Tuesday, January 29, 2013

பொது அறிவு (General Knowledge) பகுதி - 9

*1581-ம் ஆண்டு லண்டன் டவர் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டிருந்த தாமஸ் ஓவர் பரி என்பவருக்கு கொடுக்கப்பட்ட உணவு என்ன தெரியுமா?... 

நைட்ரிக் அமிலம், விஷச்செடிகள், அரைக்கப்பட்ட வைரம். இந்த மூன்றில் எந்த ஒன்றைச் சாப்பிட்டாலும் மனிதன் இறந்து விடுவான். ஆனால் இந்தக் கைதியோ இதையெல்லாம் சாப்பிட்டு 100 நாட்கள் வரை உயிர் வாழ்ந்திருக்கிறார். 

****இங்கிலாந்தில் ஆடுகளை மேய்ப்பதற்கு ஆட்கள் கிடைப்பது அரிதாக உள்ளது. எனவே ஆடு மேய்க்க நாய்களை பயன்படுத்துகின்றனர். நாய்களுக்கு பயிற்சி அளித்து மேய்ப்பனாக அனுப்புகின்றனர். இவை காலையில் ஆடுகளை ஓட்டிச் சென்று மாலையில் பத்திரமாக திருப்பிக் கொண்டு வந்து சேர்க்கின்றன. இப்படி ஒரு நாய், இரண்டு நாய் அல்ல 2 லட்சம் நாய்கள் மேய்ப்பனாக வேலை செய்கின்றன. ஒரு நாய் 12 ஆட்களின் வேலையைச் செய்கின்றன என ஆட்டு மந்தையின் எஜமானர்கள் கூறுகிறார்கள்.

பொது அறிவு (General Knowledge) பகுதி - 33


* சிலந்திகள் ஒரு வார காலம் வரை உணவு இல்லாமல் வாழ்கின்றன. 

* மண்புழுவிற்கு 5 ஜோடி இதயங்கள் உள்ளன. 

* தேனீயால் பச்சை, நீலம், ஊதா நிறங்களை பிரித்தறிய முடியும். 

* பூச்சி இனங்களில் தும்பியின் கண்கள் கூர்மையானவை. 

* பட்டாம் பூச்சிக்கு நூரையீரல் இல்லை. அதன் வயிற்றுப் பகுதியில் உள்ள `ஸ்பிராக்கிள்' என்னும் துளைகள் வழியாக சுவாசிக்கின்றன. 

* ஆண், பெண் இரண்டின் இனப் பெருக்க உறுப்புகளும் நத்தையில் காணப் படுகிறது. இதனால் அவை ஹெர்மப்ரோடைட்ஸ் என்று அழைக்கப்படுகிறது. 

Sunday, January 27, 2013

குண்டுவெடிப்பை படமாக்க திராணி இல்லாதவர்கள்.....

இந்தியாவில் நடைபெற்ற பலகுண்டு வெடிப்பு சம்பவங்களை வெளிக்கொண்டு வர திராணி இல்லாதவர்கள்…இதணை மையாமாக கொண்டு படம் எடுத்து வெளியிட திராணி இல்லாதவர்கள்…ஆப்கானில் நடக்கும் சம்பவங்களை மையமாக கொண்டு படம் எடுப்பதன் காரணம் என்னவோ??? 

1) தீவிரவாதத்தை இந்த நாட்டில் அரங்கேற்றுவது யார் ?
2) சம்ஜயோதா எக்ஸ்ப்ரஸில் குண்டு வைத்தவன் யார் ?
3) சபர்மதி எக்ஸ்ப்ரஸில் குண்டு வைத்தவன் யார் ?
4) மக்கா மஸ்ஜிதில் குண்டு வைத்தவன் யார் ?
5) அஜ்மீர் தர்காவில் குண்டு வைத்தவன் யார் ?
6) கோவாவில் குண்டு வெடிப்பு நடத்தியவன் யார் ?
7) மாலேகானில் குண்டு வைத்தவன் யார் ?
8) நாடெங்கும் குண்டு வைத்து விட்டு அந்த பழியை முஸ்லிம்கள் மீது போடுபவன் யார் ?
9) குஜராத்தில் 3000 முஸ்லிம்களை கொன்று குவித்தவன் யார் ?
10) நாடு முழுவதும் கலவரத்தை நடத்துபவன் யார் ?

