Wednesday, March 30, 2011

தேர்வு அறையில் செய்ய வேண்டியது என்ன...?

தேர்வுகள் நடக்கும் மாதம் என்றால் அது மார்ச், ஏப்ரல்தான். தற்போது பத்தாம் வகுப்பு தேர்வுகள் நடந்து வருகின்றன. தேர்வு நேரத்திற்கு சற்று முன்பு தேர்வு அறையில் மாணவர்கள் பலரும் பாடங்களைப் பற்றி பேசுவதும், புத்தகங்கள் படிப்பதாகவும் இருப்பார்கள். ஆனால், இறுதி நேரத்தில் பாடங்களை படிப்பது மன அமைதியை இழக்கச் செய்யும். உங்களுக்கான நாற்காலியில் அமைதியாக அமருங்கள்.

சிறிது நேரம் எந்த விதமான குழப்பமும் இன்றி மனதை அமைதியாக வைத்திருங்கள். நண்பர்களுடன் வீண் விவாதம், அரட்டையும் உங்களது சக்தியை இழக்கச் செய்து விடும். நீங்கள் படிக்காத அல்லது உங்களுக்கு சற்று கடினமான பதில்களை இறுதி நேரத்தில் படிக்க வேண்டாம். இது தேவையில்லாத டென்ஷனை ஏற்படுத்திவிடும்.

குறைந்த செலவில் MBA, M.E/ M.Tech , MCA படிக்க TANCET நுழைவு தேர்வு

தமிழகத்தில் உள்ள  அரசு கல்லூரிகள், அண்ணால் பல்கலை கழககங்கள், அரசு உதவி பெரும் கல்லூரிகள், தனியார் கல்லூரிகளில்  MBA/ MCA/ M.E/ M.Tech/ M.Arch./ M.Plan படிக்க அண்ணா பல்கலை கழகம் வருடம் தோறும் TANCET என்ற நுழைவு தேர்வை நடத்துகின்றது. இந்த தேர்வை எழுதி, நல்ல மதிப்பெண் எடுப்பதின் மூலம் மிக குறைந்த கட்டணத்தில் MBA/ MCA/ M.E/ M.Tech/ M.Arch./ M.Plan படிக்கலாம் . இதில் முஸ்லீம்களுக்கு-3.5%-இட-ஒதுத்கீடு-உள்ளது. 

Tuesday, March 29, 2011

காலை உணவை தவிர்க்காதீர்கள்!

பெரும்பாலானவர்களுக்கு தெரிந்திருக்கும். ஆனால் ஒவ்வொரு வேளை உணவும் உடலுக்கு எப்படி அவசியமாகிறது என்பது உங்களுக்குத் தெரியுமா?

காலை
காலை உணவு உடலுக்கும், மூளைக்கும் சிறந்த ஊட்டச்சத்தாகும். காலை உணவு சாப்பிடாவிட்டால் மூளை சுறுசுறுப்பை இழப்பதால் நீங்களும் சோர்வடைந்து விடுவீர்கள். மேலும் இடைவேளை நேரத்தில் தேவையில்லாமல் எதையாவது சாப்பிடத் தூண்டும். பிறகு மதியசாப்பாடு சாப்பிட வேண்டிய நேரத்தில் பசியின்மையும், சலிப்பும் ஏற்படும். இதனால் மதிய சாப்பாடும் தடைப்படலாம்.

குவைத் புழுதி புயல் புகைப்படங்கள்...

கடந்த 25.03.2011  வெள்ளிக்கிழமையன்று குவைத்தில் ஏற்பட்ட அதி பயங்கர புழுதிப்புயல் புகைப்படங்கள் உங்கள் பார்வைக்கு......

ஞாபக சக்தியை அதிகரிக்கும் உணவுப்பொருட்கள்!


