்கள் என வீடு முழுக்க நிறைந்துகிடக்கும் பொருட்கள் அதிகம். ஆனால், உயிர் காக்கும் முதல் உதவிப் பொருட்கள் ஏதேனும் நம் வீட்டில் இருக்கிறதா? இதோ அத்தியாவசியமாக வீட்டில் வைத்திருக்க வேண்டிய முதல் உதவிப் பொருட்கள். வீட்டில் மட்டும் அல்ல, வாகனங்களிலும் இதை வைத்திருக்கலாம்.

கிருமிநாசினி (Antiseptic liquid): தினசரி வாழ்க்கையில் உடலில் நோய்த்தொற்று ஏற்படாமல் இருக்க, கை கழுவும்போது கிருமிநாசினி பயன்படுத்தலாம். உடலில் காயம் ஏற்படும் பட்சத்தில் உடனடியாக கிருமிநாசினி பயன்படுத்திக் காயத்தைச் சுத்தப்படுத்துவது பாக்டீரியா மற்றும் கிருமித் தொற்றுகள் வராமல் தடுக்கும். இதேபோல் டிங்சர் வைத்திருப்பதும் முக்கியம்.

Tuesday, March 26, 2013

மோடி பிரதமர் பதவிக்குத் தகுதியானவரா...?

இந்தியாவின் மதச்சார்பற்ற அரசியல் கட்டமைப்பை மதித்து நடக்கும் முதல் தகுதியை மோடி பெற்றிருக்கிறாரா? என்ற கேள்வியோடு குஜராத் அரசை ஆய்வு செய்ய வேண்டியுள்ளது. பல மதங்களைக் கொண்ட மக்கள் அவரவர் நம்பிக்கையின் அடிப்படையில் சம உரிமை பெறுவதற்கு சட்டப்பிரிவின் 25-வது விதி உதவுகிறது.  ஆனால், குஜராத்தில் மோடியின் அரசு மதச் சுதந்திர சட்டம் என்ற பெயரில் அவ்வுரிமையை மறுத்து வருகிறது.

இன்றைக்கும் அங்கே கிறிஸ்துமஸ் போன்ற விழாக்களின்போது தேவாலயத்தின்கதவுகளும் சன்னல்களும் பாதி மூடப்பட்டு பிரார்த்தனை கீதங்கள் வெளியில் சென்றுவிடாமல் அமைதி காக்கப்படுகிறது . அரசு உத்தரவின் மூலம் கிறிஸ்துவ மக்களின் எண்ணிக்கை குறித்த கணக்கெடுப்புக்கு உள்ளூர் காவல்நிலையங்களை ப் பயன்படுத்துகிறது

நடைப் பயிற்சியின் அவசியம்.... (walking...)

நாம் உண்ணும் உணவுப்பழக்க வழக்கங்களினால் மிக சிறிய வயதில் உடல் பருமண், இரத்தக் கொதிப்பு, சர்க்கரை, நீரழிவு நோய் என்று கேள்விப்படாத நோய்கள் எல்லாம் வருகின்றன. எந்த மருத்துவரிடம் சென்றாலும் அவர் மாத்திரை மருந்து என நிறைய செலவு வைத்துவிட்டு கடைசியாக சொல்வது நடைப்பயிற்சி செய்யுங்கள். நடைப்பயிற்சி இன்று அந்த அளவிற்கு முக்கியமாகிவிட்டது.

நான் சென்னையில் இருக்கும் போது காலை வேலையில் கடற்கரைப் பக்கம் சென்றால் ஒரு திருவிழாப் போல் இருக்கும் அங்கு எல்லோரும் கையை வீசிக்கொண்டு வேகமாக நடக்கின்றனர். அங்கு மட்டுமா? எல்லா இடங்களிலும் நாற்பது வயதிற்கு மேற்பட்டோர் தான் அதிகம் நடைப்பயிற்சியில் ஈடுபட்டு வந்தனர். இன்று வரும் புதுப்புது நோய்களால் 20 வயதிற்குட்பட்ட நிறைய பேர் நடைபயிற்சியல் ஈடுபடுகின்றனர். நோயின்றி வாழ நடைப்பயிற்சி அவசியமான ஒன்றாகிவிட்டது இன்று.

Monday, March 25, 2013

கேட்டமைன் ((KETAMINE) என்னும் போதை எமன்!

எப்போதாவது செய்தித்தாள்களில், விமான நிலையங்களில் கேட்டமைன் பிடிபடும் செய்திகளைப் படிக்கிறோம். அது என்ன கேட்டமைன்?

கேட்டமைன் - ஹெராயின், அபின், கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களை எல்லாம் தூக்கிச் சாப்பிடும் எமன். ஹெராயின், அபின், கஞ்சா, மது ஆகிய போதைப் பொருட்களுக்கு மூலப் பொருள் இயற்கையான விளைபொருட்களே. ஆனால், கேட்டமைன் முழுக்க, முழுக்க ரசாயனப் பொருள். உண்மையில் இது கால்நடைகளுக்கு ஏற்படும் உயிர்க்கொல்லி நோயான ஆந்தராக்ஸ் முற்றிய நிலையில் கடைசி யாக உயிர் காக்கும் ஆயுதமாகப் பயன்படுத்தப்படும் கால் நடை மருந்து. தவிர, ஆபத்தான வலி நிவாரணி மருந்தும்கூட. பார்க்க சர்க்கரை போலவே பளபளப்பாக வெண்மை நிறத்தில் இருக்கும். இதன் உண்மையான வேதியியல் பெயர் க்ளோரோபைனல் மெத்லோமினா சைக்ளோஹெக்ஸானோன். பெயரை உச்சரிக்கவே வாய் தடுமாறுகிறதா? உள்ளே சென்றால் சகலமும் தடுமாறும்.

Sunday, March 10, 2013

வாஞ்சிநாதன் ஆஷ் துரையை கொன்றது ஏன்... ? மறைக்கப்பட்ட வரலாற்று உண்மைகள்......