ஏன் இந்த ‘விஷ்வரூபம்’...? மனம் திறக்கிறார் படத்தை தணிக்கை செய்த ஹசன் ஜின்னா

எரிகின்ற தீயில் எண்ணெய் ஊற்றாமல் அதை அணைப்பதற்குத் தண்ணீர் குடம் ஏந்தும் கைகள் தேவைப்படுகின்றன. விஸ்வரூபம் படம் குறித்து தற்போது எழுந்துள்ள சர்ச்சைகள், விவாதங்கள், கண்டனங்கள் அதன் எதிரொலியாக விதிக்கப்பட்டுள்ள தடை இவற்றின் காரணமாக, அந்தப் படத்தைத் தணிக்கை செய்த உறுப்பினர்களில் நானும் ஒருவன் என்பதால் என்னை பற்றிய விமர்சனங்கள் ஊடகங்களில் வெளிப்படுகின்றன.

தடையை நீக்கக்கோரும் வழக்கு தற்போது உயர்நீதிமன்றத்தில் விசாரணையில் இருப்பதாலும், அதுபோலவே, சென்சார் விதிமுறைகளின்படியும், படத் தணிக்கையில் ஈடுபட்டவர்கள் தணிக்கையின் போது நடந்த விவாதத்தையோ அல்லது படம் குறித்த விமர்சனத்தையோ தெரிவிக்கக்க்கூடாது என்பதாலும் நான் சட்டவிதிகளுக்கும் நீதிமன்ற நடைமுறைகளுக்கும் உட்பட்டே கருத்துகளைத் தெரிவிக்க முடியும்.

ஹாலிவுட்டில் பட வாய்ப்பும்,ஆஸ்கர் விருதும்......

இஸ்லாத்தை அவமதித்து படம் எடுத்தால் ஹாலிவுட்டில் பட வாய்ப்பும்,ஆஸ்கர் விருதும் கிடைக்குமா? வழக்கமான கமல் படங்களை போல இதிலும் எங்கெங்கும் எல்லா காட்சிகளிலும் நீக்கமற நிறைந்திருக்கும் பிராமண வாடை.. பேச்சு, பெயர்கள், கலாசாரம் என்று சகலத்திலும் பிராமண நெடி. வெள்ளைக்காரனை வெற்றிகரமாக காப்பியடித்து பெருமைப்படுவது பைத்தியக்காரத்தனம்.

திரைக்கதையிலும் பெரிய சாமர்த்தியம் இல்லை.. பார்த்து பார்த்து புளித்த போன ஹாலிவுட் முறைகள்.. குறிப்பாக நம்மவர்களை ஈர்க்க போவது ஒரு காட்சி.. தொழுகை செய்வதாக சொல்லி கண்ணிமைக்கும் நேரத்தில் அத்துணை பேரையும் துவம்சம் செய்யும் காட்சி.. அதிலும் குறிப்பாக நொடி நேரத்தில் செய்த அசகாய சண்டையை Slow Motion ல் விளக்குவது.. ஆனால் இது Sherlock Holmes (2009) படத்தில் வரும் குத்துசண்டை காட்சியின் அப்பட்டமான காப்பி.. மேலும் அது தேவைப்படும் அளவுக்கு இது ஒன்றும் ஜாக்கிசான், ப்ரூஸ்லீயின் அதிவேக சண்டை இல்லை..

Saturday, January 26, 2013

உலக நாயகனிடம் சில கேள்விகள்!....!

விஸ்வரூபம் படத்திற்கு தடை விதிக்கப்பட்ட சர்ச்சைக்குரிய விடயத்தில் விவாதங்கள் பல முனைகளில் நடைபெற்று வருகின்றன. படைப்பாளியின் சுதந்திரம் என்று சிலரும், இஸ்லாமியர்கள் எதிர்த்தால் உடனே தடை விதிக்கவேண்டுமா என்று சிலரும், முதலில் தடை என்ற செயலே தவறு என்று சிலரும் வாதிட்டு தடைக்கு எதிர்ப்பு காட்டுவதில் ஒன்றிணைகின்றனர். இது ஏதோ கருத்து/படைப்புச் சுதந்திரத்திற்கும்/ இஸ்லாமிய
உணர்வுகளுக்குமான ஈரினை/எதிர்மறையாக (Binary Opposition) கட்டமைக்கப்பட்டு விவாதிக்கப்படுகிறது.

பெண்களுக்கு எதிரான வன்முறையை நியாயப்படுத்தி எடுக்கும் ஒரு படத்தையோ, எழுதப்படும் கதையையோ, கட்டுரையையோ அல்லது எந்த ஒரு அநீதியையும் நியாயப்படுத்தி செய்யப்படும் காரியத்தையோ நாம் கருத்துச் சுதந்திரம் என்ற அளவுகோலை வைத்து அணுக முடியாது. கருத்து முதலில் கருத்தாக இருக்கவேண்டும், அறவுணர்வுடன் இருக்கவேண்டும், பொறுப்புணர்வுடன் இருக்கவேண்டும் அந்தக் கருத்தை அடக்குவதுதான் ஜனநாயக விரோதம் எனவே இது போன்ற விவாதத்தினால் எள்ளளவும் பயனில்லை. 