அச்சச்சோ! மறந்து போச்சே... இன்று நாம் அதிகமாகப் பயன்படுத்தும் வாக்கியம் அநேகமாக இதுவாகத்தான் இருக்கும். இதற்குக் காரணம் நினைவாற்றல் இல்லாதது தான். நினைவாற்றல் அதிகரிக்க பாஸ்பரஸ் மற்றும் குளுட்டாமிக் அமிலம் உள்ள உணவுப் பொருட்களைத் தொடர்ந்து சாப்பிட வேண்டும்...வாரம் ஒருமுறை வல்லாரைக் கீரையை உணவில் சேர்த்து வருவது நல்லது. இதுவும் ஞாபக சக்தியை அதிகரிக்கும்.  இக்கீரையை வெயிலில் காயவைத்துப் பொடியாக்கிக்கொண்டு, தினமும் அரை தேக்கரண்டியைப் பாலுடன் சேர்த்து அருந்தி வந்தால் பிள்ளைகள் மற்றும் பெரியவர்கள் நல்ல நினைவாற்றலுடன் சுறுசுறுப்பாகத் திகழ்வார்கள். கீரை கிடைக்காதவர்கள் வல்லாரை கேப்ஸ்யூல்களைப் பயன்படுத்தலாம்.

பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பும் பெற்றோர்களே.........

 திருமண வயது ஆணுக்கு 21, பெண்ணுக்கு 18 என்கிறது திருமணச்சட்டம். திருத்தப்பட்ட திருமணச் சட்டமோ ஆணுக்கு 23, பெண்ணுக்கு 21 வயது என்கிறது. இருவீட்டார் ஒப்புதலுடன் ஏற்பாடு செய்யப்படும் திருமணங்கள், பெரும்பாலும் சட்டப்படி நடக்கிறது. ஆனால் காதல் வயப்படுவோர், வயது வித்தியாசம் ஏதும் பார்ப்பதில்லை. பெற் றோர் எதிர்ப்பால் தாங்கள் பிரிக்கப்பட்டுவிடுமோ என்ற அச்சத்தில், வீட்டிலிருந்து "ஓடி' திருமணம் செய்து கொள்கின்றனர். பிள்ளைகளை காணாத பெற்றோர் போலீசில் புகார் அளிக்கும்போது, பல நாள் தேடலுக்கு பின் "காதலர்களை' பிடித்து அழைத்து வருகின்றனர்.

தாய்மார்களே உஷார் !

 ''அம்மாவுக்கு வேலை இருக்கு... நீ அமைதியா டி.வி பார்த்துட்டு இரு... நான் வேலை முடிச்சுட்டு வந்துடுறேன்!'' என்று தங்கள் குழந்தைகளை டி.வி பெட்டிகள் / டி.வி.  முன் அமரவைத்துப் பழகும் உம்மாக்கள் கொஞ்சம் காலம் கழித்து ஏன் இப்போவே, ''என்னோட புள்ள / மவ என்கிட்ட சரியாவே ஒட்ட மாட்டேங்குது எப்பவும் அடம் பிடிச்சுகிட்டு அழுதுட்டே இருக்கு. சில விஷயங்களில் கோபமும் படுது டி.வி போட்டாதான் அழுகையை நிற்கிறது!'' என்று புலம்புவார்கள். நம்புவதற்கு கஷ்டமாகத்தான் இருக்கும். ஆனால், நம்புங்கள்... விவரம் அறியும் முன்னரே டி.வி-யின் அரவணைப்பில் வளரும் குழந்தைகளுக்கு, எதிர் காலத்தில் பெற்றோர் மீது பாசப் பிணைப்போ, நேச அரவணைப்போ இருக்காதாம்.

தலைமுடி உதிர்வதை தடுக்க…

சராசரியாக ஒவ்வொருவரின் தலையிலும் ஒரு லட்சத்திற்கும் அதிகமான முடிகள் காணப்படும். முடி உதிர்வது என்பது பெண்கள், ஆண்கள் என இருபாலருக்கும் உள்ள பொதுவான பிரச்னை. இந்த முடி உதிரும் பிரச்னை ஏற்படும் போது, நாம் அனைவருமே மருந்து, மாத்திரைகள் எடுத்துக் கொள்வதில் தான் அதிக அக்கறை காட்டுகிறோம். இயற்கையில் கிடைக்கும் சில பொருட்களைக் கொண்டும் கூந்தல் உதிர்வதைத் தடுக்க முடியும். இதோ சில டிப்ஸ்

Monday, March 28, 2011

லிபியா மீதான அமெரிக்க ஆக்கிரமிப்பு! அதிர்ச்சியூட்டும் உண்மைகள்!!