(Robert W. D. E. Ashe)

அது ஒரு மழைக் கால இரவு, ஆஷ் என்னும் வெள்ளை துரையின் குதிரை பூட்டிய வண்டி, சேரியைக் கடந்து பறக்கிறது. ஆஷ் ஒரு மனித நேயம் மிகுந்த மனிதன் என்பதால், இருள் விலகி கொஞ்சம் அவனுக்கு வழி விடுகிறது, மனிதர்களில் இருந்து விலக்கப்பட்டு மிருகங்களின் நிலையில் இருந்த ” தலித்” மக்களின் பகுதியை கடந்து ஆஷ் செல்லுகின்ற போது, அங்கே ஒரு அழுகுரல் இருளின் அமைதியை ...விலக்கி வருகிறது, 

ஆஷ் தன் சாரதியிடம் சொல்கிறான், வண்டியை அந்த அழுகுரல் வரும் திசை நோக்கி செலுத்து என்று, சாரதி சொல்கிறான், அது தாழ்த்தப் பட்ட மனிதர்கள் வாழும் இடம், அங்கு நாம் செல்லக் கூடாது என்று, ஆஷ், கேட்கிறான், மனிதர்களில் தாழ்ந்தவர்களா, அவர்கள், திருடும் இனமா? என்றான்? இல்லை அய்யா பிறப்பால் தாழ்ந்தவர்கள் என்றான்? வியப்பின் எல்லைக்கு சென்ற ஆஷ், கட்டளை இடுகிறான், ” அந்த அழுகுரல் வரும் திசை நோக்கிச் செல்” – அதிகாரத் தோணி கேட்டு அடங்கிய சாரதி, மறுக்காமல் விரைகிறான்.

அதிரடி தண்ணீர் கொள்கை..... ‘தண்ணி’ காட்டப்போகும் தண்ணீர்'


கடந்த ஆண்டு டிசம்பர் 28ம் தேதி டெல்லியில் தேசிய நீர் வளத்துறை கவுன்சிலின் 6வது கூட்டம் நடைபெற்றது. இதில் தேசிய நீர்க கொள்கை 2012 ஏற்கப்பட்டது. இந்த கூட்டத்திற்கு பிரதமர் மன்மோகன் சிங் தலைமை வகித்தார். கடந்த 2002ம் ஆண்டில் துவங்கி 10 ஆண்டுகளில் ஒரு வடிவத்தை பெற்றுள்ளது தேசிய நீர் கொள்கை. இதை சற்று ஆழ்ந்து பார்த்தால் அது நேரடியாகவும் மறைமுகமாகவும் மாநிலங்களின் மீது அதிகாரத்தை செலுத்தும் போக்கை காணலாம். எப்படி மேலே படியுங்கள்: 

Friday, March 1, 2013

இணையமும் குழந்தைகளும்....

புத்தாண்டில், வளர்ந்த உங்கள் செல்வத்திற்கு கம்ப்யூட்டர், டேப்ளட் பிசி, ஐ பேட், லேப்டாப் என ஏதேனும் டிஜிட்டல் சாதனம் ஒன்றை வாங்கிக் கொடுத்துள்ளீர்களா? பாரட்டுக்கள். அத்துடன் அவர்களுக்கு, அவற்றைப் பயன்படுத்துவதில் உள்ள நன்மை தீமைகளை எடுத்துக் கூறி, என்ன என்ன செய்யக் கூடாது என அறிவுரை என்றில்லாமல், டிப்ஸ் எனப்படும் பயன்குறிப்புகளைத் தரவும். அவற்றில் சிலவற்றை இங்கு பார்க்கலாமா!

1.நேர எல்லைகள்:

டிஜிட்டல் சாதனங்களைப் பயன்படுத்திப் பார்த்த பின்னர், விரைவில் அதற்கு அடிமையாகும் பண்பு சிறுவர்களுக்கு வந்துவிடுகிறது. எனவே, பக்குவமாக, ஒரு நாளில், எந்த எந்த வேலைகளுக்கு அவற்றை, எவ்வளவு நேரம் அதிக பட்சம் பயன்படுத்த வேண்டும் என்பதை, விளக்கமாக எடுத்துரையுங்கள்.

பொதுஅறிவு பகுதி....Genaral Knowledge...


* சீனா தலைநகர் பீஜிங் நகரிலிருந்து வெளிவரும் "சீங்பாவோ' என்ற பத்திரிகை 103 ஆண்டுகளாக வெளிவருகிறது. அச்சு இயந்திரம் வருவதற்கு முன் இதைக் கையால் எழுதி நகல் எடுத்தார்களாம். 

* உலகிலேயே முதன்முதலில் தலைப்புடன் செய்தி வந்தது 1777-ம் ஆண்டில் "நியூயார்க் கெஜட்' என்ற பத்திரிகையில். 

*உலகக் கோப்பை கால்பந்தாட்டப் போட்டியில் முதல் கோலைப் போட்டவர் என்ற பெருமை பிரான்ஸ் நாட்டு அணியைச் சேர்ந்த லூசியனண்ட் லூரான் என்ற வீரர் பெற்றார். 1930-ம் ஆண்டு முதல் கோலை மெக்ஸிகோவிற்கு எதிராகப் போட்டார். 

Thursday, February 28, 2013

வேலை தேட கைகொடுக்கும் இணையதள‌ம்.

வேலை தேடுபவர்களுக்கு பயோ டேட்டாவின் முக்கியத்துவம் நன்றாகவே தெரியும்.நல்ல வேலை கிடைப்பது நல்ல பயோடேட்டாவை சார்ந்தே இருக்கிறது. பயோ டேட்டா பளிச் என்று பக்காவாக இருந்தால் வேலை கிடைப்பதற்கான வாய்ப்பு அதிகம் என்பதும் வேலை தேடும் எல்லோருக்கும் தெரிந்த விஷயம் தான்.

ஆனால் பலருக்கும் தெரியாத விஷயம் பக்காவான பயோடேட்டாவை தயாரிப்பது எப்படி என்பது தான்!அதிலும் புதிதாக வேலை தேடுபவர்களுக்கு இந்த குழப்பம் அதிகமாகவே இருக்கும். நல்ல பயோடேட்டாவிற்க்கு என்று எழுதப்படாத விதிகள் எதுவும் இல்லாவிட்டாலும் பலவித குறிப்புகளும் ஆலோசனைகளும் கொட்டிக்கிடக்கின்றன.இவை மேலும் குழப்பலாம்.