Friday, January 25, 2013

காஷ்மீர் பண்டிட்கள் வெளியேற்றப்பட்டதும் குஜராத் இனப் படுகொலையும்...

விஸ்வரூபம் படத்திற்கான முஸ்லிம்களின் எதிர்வினை குறித்துப் பலரும் கருத்துக்கள் சொல்லத் தொடங்கியுள்ளனர். ஒரு நண்பர் ‘ஓபன்’ இதழின் இணை ஆசிரியரும் இளம் பத்திரிக்கையாளருமான ராகுல் பண்டிதாவின் சமீபத்திய நூலின் பின்னணியில் சில கருத்துக்களைப் பதிவிட்டிருந்தார். காஷ்மீர்ப் பண்டிட்கள் காஷ்மீர்த் தீவிரவாதிகளால் வெளியேற்றப்பட்டதையும் குஜராத்தில் முஸ்லிம்களின் மீதான வன்முறையையும் அதில் ஒப்பிட்டிருந்தார்.

காஷ்மீர் பண்டிட்கள் வெளியேற்றப்பட்டதையும் குஜராத்தில் 2000 முஸ்லிம்கள் கொல்லப்பட்டு 2 லட்சம்பேர் அகதிகளாக்கப்பட்டதையும் ஒன்றாகச் சமப்படுத்திப் பார்க்க இயலாது. 

கமல்ஹாசனின் விஸ்வரூபம் தடை: சில கருத்துக்கள் - கோ.சுகுமாரன்


விஸ்வரூபம் திரைப்படம் தடை செய்யப்பட்டது குறித்து பல்வேறு கருத்துக்கள் வந்துள்ளன. ஒரு மனித உரிமை ஆர்வலன் என்ற முறையில் எந்த கருத்தையும் தடை செய்வதன் மூலம் எதிர்கொள்ள கூடாது என்ற கருத்துடையவன். ஆனால், முஸ்லிம்களின் எதிர்ப்பில் நியாயம் இருப்பதாகவே கருதுகிறேன். இப்படத்தை எதிர்க்கும் முஸ்லிம்கள் கூறும் காரணங்களில் முக்கியமானது ஒட்டுமொத்த முஸ்லிம்களும் தீவிரவாதிகள் என இப்படத்தில் சித்தரிப்பது.

இந்தியாவில் இந்து பாசிசம் தலைத் தூங்கத் துவங்கிய காலத்திலும், அதன் பின்னர் 1992ல் பாபர் மசூதி இடிக்கப்பட்டதும் முஸ்லிம் மக்களிடையே மிகப்பெரிய அதிருப்தியை ஏற்படுத்தின. அப்போது இந்திய ஜனநாயகத்தின் மீது நம்பிக்கையற்று போன முஸ்லிம் இளைஞர்கள் தீவிரவாதப் பாதையை தேர்வு செய்தனர். இதற்கு சர்வதேச அரசியலும் பின்புலமாக இருந்தது. அப்போதுதான் 'முஸ்லிம் தீவிரவாதம்' என்ற சொல்லாடல் புழகத்திற்கு வந்தது. இவற்றை அரசுகள் எதிர்க்கொண்ட விதமும், அது முஸ்லிம் சமூகத்தில் ஏற்படுத்திய விளைவுகள் பற்றியும் பிரிதொரு சந்தர்ப்பத்தில் காண்போம்.

Wednesday, January 23, 2013

சூரியப்புயலில் இருந்து தப்புமா பூமி? மே மாதம் தாக்க வருகிறது…!

உலகின் மூல ஒளியாக... ஒளிப்பிழம்பாக இருக்கும் சூரியனில் 11 ஆண்டுகளுக்கு பிறகு இப்போது ஒரு முக்கிய நிகழ்வு நிகழ இருக்கிறது. சூரிய புள்ளியும், சூரியப்புயலுமாக சூரியனில் ஏற்பட இருக்கும் மாற்றங்களால், பூமிக்கும் சில பாதிப்புகள் இருக்கும் என்கிறார்கள் விஞ்ஞானிகள்.

சூரிய புள்ளி என்றால் என்ன? என்ற கேள்வி இந்நேரத்தில் எழலா. 6 ஆயிரம் கெல்வின் மேற்புற வெப்ப நிலையைக் கொண்டுள்ள சூரியனில் 4 ஆயிரம் கெல்வின் வெப்பநிலைக்கும் குறைவாக இருக்கும் பகுதிகள் மங்கலாக தோன்றும் நிகழ்வே சூரியப்புள்ளிகள் என்றழைக்கப்படுகின்றன.