நன்றி: வினவு
நேட்டோ படைகளின் சீறும் போர்க்கப்பல்கள் மத்தியதரைக் கடலின் நீரைக் கொதிநிலைக்குக் கொண்டு சென்றிருக்கின்றன. உலக ரவுடியாக தன்னைத் தானே நியமித்துக் கொண்டிருக்கும் அமெரிக்காவின் தலைமையில் நேட்டோ படைகள் லிபியாவின் தலைநகர் திரிப்போலியின் மேல் குண்டு வீச்சு நடத்தி வருகின்றன. அதில் வழக்கம் போல அப்பாவி மக்கள் பலர் கொல்லப்பட்டுள்ளனர். கடந்த நாற்பத்தியிரண்டு வருடங்களாக லிபியாவின் சர்வாதிகாரியாய் இருந்து வரும் முவாம்மர் கடாஃபியை எதிர்த்து ஜனநாயகத்துக்காகப் போராடி வரும் ஜனநாயக வீரர்களுக்கு உதவும் பொருட்டு 'மனிதாபமானத்தின்' அடிப்படையில் தான் தாங்கள் இந்தத் தாக்குதலைத் துவங்கியதாக நேட்டோ நாடுகள் அறிவித்துள்ளன.
அமெரிக்க மனிதாபிமானத்தின் கந்தக நெடியை லிபியர்களுக்குப் பரிசளிக்கும் விதமாய்க் கடந்த 19-ஆம் தேதி நேட்டோ நாடுகளின் நாசகாரிக் கப்பல்களில் இருந்து லிபியாவை நோக்கி நூற்றுக்கணக்கான தொமொஹாக் ஏவுகணைகள் பறந்து சென்றன.

Tuesday, March 22, 2011

ஹேக்கிங் என்றால் என்ன?

இணையத்தை நீங்கள் பயன்படுத்துகிறீர்கள் என்றால் "ஹேக்கிங்" (Hack) என்ற வார்த்தை அறியாமல் இருக்க மாட்டீர்கள் அப்படி நீங்கள் இதை தெரிந்து இருக்கவில்லை என்றால் இணையத்தை பயன்படுத்த போதுமான அறிவை நீங்கள் இன்னும் பெறவில்லை என்பதே நிஜம். எனவே ஹேக்கிங் பற்றி தெரியாதவர்களும் தெரிந்தவர்களும் கண்டிப்பாக படிக்க வேண்டிய இடுகை இதுவாகும்உங்களை அறியாமல் உங்கள் மூலமாகவே அல்லது உங்களுக்குத் தெரியாமல் உங்கள் மின்னஞ்சல், வங்கி மற்றும் பல இணையக் கணக்குகளின் கடவுச்சொல்லை (Password) திருடுவதே ஹேக்கிங் ஆகும்.

Monday, March 21, 2011

இந்திய அரசின் இணைய தளங்கள்..!



தகவல் தொழிற்நுட்பத் துறையில் அசுர வேகத்தில் வளர்ந்து வருகின்ற இந்தியாவில் நம் அரசாங்கத்தின்  கீழ் செயல்படும்   அனைத்து      துறைகளுக்கும்   இணைய வசதி    மூலமாக   நாம்  தகவல்களை  அறிய  முடியும், அல்லது   இந்த    தளத்திற்கு    சென்று  நமக்கு  தேவையான  அனைத்து  வேலைகளையும்  விரைவாக  செய்து முடிக்க முடியும்.
Certificates

Sunday, March 20, 2011

Toll Free Numbers in India



Airlines
Indian Airlines - (1800 180 1407)
Jet Airways - (1800 22 5522)
Spice Jet - (1800 180 3333)
Air India -- (1800 22 7722)
Kingfisher - (1800 180 0101)..........

இந்திய முஸ்லிம்களின் அவல நிலையும் - அதற்கான தீர்வும்!!!