Thursday, February 21, 2013

'இன்டர்வென்ஷனல் கார்டியாலஜி’ துறையில், கரையக்கூடிய (Bioabsorbable Stent) ஸ்டென்ட்

இரத்தக் குழாயில் அடைப்பு ஏற்படும்போது அதைச் சரிப்படுத்தி, ரத்த ஓட்டத்தைச் சீராக்க உருவாக்கப்பட்டதுதான் ஸ்டென்ட். இது உலோகத்தால் ஆன வலை போன்ற அமைப்பைக்கொண்டது. ரத்தக் குழாய் வழியே சிறிய கம்பி போன்ற கருவியைச் செலுத்தி, இதயத்தில் ஏற்படும் அடைப்பு உள்ளிட்ட பிரச்னைகளுக்குத் தீர்வு அளிக்கும் 'இன்டர்வென்ஷனல் கார்டியாலஜி’ துறையில், கரையக்கூடிய (Bioabsorbable Stent) ஸ்டென்ட்களின் வருகை ஒரு புதிய புரட்சி. இந்தியாவில் முதன்முறையாக சென்னையில் இந்த ஸ்டென்டைப் பயன்படுத்தி அறுவைசிகிச்சை செய்யப்பட்டு இருக்கிறது.

Tuesday, February 19, 2013

இந்திய சுதந்திர போராட்டத்தில் முஸ்லிகளின் தியாகம் .....


அந்நியனுக்கு அடிமைச் சேவகம் செய்தவர்கள் எல்லாம் இன்று ஆட்சிக் கட்டிலும், அதிகார இடங்களிலும் அமர்ந்து கொண்டு சுதந்திரத்திற்கு தங்கள் எதிர்கால சந்ததியினரின் நலன்களை அர்ப்பணித்த சமுதாயத்தை அடக்கியாகின்ற அவலம் இங்குமட்டும் சுதத்திரத்திற்கு வாளேந்திய சமுதாயம் வாழ்வுரிமை கேட்டு வீதியில் நிற்கும் அவலம் இங்கு மட்டுமே.

கிழக்கிந்திய கம்பெனிக்கு கிஸ்தி வசூலித்து தந்தவர்கள் நினைக்கலாம் ஆதவனை கரங் கொண்டு மறைத்து விடலாம் என்று, ஆனால் ஆயிரம் கரம் கொண்டு மறைத்தாலும் ஆதவன் மறைவதில்லை. இந்திய மண்ணின் கடைசி இஸ்லாமியர் இருக்கும் வரை இந்தியாவின் விடுதலைக்கு இஸ்லாமியர்கள் ஆற்றிய அரும்பணிகள் மறையாது.

Saturday, February 16, 2013

சாக்லெட் சாப்பிட்டால் ஸ்லிம் ஆகலாம்...



உடல் பெருத்து விடும் என்ற பயத்திலேயே பல இளம் பெண்கள் ஆசை இருந்தாலும் சாக்லெட் சாப்பிடுவதைத் தவிர்ப்பார்கள். குழந்தைகளுக்கு வாங்கித் தருவதற்கு பெற்றோரும் யோசிப்பார்கள். ஆனால், ‘தினமும் சாக்லெட் சாப்பிட்டு வந்தால் ஸ்லிம் ஆகலாம்’ என்கிறது சமீபத்திய ஆய்வு. கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்ட இந்த ஆராய்ச்சியில், ஜீரண சக்தியை சாக்லெட் அதிகரிக்கச் செய்கிறது என்றும் அதன் காரணமாக சாப்பிடும் உணவு எளிதில் ஜீரணமாகிறது என்றும், அதனால் உடல் எடை குறைகிறது என்றும் தெரிய வந்துள்ளது.

Friday, February 15, 2013

அப்ஃசல் குருவும் கஷ்மீரும் - வஞ்சிக்கப்பட்ட வரலாறு

 வருகின்ற‌ நாடாளுமன்ற‌ தேர்தல் பிரச்சாரத்தில், காங்கிரசு அரசின் மீது ஊழல் குற்றச்சாட்டுகளை வீச, பா.ஜ.கவுக்கு எவ்வித அருகதையும் இல்லை. இருகட்சிகளுமே கழுத்தளவு ஊழல் சேற்றில் சிக்கிக் கொண்டிருக்கும் கட்சிகள் என்பதால் ஊழலை ஒரு முக்கிய குற்றச்சாட்டாக பா.ஜ.க பயன்படுத்த முடியாது. எனவே தேசப்பாதுகாப்பு என்ற ஒரு கருத்தியலை எடுத்துக் கொண்டால் மட்டுமே காங்கிரசை கேள்விக்குள்ளாக்க முடியும் என்ற பா.ஜ.க வின் திட்டத்தை, காங்கிரசு முறியடிக்க இந்த வைகறைக் கொலைகள் அவசியமாயிருக்கின்றன. 

இந்து தீவிரவாதிகள் என வாய் மலர்ந்ததற்காக எங்கே வாக்கு வங்கியை தவற விட்டு விடுவோமோ என்ற பதைபதைப்புடன் இப்படுகொலை முழுக்க முழுக்க சர்வ ரகசியமாக, உரிய நேரத்தில் காங்கிரசின் காய் நகர்த்தலுக்கு பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இந்த புள்ளியிலிருந்து தான் அஃப்சல் குரு படுகொலையை புரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது. சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்கிறது இந்திய அரசியலமைப்பு, ஆனால் அஃப்சல் குருவின் வழக்கில் நடந்ததோ இதற்கு நேரெதிர்.

தூக்குத் தண்டனை குறித்து ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி ஏ.கே.கங்குலி!

கருணை மனுக்களை நீண்ட காலம் கிடப்பில் போடுவதால் தண்டனைக் குறைப்பு கோருவது நியாயம்தான்...

2008 ஆம் ஆண்டிலிருந்து 2012 வரை உச்சநீதிமன்ற நீதிபதியாக பணியாற்றி அண்மையில் ஓய்வு பெற்றவர் ஏ.கே.கங்குலி, 2ஜி அலைவரிசை ஒதுக்கீடு வழக்கு உட்பட பல வழக்குகளில் முக்கிய தீர்ப்பளித்தவர். இப்போது மேற்கு வங்க மனித உரிமை ஆணையத்தின் தலைவர், ‘பிரண்ட்லைன்’ பத்திரிகைக்கு அவர் தூக்குத் தண்டனை தொடர்பாக அளித்த பேட்டியில் வெளியிட்ட சில முக்கிய கருத்துகள்.