ஆர்.எஸ்.எஸ், பா.ஜ.க தீவிரவாத முகாம்கள் குறித்த ஆதாரங்களை வெளியிட தயார்! – திக்விஜய் சிங்

இந்தியாவில் ஆர்.எஸ்.எஸ்ஸும், பா.ஜ.கவும் நடத்தும் தீவிரவாத முகாம்கள் குறித்த ஆதாரங்களை வெளியிட தயார் என்று காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளரான திக்விஜய்சிங் கூறியுள்ளார்.

ஜெய்ப்பூர் காங்கிரஸ் கட்சி கூட்டத்தில் வைத்து இந்தியாவில் ஆர்.எஸ்.எஸ்ஸும், பா.ஜ.கவும் தீவிரவாத முகாம்களை நடத்திவருவதாகவும், நாட்டில் குண்டுவெடிப்புகளை நிகழ்த்திவிட்டு அவற்றை சிறுபான்மையினர் மீது பழிபோடுவதாகவும் மத்திய உள்துறை அமைச்சர் சுசில் குமார் ஷிண்டே கூறியிருந்தார். இதனால் பதட்டமடைந்த சங்க்பரிவாரம் அறிக்கைகளை வெளியிட்டு வருகிறது. இதற்கான ஆதாரங்களை ஷிண்டே வெளியிடவேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

காவி தீவிரவாதம்: சுஷில்குமார் ஷிண்டே மன்னிப்புக் கோர வேண்டிய அவசியம் இல்லை -

காவி தீவிரவாதம் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டே கூறிய கருத்துக்கு அடுக்கடுக்கான நிகழ்வுகள் உண்டே. அப்படிக் கூறியதற்காக அவர் வருத்தம் தெரிவிக்க வேண்டும் என்று பி.ஜே.பி. கூறுவது பொருட்படுத்தப்பட வேண்டிய ஒன்றல்ல என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள முக்கிய அறிக்கை வருமாறு:

ஆர்.எஸ்.எஸ். போன்ற இந்துத்துவா அமைப்புகள் இந்து பயங்கரவாதத்தினை முன்னிறுத்தி நடத்துவதாகவும், அதற்காக பயிற்சிகள் அளிப்பதாகவும் உள்துறை அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டே அவர்கள் கூறியிருப்பதை எதிர்த்து பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ்., அமைப்பினர் வானத்திற்கும் பூமிக்குமாக குதித்து ஆர்ப்பாட்டம் செய்கின்றனர்; அதற்கு அவர் மன்னிப்புக் கோர வேண்டும்; இல்லையேல் 24ஆம் தேதி கிளர்ச்சி, கண்டன ஆர்ப்பாட்டம் செய்வோம்; ஷிண்டே பதவி விலக வேண்டும் என்றும் உடனே ஆர்ப்பரித்துள்ளனர்!

Tuesday, January 22, 2013

விஷமாகும் உணவு… வீரியம் குறைந்து வரும் ஆண்கள்... அதிர்ச்சித் தகவல்

மாறிவரும் உணவுப்பழக்கத்தால் உலகம் முழுவதிலும் உள்ள ஆண்களின் வீரியம் குறைந்து வருவதாக பிரான்ஸ் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.இதன் காரணமாகவே குழந்தையில்லாத தம்பதிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது என்ற அதிர்ச்சித் தகவலையும் தெரிவிக்கின்றனர் ஆய்வாளர்கள். இன்றைய இளம் தலைமுறைகளில் பெரும்பாலோர் குழந்தை பெற்றுக்கொள்வதில் சிரமப்படுகின்றனர்.

லேப்டாப் அடிப்படை எதிர்பார்ப்புகள்.. (Laptop's basics...)

லேப்டாப் வாங்குவதற்குப் பதிலாக, டேப்ளட் பிசி ஒன்று வாங்கலாமா என்றும், லேப்டாப் வாங்குவதாக இருந்தால், என்ன என்ன அம்சங்களை நாம் கவனிக்க வேண்டும் “என்ன வாங்குவது?” என்ற கேள்வியைக் கேட்பதற்குப் பதிலாக, “என் தேவை என்ன?” என்ற கேள்வியை உங்களிடம் நீங்களே கேட்டுப் பதிலை எழுதிப் பாருங்கள். உங்களுடைய தேவை இணையபக்கங்களைக் காண்பதும், மின்னஞ்சல்களைப் படித்து, பதில் அளிப்பது மட்டுமே எனில், உங்களுக்கு டேப்ளட் பிசி மட்டும் போதும். இவை மட்டுமின்றி, வேறு சில முக்கிய பணிகளுக்கும், பள்ளிக் கல்வி, கல்லூரிப் பணி மற்றும் அன்றாட வாழ்க்கை மற்றும் அலுவலக வேலைகளுக்குக் கம்ப்யூட்டர் பயன்படுத்துவதாக இருந்தால், இன்றைய நிலையில் டேப்ளட் பிசிக்கள் நம் தேவையை முழுமையாக நிறைவேற்றாது. 