  ந்தியநாடு சுதந்திரம் பெற்ற பின்பு இன்றுவரையுள்ள எந்த ஒரு அரசும் இந்திய முஸ்லிம்களுக்கு அவர்களுக்குரிய உரிமைகளை வழங்க எந்த ஒரு முயற்சியும் மேற்கொண்டதில்லை என்பதே உண்மை. இந்திய பாகிஸ்தான் பரிவினையின்போது முஹம்மது அலி ஜின்னா மாத்திரம் பிரிவினைக்கு ஆதரவு அளித்தபோது, மௌலானா அபுல்கலாம் ஆஸாத், ஜாஹிர் ஹுஸைன், பக்ருதீன் அலி அஹமது போன்ற முஸ்லிம் பெரும் புள்ளிகள் இந்திய பாகிஸ்தான் பிரிவினைக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்திய மக்களுடன் கைகோர்த்து கொண்டார்கள்.
தனிமனிதராக நின்ற முஹம்மது அலி ஜின்னா, தான் நினைத்ததைச் சாதித்துக் கொண்டார். ஆனால் இந்திய மக்களுடன் கைகோர்த்த மௌலானா அபுல்கலாம் ஆஸாத், ஜாஹிர் ஹுஸைன், பக்ருதீன் அலி அஹமது போன்ற முஸ்லிம் பெரும் புள்ளிகள் உள்ளடங்கிய இந்திய முஸ்லிம் சமுதாயம் சாதித்தது என்ன என்பதை இன்றைக்கும் நாம் கண்கூடாக கண்டு கொண்டிருக்கிறோம்........

பெற்றோரின் மகிமை...!


பெற்றோர்களின் பராமரிப்பு.

ஒருவர் திருமனத்திற்குப் பிறகு குழந்தை பாக்கியத்தைப் பெறவில்லை என்றால் அவர்படும் வேதனையை வரையருக்க முடியாது. குழந்தையைப் பெறுவதற்காக அவர் எவ்வளவு காசு வேண்டுமானாலும் செலவு செய்வார். காரணம் குழந்தை இருந்தால் பாச மழையைப் பொழிய முடியும் என்பது தான். தனக்கு குழந்தை உருவாகிறது என்ற செய்தி தெரிய வந்தால் அன்றிலிருந்து அந்தக் குழந்தையை சுமக்கும் தாயுடைய தியாகம் ஆரம்பமாகிறது.தன் குழந்தை நல்ல முறையில் வளர வேண்டும் என்பதற்காக எத்தனையோ உணவு வகைகளைத் தியாகம் செய்கிறாள்.தான் விரும்பிய உணவை சாப்பிட முடியாத நிலை அவளுக்கு ஏற்படுகிறது.

குடும்பத்தில் அனைவரும் மகிழ்சியாக இருக்க வேண்டும் என்பதற்காக ஒரு சுற்றுலா சென்றாலும் அந்த பயணத்தில் அவள் இடம் பெற மாட்டாள் இடம் பெறவும் முடியாது. வயிற்றில் இருக்கும் தன் குழந்தைக்கு ஏதும் நடந்து விடக்கூடாது என்பதற்காக இவ்வாறு பல சிரமங்களுக்கு மத்தியில் ஒரு குழந்தையைப் பெற்று எடுத்தால் அந்தக் குழந்தை மீது அவர்கள் காட்டும் பாசத்தின் அளவைத்தான் நாம் வர்ணிக்க முடியுமா....

Saturday, March 19, 2011

ஏன் இளைத்தாய் என் எழுச்சிமிகு சமுதாயமே?

(டாக்டர் ஏ.பீ. முகம்மது அலி, பிஎச்.டி, ஐ.பீ.எஸ்.(ஓ)