• ‘அரிதிலும் அரிதான’ வழக்கில் மட்டுமே தூக்குத் தண்டனை விதிக்க முடியும் என்று ‘பச்சன்’ வழக்கில் உச்சநீதி மன்றம் வழங்கிய தீர்ப்பில் வலியுறுத்தப்பட்ட நெறிமுறை மீறப்பட்டு பல வழக்குகளில் தவறாகத் தூக்குத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது உண்மை. இருந்தவரை நான் ஒப்புக் கொள்கிறேன்.

Thursday, February 14, 2013

பல் சொத்தைப் பற்றி சில தகவல்கள்..!

பல் சொத்தை என்றதும், பல்லை புடுங்கலாமா? சிமெண்ட் வைத்து அடைக்கலாமா என்று யோசிக்கிறோமேத் தவிர பல் சொத்தை ஏன் எப்படி ஏற்படுகிறது என்று ஆராய்கிறோமா? ஏன் ஆராய வேண்டும் என்று கேட்கலாம்? அப்படி ஆராய்ந்து உண்மையை அறிந்தால்தான் அடுத்த பல்லை சொத்தையாகாமல் தடுக்கலாம்.

பல் சொத்தை பற்றி யோகா ஆசிரியர் சுப்ரமணியம் கூறுகிறார்.

1. பல் சொத்தை என்பது பரம்பரை வியாதியாகும். தாய்க்கோ, தந்தைக்கோ பல் சொத்தை இருந்தால் நிச்சயமாக அவர்களது குழந்தைகளுக்கும் பல் சொத்தை ஏற்படும்.
2. மேலும் நாம் சாப்பிடும் உணவுகள் அனைத்துமே கூழ் போன்ற பசை உணவாக உள்ளன.

ஓட்டுனர்களுக்கு தெரிந்த விஷயம்; தெரியாத உண்மை...!

வாகனங்களை ஓட்டத் தெரிந்த பலர், சாலைகளில் இடம் பெற்றவை குறித்து அறிந்திருப்பதில்லை. இது குறித்து மதுரை டிரைவிங் நீட்ஸ் அகாடமியின் பயிற்சியாளர் ஏ.நரசிம்மமணி கூறியதாவது:


* பகலில் முகப்பு விளக்குகளை எரியவிட்டு எதிரே வரும் வாகனத்தை எச்சரித்தபடி முன்னேறுவது குற்றம்.

* சாதாரண நேரங்களில் நான்கு புறங்களிலும் உள்ள எச்சரிக்கை விளக்கை எரிய விடுவது தவறு. அபாயகரமான அல்லது வாகனம் பழுதாகி நிற்கும்போதோ, பழுதான வாகனத்தை பிற வாகனங்கள் இழுத்துச் செல்லும்போதோ எரியவிட வேண்டும்.

Tuesday, February 12, 2013

புற்று நோய் விழிப்புணர்வு (Cancer awareness) பற்றி அறிந்து கொள்ளுங்கள்...



ஆண்களுக்கு, நுரையீரல், வயிறு, கல்லீரல், உணவுக்குழாய், ப்ராஸ்டேட் புற்றுநோயாலும், பெண்களுக்கு மார்பகம், நுரையீரல், வயிறு மற்றும் கர்ப்பப்பைப் புற்றுநோயாலும் அதிக அளவில் உயிர் இழப்பு நேரிடுகிறது. புகையிலைப் பொருட்களைப் பயன்படுத்து வதால் ஏற்படும் புற்றுநோயால் 42 சதவிகித ஆண்களுக்கும், 18 சதவிகித பெண்களுக்கும் உயிர் இழப்பு ஏற்படுகிறது.

இப்போது எல்லாம் சினிமா பார்க்க தியேட்டருக்குப் போனால், முதல் காட்சியே குலை நடுங்கவைக்கிறது. புகையிலையின் அபாயத்தைப் பொளேரென விளக்கும் வகையில் சிலருடைய புற்றுநோய்ப் பாதிப்புத் துயரங்கள் விளம்பரப் படமாகத் திரையில் விரிகிறது. அதிர்ச்சியில் உறைகிறது நெஞ்சம்.

புற்றுநோய் குறித்து உங்களை மேலும் அச்சப்படுத்துவதற்காக அல்ல இந்தக் கட்டுரை. புற்றுநோய் குறித்த அபாயத்தை முழுக்க உணர்ந்து, நம்மை நாமே நெறிப்படுத்திக்கொள்வதற்கான வழிவகையை உருவாக்குவதே இந்தக் கட்டுரையின் நோக்கம்.

Sunday, February 3, 2013

சிறுபான்மையினர்க்கு எதிரான ஆர்.எஸ்.எஸ்இன் பொய்யும் புரட்டும் – 24

இராணுவம், துணைஇராணுவம், போலீசுத்துறை ஆகியவற்றில் முசுலீம்களுக்கு ஒதுக்கீடு செய்ய வேண்டுமென்று அபாயகரமான கோரிக்கை ஒன்று எழுந்துள்ளது. இராணுவத்தில் மதத்தை வைத்து ஒதுக்கீடு செய்வது என்பது தேசப்பாதுகாப்புக்கு ஊறு விளைவிக்கும் செயலாகும்.” - இந்து முன்னணி 

எல்லைப் பாதுகாப்புப் படையின் உளவுப் பிரிவு டி.ஜி. விபூதி நாராயணராய், 1995-ஆம் ஆண்டு ‘வகுப்புக் கலவரங்களில் போலீசின் நடுநிலைமை’ குறித்து ஒரு ஆய்வினை மேற்கொண்டார். எந்தக் கலவரத்தையும் 24 மணி நேரத்திற்குள் அடக்கிவிட முடியும் என்றும், அதற்கு மேல் கலவரம் நீடிப்பது என்பது போலீசும், அரசும் விரும்பினால் மட்டுமே சாத்தியம் என்றும் அந்த அதிகாரி குறிப்பிடுகிறார். ஆக முசுலீம்களுக்கெதிரான கலவரம் வார, மாதக் கணக்கில் நீடிப்பதிலிருந்தே போலீசின் நடுநிலை இலட்சணம் என்ன என்பது தெரிகிறது. 

சிறுமி மலாலாவும், அடாவடி அமெரிக்காவும்...

அக்டோபர் 9/2012 அன்று சிறுமி மலாலா சுடப்பட்டாள் என்ற செய்தி உலகையே உலுக்கியது. யார் இந்த மலாலா..ஏன், எதற்கு யாரால் சுடப்பட்டாள்....?