"மாவீரன் கர்னல் சவுகத் ஹயாத்" வீர வரலாறு

Freedom Fighter shaukat hayat –
 Indian Army Colonel

நாம் இந்தியர்கள்.... ஆனால் நமது சகோதரர் இவர் வரலாற்றில் இருந்து காவி கயவர்களால் மறைக்க பட்டது.... நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்? இந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்றில் ஆங்கிலேய ஏகாதிபத்தியப் படைகளை ஓடஓட விரட்டி இந்திய தேசியக் கொடியை முதன்முதலில் ஏற்றிய மாவீரன் கர்னல் சவுகத் ஹயாத் பற்றிய வீர வரலாறு இன்றைய இளைய தலைமுறையினரில் எத்தனைப் பேருக்கு தெரிந்திருக்கும்.

இந்திய சுதந்திரப் போரில் செறுகளமாடிய மாவீரர்கள் பற்றிய வரலாற்று நிகழ்வுகள் பல இந்த நாடு அறிந்தே உள்ளது. ஆனால் இரண்டாம் உலகப்போர் உலகையே இருகூறாக மாற்றியது. பிரிட்டன், அமெரிக்கா, சோவியத் யூனியன், பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளின் தலைமையில் நேசப்படைகளும், ஜெர்மனி, ஜப்பான், இத்தாலி உள்ளிட்ட நாடுகளின் தலைமையில் அச்சு நாடுகள் என்ற பெயரில் ஓர் அணியும் மிகப்பெரிய யுத்தத்தில் இறங்கின.

Sunday, January 20, 2013

ஆர்.எஸ்.எஸ் ரகசிய தீவிரவாத பயிற்சி முகாம்களை கண்டு பிடிக்க காடுகளில் தேடுதல் வேட்டை..!

இந்தியாவில் நடந்த தொடர் குண்டு வெடிப்புகளின் பின்னணியில் ஆர்.எஸ்.எஸ். மற்றும் அதன் துணை அமைப்புகள் இருந்து செயல்பட்டுள்ளன என்கிற உண்மை தேசிய புலனாய்வு துறை கண்டுபிடித்தது.

1). மலேகன் குண்டு வெடிப்பு: மும்பையிலிருந்து 300 கிலோ மீட்டர் தொலைவில உள்ள மலேகனில் செப்டம்பர் 8, 2006 - வெள்ளிக்கிழமை பகல் 2.00 மணியளவில் முஸ்லிம்கள் தொழுகை நடுத்தும் இடமும், அடக்கம் செய்யப்படும் கல்லறைகளுக்கு அருகில் நிகழ்த்தப்பட்ட தொடர் பயங்கர குண்டு வெடிப்பில் 38 பேர் உயிரிழந்தனர் 125க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். முடமாகினர். மலேகன் நகரமே ரத்தமயமானது பிய்ந்துப்போன சதைகளுடன் மனிதப் பிண்டங்கள் ஆங்காங்கே சிதறிக்கிடந்தன.

பேஸ்புக் : பாலியல் வன்முறையின் புதிய ஆயுதம் !



நண்பர்கள் வட்டத்தை பெருக்குகிறோம், எங்களுடன் எல்.கே.ஜி முதல் கல்லூரியில் படித்த அனைவரையும் இணைக்கிறோம்’ என்று நோக்கத்துடன் பேஸ்புக்கில் சேருபவர்கள் பின்னர் போலியான அடையாளங்களுடன் தமது நோக்கங்களை நிறைவேற்ற முனைகின்றனர். பதின்ம வயதினர் மட்டும் இன்றி, 13 வயதுக்கு குறைவான குழந்தைகள் கூட பெற்றோரின் துணையுடன், பொய்யான வயதைக் குறிப்பிட்டு பேஸ்புக்கில் தங்களை இணைத்துக்கொண்டு வாழ்க்கையில் இதைச்செய்தே ஆகவேண்டும் என்று கட்டாயத்தில் வாழ்கின்றனர்.