பேட்டை முதலாளி என்று செல்லமாக அழைக்கப்பட்ட தோல் வியாபாரத்தில் கொடிகட்டிப் பிறந்த கண்ணிய மிகு காயிதே மில்லத் தனது உடல், பொருள், ஆவி அத்தனையும் இஸ்லாமிய சமூகத்திற்காக அர்ப்பணித்து தமிழகத்தில் மட்டுமல்லாது இந்தியாவிலும் தலை நிமிர்ந்து நிற்க வைத்த பெருமை படைத்த அப்பழுக்கற்ற அரசியல் வாதிமட்டுமல்ல நாடடுப்பற்று மிக்க புகழ் மிக்கவர். தமிழகத்தில் மூதறிஞர் ராஜாஜி, பகுத்தறிவு பகலவன் பெரியார், ஏழைப்பங்காளன் காமராஜர் போன்றவர்களுடன் இணையாகப் பேசப்பட்டவர் காயிதே மில்லத் அவர்கள்.
 1967 ஆம் ஆண்டு நான் புதுக்கல்லூரி மாணவனாக இருந்த போது பேரறிஞர் அண்ணா அவர்கள் முதல்வர் பொருப்பினை ஏற்ற போது குரோம்பேட்டை வீடு தேடிச் சென்று வாழ்த்துப் பெரும் அளவிற்கு உயர்ந்தவர் காயிதே மில்லத். தனது நீண்ட மேலாடையில்(ஓவர்கோட்) மெலிந்த உருவமானாலும் உயர்நது விளங்கினாரர்.

உடல் பருமன் மற்றும் தொப்பை பிரச்சனை தலையாய பிரச்சனை.......!

 உலகம் முழுவதுமே இன்று ஒபிசிட்டி எனப்படும் உடல் பருமன் மற்றும் தொப்பை பிரச்சனை தலையாய பிரச்சனையாக உருவெடுத்துள்ளது.  இதற்கு மூல காரணம் கொழுப்பு சத்து உடலில் அதிகம் சேர்வதுதான். இத்தகைய கொழுப்பை குறைப்பதற்காக நீங்கள் ஆலிவ் எண்ணை, சோயா... என்று தேடிப்போக வேண்டாம்.  கொழுப்பை குறைக்கக் கூடிய ஆற்றல் நமது இந்திய உணவுகளிலேயே இருக்கிறது என்கிறார்கள் ஆயுர்வேத மருத்துவர்கள்.

இனிப்பு, புளிப்பு, உப்பு, காரம், கசப்பு மற்றும் உவர்ப்பு என அனைத்து சுவைகளையும் உங்களது உணவில், நாளொன்றுக்கு ஒரு சுவை என்ற விகிதத்திலாவது சேர்த்துக்கொள்ளவேண்டும் என்று கூறுகிறது ஆயுர்வேதம்.  உங்களது எடையை குறைத்து ஆரோக்கியத்தை மேம்படுத்தும் சில உணவு வகைகள் கீழே.........

செளதியில் பணி புரிபவர்களுக்கு


சௌதி அரேபிய நாட்டு சட்டப்படி இங்கு பணி புரிபவர்கள் அனைவரும் அவர்களுடைய வலது கை விரல் ரேகைகளை பதிவு செய்துக்கொள்வது கட்டாயமாகும். அப்படி பதிந்தவர்கள் தங்களுடைய விபரங்களை கீழ் காணும் இந்த தளத்தில் சென்று சரி பார்த்துக் கொள்ளலாம்.



First of all click the abovee Government web site to check your finger prints registered and updated with Zawazat or not. After open it follow the 5 below simple steps to find the result.

 1) Click the E-Services Tab on top line
2) Select and click the "Passports" and then
3) select and click "Public Query Finger Print Enrollment" to open the page
4) Type your Iqama number in the blank space of "Identity Number"
5) Click on "View" and there you go...result will appear. 

மின்மினிப் பூச்சிகள் ஒளிருவது எப்படி..?


மின்மினி பூச்சிகளை ஆங்கிலத்தில் Firefly என்கிறோம். மின்மினி பூச்சிகள் Coleoptera என்ற குடும்பத்தைச் சேர்ந்த வண்டுகள் ஆகும். மின்மினி பூச்சிகளில் உலகம் முழுதும் சுமார் 2000 சிற்றினங்கள் உள்ளன.மின்மினி பூச்சிகள் முட்டை புழு மற்றும் முதிர்ந்த வண்டுகள் என எல்லாமே ஒளிரும் திறன் வாய்ந்தவை மின்மினிப் பூச்சியிடமிருந்து வெளிச்சம் தோன்றுவது எப்படி? என்ற கேள்வி பல நாட்களாக எனக்குள் இருந்தது அதற்கான விடையை தேடி எடுத்து உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.