ஆப்கானில் தலிபான்கள் ஆட்சி செய்த போது கலாச்சார சீர்கேடுகளை உண்டாக்கும் மேற்கத்திய அந்நிய கல்வி நிறுவனங்களை மூடுமாறு உத்தரவிட்டனர். ஏராளமான கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டன. உடனே தங்கள் ஊடகங்கள் மூலம் உலகம் முழுவதும் தலிபான்களுக்கு எதிராக அவதூறுகளைக் கட்டவிழ்த்து விட்டனர் அடாவடி அமெரிக்காவும், அதன் அல்லக்கைகளும். தாலிபான்கள் பெண் கல்வியைத் தடுத்து விட்டனர், காட்டுமிராண்டி ஆட்சி செய்கின்றனர் என்று அலறினார்கள்.

உடலை இளைக்கச் செய்யும் மருந்துகள்... சிறுநீரகத்தையும் இதயத்தையும் தாக்கும் அபாயம்


எந்திரங்களுக்கு இடையில் எந்திரமாக உழன்று கொண்டிருக்கிறோம். எல்லாமே அவசரமாகக் கிடைக்க வேண்டும் என எதிர்பார்க்கிறோம். சமையலில் இருந்து, தகவல் பரிமாற்றம் வரை! அந்த மனப்பான்மை உடலை இளைக்கச் செய்வதிலும் தெரிகிறது சமீபகாலமாக. உணவுக் கட்டுப்பாடும் உடற்பயிற்சியும் மட்டுமே உடல் பருமனைக் குறைக்கும் என்பது நம் எல்லோருக்கும் தெரியும். ஆனால், அதெல்லாம் ஒரே இரவில் நடக்கிற மாயவித்தை அல்ல. மாதங்கள், வருடங்கள் ஆகலாம். ஆனால் நமக்குப் பொறுமை ஏது? விளைவு... ஒரு வாரத்திலோ, பத்து நாள்களிலோ பலன் தருவதாகச் சொல்கிற தவறான வாக்குறுதிகளை நம்பத் தயாராகிறார்கள். 

அந்த வகையில் உடலை இளைக்கச் செய்கிற சத்து பானங்களுக்கும், மாத்திரைகளுக்கும் ஏக கிராக்கி! உடல் பருமனைக் குறைப்பதாக உத்தரவாதம் தரும் இந்தப் பொருட்கள் உண்மையில் உபத்திரவமே தருகின்றன!

Tuesday, January 29, 2013

பொது அறிவு (General Knowledge) பகுதி - 9

*1581-ம் ஆண்டு லண்டன் டவர் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டிருந்த தாமஸ் ஓவர் பரி என்பவருக்கு கொடுக்கப்பட்ட உணவு என்ன தெரியுமா?... 

நைட்ரிக் அமிலம், விஷச்செடிகள், அரைக்கப்பட்ட வைரம். இந்த மூன்றில் எந்த ஒன்றைச் சாப்பிட்டாலும் மனிதன் இறந்து விடுவான். ஆனால் இந்தக் கைதியோ இதையெல்லாம் சாப்பிட்டு 100 நாட்கள் வரை உயிர் வாழ்ந்திருக்கிறார். 

****இங்கிலாந்தில் ஆடுகளை மேய்ப்பதற்கு ஆட்கள் கிடைப்பது அரிதாக உள்ளது. எனவே ஆடு மேய்க்க நாய்களை பயன்படுத்துகின்றனர். நாய்களுக்கு பயிற்சி அளித்து மேய்ப்பனாக அனுப்புகின்றனர். இவை காலையில் ஆடுகளை ஓட்டிச் சென்று மாலையில் பத்திரமாக திருப்பிக் கொண்டு வந்து சேர்க்கின்றன. இப்படி ஒரு நாய், இரண்டு நாய் அல்ல 2 லட்சம் நாய்கள் மேய்ப்பனாக வேலை செய்கின்றன. ஒரு நாய் 12 ஆட்களின் வேலையைச் செய்கின்றன என ஆட்டு மந்தையின் எஜமானர்கள் கூறுகிறார்கள்.

பொது அறிவு (General Knowledge) பகுதி - 33


* சிலந்திகள் ஒரு வார காலம் வரை உணவு இல்லாமல் வாழ்கின்றன. 

* மண்புழுவிற்கு 5 ஜோடி இதயங்கள் உள்ளன. 

* தேனீயால் பச்சை, நீலம், ஊதா நிறங்களை பிரித்தறிய முடியும். 

* பூச்சி இனங்களில் தும்பியின் கண்கள் கூர்மையானவை. 

* பட்டாம் பூச்சிக்கு நூரையீரல் இல்லை. அதன் வயிற்றுப் பகுதியில் உள்ள `ஸ்பிராக்கிள்' என்னும் துளைகள் வழியாக சுவாசிக்கின்றன. 

* ஆண், பெண் இரண்டின் இனப் பெருக்க உறுப்புகளும் நத்தையில் காணப் படுகிறது. இதனால் அவை ஹெர்மப்ரோடைட்ஸ் என்று அழைக்கப்படுகிறது. 

Sunday, January 27, 2013

குண்டுவெடிப்பை படமாக்க திராணி இல்லாதவர்கள்.....

இந்தியாவில் நடைபெற்ற பலகுண்டு வெடிப்பு சம்பவங்களை வெளிக்கொண்டு வர திராணி இல்லாதவர்கள்…இதணை மையாமாக கொண்டு படம் எடுத்து வெளியிட திராணி இல்லாதவர்கள்…ஆப்கானில் நடக்கும் சம்பவங்களை மையமாக கொண்டு படம் எடுப்பதன் காரணம் என்னவோ??? 

1) தீவிரவாதத்தை இந்த நாட்டில் அரங்கேற்றுவது யார் ?
2) சம்ஜயோதா எக்ஸ்ப்ரஸில் குண்டு வைத்தவன் யார் ?
3) சபர்மதி எக்ஸ்ப்ரஸில் குண்டு வைத்தவன் யார் ?
4) மக்கா மஸ்ஜிதில் குண்டு வைத்தவன் யார் ?
5) அஜ்மீர் தர்காவில் குண்டு வைத்தவன் யார் ?
6) கோவாவில் குண்டு வெடிப்பு நடத்தியவன் யார் ?
7) மாலேகானில் குண்டு வைத்தவன் யார் ?
8) நாடெங்கும் குண்டு வைத்து விட்டு அந்த பழியை முஸ்லிம்கள் மீது போடுபவன் யார் ?
9) குஜராத்தில் 3000 முஸ்லிம்களை கொன்று குவித்தவன் யார் ?
10) நாடு முழுவதும் கலவரத்தை நடத்துபவன் யார் ?

ஏன் இந்த ‘விஷ்வரூபம்’...? மனம் திறக்கிறார் படத்தை தணிக்கை செய்த ஹசன் ஜின்னா

எரிகின்ற தீயில் எண்ணெய் ஊற்றாமல் அதை அணைப்பதற்குத் தண்ணீர் குடம் ஏந்தும் கைகள் தேவைப்படுகின்றன. விஸ்வரூபம் படம் குறித்து தற்போது எழுந்துள்ள சர்ச்சைகள், விவாதங்கள், கண்டனங்கள் அதன் எதிரொலியாக விதிக்கப்பட்டுள்ள தடை இவற்றின் காரணமாக, அந்தப் படத்தைத் தணிக்கை செய்த உறுப்பினர்களில் நானும் ஒருவன் என்பதால் என்னை பற்றிய விமர்சனங்கள் ஊடகங்களில் வெளிப்படுகின்றன.

தடையை நீக்கக்கோரும் வழக்கு தற்போது உயர்நீதிமன்றத்தில் விசாரணையில் இருப்பதாலும், அதுபோலவே, சென்சார் விதிமுறைகளின்படியும், படத் தணிக்கையில் ஈடுபட்டவர்கள் தணிக்கையின் போது நடந்த விவாதத்தையோ அல்லது படம் குறித்த விமர்சனத்தையோ தெரிவிக்கக்க்கூடாது என்பதாலும் நான் சட்டவிதிகளுக்கும் நீதிமன்ற நடைமுறைகளுக்கும் உட்பட்டே கருத்துகளைத் தெரிவிக்க முடியும்.

ஹாலிவுட்டில் பட வாய்ப்பும்,ஆஸ்கர் விருதும்......

இஸ்லாத்தை அவமதித்து படம் எடுத்தால் ஹாலிவுட்டில் பட வாய்ப்பும்,ஆஸ்கர் விருதும் கிடைக்குமா? வழக்கமான கமல் படங்களை போல இதிலும் எங்கெங்கும் எல்லா காட்சிகளிலும் நீக்கமற நிறைந்திருக்கும் பிராமண வாடை.. பேச்சு, பெயர்கள், கலாசாரம் என்று சகலத்திலும் பிராமண நெடி. வெள்ளைக்காரனை வெற்றிகரமாக காப்பியடித்து பெருமைப்படுவது பைத்தியக்காரத்தனம்.

திரைக்கதையிலும் பெரிய சாமர்த்தியம் இல்லை.. பார்த்து பார்த்து புளித்த போன ஹாலிவுட் முறைகள்.. குறிப்பாக நம்மவர்களை ஈர்க்க போவது ஒரு காட்சி.. தொழுகை செய்வதாக சொல்லி கண்ணிமைக்கும் நேரத்தில் அத்துணை பேரையும் துவம்சம் செய்யும் காட்சி.. அதிலும் குறிப்பாக நொடி நேரத்தில் செய்த அசகாய சண்டையை Slow Motion ல் விளக்குவது.. ஆனால் இது Sherlock Holmes (2009) படத்தில் வரும் குத்துசண்டை காட்சியின் அப்பட்டமான காப்பி.. மேலும் அது தேவைப்படும் அளவுக்கு இது ஒன்றும் ஜாக்கிசான், ப்ரூஸ்லீயின் அதிவேக சண்டை இல்லை..

Saturday, January 26, 2013

உலக நாயகனிடம் சில கேள்விகள்!....!

விஸ்வரூபம் படத்திற்கு தடை விதிக்கப்பட்ட சர்ச்சைக்குரிய விடயத்தில் விவாதங்கள் பல முனைகளில் நடைபெற்று வருகின்றன. படைப்பாளியின் சுதந்திரம் என்று சிலரும், இஸ்லாமியர்கள் எதிர்த்தால் உடனே தடை விதிக்கவேண்டுமா என்று சிலரும், முதலில் தடை என்ற செயலே தவறு என்று சிலரும் வாதிட்டு தடைக்கு எதிர்ப்பு காட்டுவதில் ஒன்றிணைகின்றனர். இது ஏதோ கருத்து/படைப்புச் சுதந்திரத்திற்கும்/ இஸ்லாமிய
உணர்வுகளுக்குமான ஈரினை/எதிர்மறையாக (Binary Opposition) கட்டமைக்கப்பட்டு விவாதிக்கப்படுகிறது.

பெண்களுக்கு எதிரான வன்முறையை நியாயப்படுத்தி எடுக்கும் ஒரு படத்தையோ, எழுதப்படும் கதையையோ, கட்டுரையையோ அல்லது எந்த ஒரு அநீதியையும் நியாயப்படுத்தி செய்யப்படும் காரியத்தையோ நாம் கருத்துச் சுதந்திரம் என்ற அளவுகோலை வைத்து அணுக முடியாது. கருத்து முதலில் கருத்தாக இருக்கவேண்டும், அறவுணர்வுடன் இருக்கவேண்டும், பொறுப்புணர்வுடன் இருக்கவேண்டும் அந்தக் கருத்தை அடக்குவதுதான் ஜனநாயக விரோதம் எனவே இது போன்ற விவாதத்தினால் எள்ளளவும் பயனில்லை. 

Friday, January 25, 2013

காஷ்மீர் பண்டிட்கள் வெளியேற்றப்பட்டதும் குஜராத் இனப் படுகொலையும்...

விஸ்வரூபம் படத்திற்கான முஸ்லிம்களின் எதிர்வினை குறித்துப் பலரும் கருத்துக்கள் சொல்லத் தொடங்கியுள்ளனர். ஒரு நண்பர் ‘ஓபன்’ இதழின் இணை ஆசிரியரும் இளம் பத்திரிக்கையாளருமான ராகுல் பண்டிதாவின் சமீபத்திய நூலின் பின்னணியில் சில கருத்துக்களைப் பதிவிட்டிருந்தார். காஷ்மீர்ப் பண்டிட்கள் காஷ்மீர்த் தீவிரவாதிகளால் வெளியேற்றப்பட்டதையும் குஜராத்தில் முஸ்லிம்களின் மீதான வன்முறையையும் அதில் ஒப்பிட்டிருந்தார்.

காஷ்மீர் பண்டிட்கள் வெளியேற்றப்பட்டதையும் குஜராத்தில் 2000 முஸ்லிம்கள் கொல்லப்பட்டு 2 லட்சம்பேர் அகதிகளாக்கப்பட்டதையும் ஒன்றாகச் சமப்படுத்திப் பார்க்க இயலாது. 

கமல்ஹாசனின் விஸ்வரூபம் தடை: சில கருத்துக்கள் - கோ.சுகுமாரன்


விஸ்வரூபம் திரைப்படம் தடை செய்யப்பட்டது குறித்து பல்வேறு கருத்துக்கள் வந்துள்ளன. ஒரு மனித உரிமை ஆர்வலன் என்ற முறையில் எந்த கருத்தையும் தடை செய்வதன் மூலம் எதிர்கொள்ள கூடாது என்ற கருத்துடையவன். ஆனால், முஸ்லிம்களின் எதிர்ப்பில் நியாயம் இருப்பதாகவே கருதுகிறேன். இப்படத்தை எதிர்க்கும் முஸ்லிம்கள் கூறும் காரணங்களில் முக்கியமானது ஒட்டுமொத்த முஸ்லிம்களும் தீவிரவாதிகள் என இப்படத்தில் சித்தரிப்பது.

இந்தியாவில் இந்து பாசிசம் தலைத் தூங்கத் துவங்கிய காலத்திலும், அதன் பின்னர் 1992ல் பாபர் மசூதி இடிக்கப்பட்டதும் முஸ்லிம் மக்களிடையே மிகப்பெரிய அதிருப்தியை ஏற்படுத்தின. அப்போது இந்திய ஜனநாயகத்தின் மீது நம்பிக்கையற்று போன முஸ்லிம் இளைஞர்கள் தீவிரவாதப் பாதையை தேர்வு செய்தனர். இதற்கு சர்வதேச அரசியலும் பின்புலமாக இருந்தது. அப்போதுதான் 'முஸ்லிம் தீவிரவாதம்' என்ற சொல்லாடல் புழகத்திற்கு வந்தது. இவற்றை அரசுகள் எதிர்க்கொண்ட விதமும், அது முஸ்லிம் சமூகத்தில் ஏற்படுத்திய விளைவுகள் பற்றியும் பிரிதொரு சந்தர்ப்பத்தில் காண்போம்.

Wednesday, January 23, 2013

சூரியப்புயலில் இருந்து தப்புமா பூமி? மே மாதம் தாக்க வருகிறது…!

உலகின் மூல ஒளியாக... ஒளிப்பிழம்பாக இருக்கும் சூரியனில் 11 ஆண்டுகளுக்கு பிறகு இப்போது ஒரு முக்கிய நிகழ்வு நிகழ இருக்கிறது. சூரிய புள்ளியும், சூரியப்புயலுமாக சூரியனில் ஏற்பட இருக்கும் மாற்றங்களால், பூமிக்கும் சில பாதிப்புகள் இருக்கும் என்கிறார்கள் விஞ்ஞானிகள்.

சூரிய புள்ளி என்றால் என்ன? என்ற கேள்வி இந்நேரத்தில் எழலா. 6 ஆயிரம் கெல்வின் மேற்புற வெப்ப நிலையைக் கொண்டுள்ள சூரியனில் 4 ஆயிரம் கெல்வின் வெப்பநிலைக்கும் குறைவாக இருக்கும் பகுதிகள் மங்கலாக தோன்றும் நிகழ்வே சூரியப்புள்ளிகள் என்றழைக்கப்படுகின்றன.

ஆர்.எஸ்.எஸ், பா.ஜ.க தீவிரவாத முகாம்கள் குறித்த ஆதாரங்களை வெளியிட தயார்! – திக்விஜய் சிங்

இந்தியாவில் ஆர்.எஸ்.எஸ்ஸும், பா.ஜ.கவும் நடத்தும் தீவிரவாத முகாம்கள் குறித்த ஆதாரங்களை வெளியிட தயார் என்று காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளரான திக்விஜய்சிங் கூறியுள்ளார்.

ஜெய்ப்பூர் காங்கிரஸ் கட்சி கூட்டத்தில் வைத்து இந்தியாவில் ஆர்.எஸ்.எஸ்ஸும், பா.ஜ.கவும் தீவிரவாத முகாம்களை நடத்திவருவதாகவும், நாட்டில் குண்டுவெடிப்புகளை நிகழ்த்திவிட்டு அவற்றை சிறுபான்மையினர் மீது பழிபோடுவதாகவும் மத்திய உள்துறை அமைச்சர் சுசில் குமார் ஷிண்டே கூறியிருந்தார். இதனால் பதட்டமடைந்த சங்க்பரிவாரம் அறிக்கைகளை வெளியிட்டு வருகிறது. இதற்கான ஆதாரங்களை ஷிண்டே வெளியிடவேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

காவி தீவிரவாதம்: சுஷில்குமார் ஷிண்டே மன்னிப்புக் கோர வேண்டிய அவசியம் இல்லை -

காவி தீவிரவாதம் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டே கூறிய கருத்துக்கு அடுக்கடுக்கான நிகழ்வுகள் உண்டே. அப்படிக் கூறியதற்காக அவர் வருத்தம் தெரிவிக்க வேண்டும் என்று பி.ஜே.பி. கூறுவது பொருட்படுத்தப்பட வேண்டிய ஒன்றல்ல என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள முக்கிய அறிக்கை வருமாறு:

ஆர்.எஸ்.எஸ். போன்ற இந்துத்துவா அமைப்புகள் இந்து பயங்கரவாதத்தினை முன்னிறுத்தி நடத்துவதாகவும், அதற்காக பயிற்சிகள் அளிப்பதாகவும் உள்துறை அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டே அவர்கள் கூறியிருப்பதை எதிர்த்து பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ்., அமைப்பினர் வானத்திற்கும் பூமிக்குமாக குதித்து ஆர்ப்பாட்டம் செய்கின்றனர்; அதற்கு அவர் மன்னிப்புக் கோர வேண்டும்; இல்லையேல் 24ஆம் தேதி கிளர்ச்சி, கண்டன ஆர்ப்பாட்டம் செய்வோம்; ஷிண்டே பதவி விலக வேண்டும் என்றும் உடனே ஆர்ப்பரித்துள்ளனர்!

Tuesday, January 22, 2013

விஷமாகும் உணவு… வீரியம் குறைந்து வரும் ஆண்கள்... அதிர்ச்சித் தகவல்

மாறிவரும் உணவுப்பழக்கத்தால் உலகம் முழுவதிலும் உள்ள ஆண்களின் வீரியம் குறைந்து வருவதாக பிரான்ஸ் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.இதன் காரணமாகவே குழந்தையில்லாத தம்பதிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது என்ற அதிர்ச்சித் தகவலையும் தெரிவிக்கின்றனர் ஆய்வாளர்கள். இன்றைய இளம் தலைமுறைகளில் பெரும்பாலோர் குழந்தை பெற்றுக்கொள்வதில் சிரமப்படுகின்றனர்.

லேப்டாப் அடிப்படை எதிர்பார்ப்புகள்.. (Laptop's basics...)

லேப்டாப் வாங்குவதற்குப் பதிலாக, டேப்ளட் பிசி ஒன்று வாங்கலாமா என்றும், லேப்டாப் வாங்குவதாக இருந்தால், என்ன என்ன அம்சங்களை நாம் கவனிக்க வேண்டும் “என்ன வாங்குவது?” என்ற கேள்வியைக் கேட்பதற்குப் பதிலாக, “என் தேவை என்ன?” என்ற கேள்வியை உங்களிடம் நீங்களே கேட்டுப் பதிலை எழுதிப் பாருங்கள். உங்களுடைய தேவை இணையபக்கங்களைக் காண்பதும், மின்னஞ்சல்களைப் படித்து, பதில் அளிப்பது மட்டுமே எனில், உங்களுக்கு டேப்ளட் பிசி மட்டும் போதும். இவை மட்டுமின்றி, வேறு சில முக்கிய பணிகளுக்கும், பள்ளிக் கல்வி, கல்லூரிப் பணி மற்றும் அன்றாட வாழ்க்கை மற்றும் அலுவலக வேலைகளுக்குக் கம்ப்யூட்டர் பயன்படுத்துவதாக இருந்தால், இன்றைய நிலையில் டேப்ளட் பிசிக்கள் நம் தேவையை முழுமையாக நிறைவேற்றாது. 

"மாவீரன் கர்னல் சவுகத் ஹயாத்" வீர வரலாறு

Freedom Fighter shaukat hayat –
 Indian Army Colonel

நாம் இந்தியர்கள்.... ஆனால் நமது சகோதரர் இவர் வரலாற்றில் இருந்து காவி கயவர்களால் மறைக்க பட்டது.... நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்? இந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்றில் ஆங்கிலேய ஏகாதிபத்தியப் படைகளை ஓடஓட விரட்டி இந்திய தேசியக் கொடியை முதன்முதலில் ஏற்றிய மாவீரன் கர்னல் சவுகத் ஹயாத் பற்றிய வீர வரலாறு இன்றைய இளைய தலைமுறையினரில் எத்தனைப் பேருக்கு தெரிந்திருக்கும்.

இந்திய சுதந்திரப் போரில் செறுகளமாடிய மாவீரர்கள் பற்றிய வரலாற்று நிகழ்வுகள் பல இந்த நாடு அறிந்தே உள்ளது. ஆனால் இரண்டாம் உலகப்போர் உலகையே இருகூறாக மாற்றியது. பிரிட்டன், அமெரிக்கா, சோவியத் யூனியன், பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளின் தலைமையில் நேசப்படைகளும், ஜெர்மனி, ஜப்பான், இத்தாலி உள்ளிட்ட நாடுகளின் தலைமையில் அச்சு நாடுகள் என்ற பெயரில் ஓர் அணியும் மிகப்பெரிய யுத்தத்தில் இறங்கின.

Sunday, January 20, 2013

ஆர்.எஸ்.எஸ் ரகசிய தீவிரவாத பயிற்சி முகாம்களை கண்டு பிடிக்க காடுகளில் தேடுதல் வேட்டை..!

இந்தியாவில் நடந்த தொடர் குண்டு வெடிப்புகளின் பின்னணியில் ஆர்.எஸ்.எஸ். மற்றும் அதன் துணை அமைப்புகள் இருந்து செயல்பட்டுள்ளன என்கிற உண்மை தேசிய புலனாய்வு துறை கண்டுபிடித்தது.

1). மலேகன் குண்டு வெடிப்பு: மும்பையிலிருந்து 300 கிலோ மீட்டர் தொலைவில உள்ள மலேகனில் செப்டம்பர் 8, 2006 - வெள்ளிக்கிழமை பகல் 2.00 மணியளவில் முஸ்லிம்கள் தொழுகை நடுத்தும் இடமும், அடக்கம் செய்யப்படும் கல்லறைகளுக்கு அருகில் நிகழ்த்தப்பட்ட தொடர் பயங்கர குண்டு வெடிப்பில் 38 பேர் உயிரிழந்தனர் 125க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். முடமாகினர். மலேகன் நகரமே ரத்தமயமானது பிய்ந்துப்போன சதைகளுடன் மனிதப் பிண்டங்கள் ஆங்காங்கே சிதறிக்கிடந்தன.

பேஸ்புக் : பாலியல் வன்முறையின் புதிய ஆயுதம் !



நண்பர்கள் வட்டத்தை பெருக்குகிறோம், எங்களுடன் எல்.கே.ஜி முதல் கல்லூரியில் படித்த அனைவரையும் இணைக்கிறோம்’ என்று நோக்கத்துடன் பேஸ்புக்கில் சேருபவர்கள் பின்னர் போலியான அடையாளங்களுடன் தமது நோக்கங்களை நிறைவேற்ற முனைகின்றனர். பதின்ம வயதினர் மட்டும் இன்றி, 13 வயதுக்கு குறைவான குழந்தைகள் கூட பெற்றோரின் துணையுடன், பொய்யான வயதைக் குறிப்பிட்டு பேஸ்புக்கில் தங்களை இணைத்துக்கொண்டு வாழ்க்கையில் இதைச்செய்தே ஆகவேண்டும் என்று கட்டாயத்தில் வாழ்கின்றனர்.