Tuesday, June 26, 2012

நீங்கள் கைதானால், போலீஸ் காவலிலிருந்து உடனடியாக விடுதலை பெறுவது எப்படி?


பிடிப்பாணை வழக்குகளில், பிடிப்பாணையில் கூறப்பட்டுள்ள நெறிமுறைகளைப் பார்த்து, அதற்கேற்ப பிணையாளிகளுடன் பிணைமுறி எழுதித்தர வேண்டும் (குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு. 71). சுமத்தப்பட்டுள்ள குற்றம் பிணையில் விடுவிக்கப்படக் கூடியதாகவும், பிடிப்பாணை இல்லாமல் கைது செய்யப்பட்டிருந்தாலும், பிணைமுறி எழுதிக்கொடுத்த பின்பு உங்களை பிணையில் விடுவிக்கும் படி காவல் நிலையப் பொறுப்பில் உள்ள காவல்துறை அதிகாரியிடம் கேட்கலாம்.
ஒரு நபரிடம் பிணையாளிகள் இல்லாமல் பிணைமுறிவு எழுதி வாங்கிக் கொண்டு, பிணையில் விடுவிப்பதற்கு காவல்துறை அதிகாரிக்கு தன் விருப்புரிமை அதிகாரம் உண்டு (குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 436).

எல் நீனோ (El Nino) என்றால் என்ன...?


மழை பொழிய வென்டிய பருவத்தில் வறட்சி தாண்டவமாடுவது....... வெயில்கொட்ட வேண்டிய கோடைக் காலத்தில் மழை கொடடோ கொட்டென கொட்டி வெள்ளம் பெருக்கெடுத்து ஒடுவது...... சுதாரித்து கொள்ளாக் கூட அவகாசம் தராமல் சூறாவளி வீசுவது.... காயும் வெயிலில் காடுகள் தீப்பற்றி எரிந்து சூரிய வெளிச்சத்தையே மறைக்கும் அளவுக்குப் புகைப்படலம் பரவுவது..... குளிர்ப்ரதேச மக்கள் நடுக்கும் குளிரிலிருந்து தங்களை ஆசுவாசப்படுத்திக் கொள்ள கொடியை எதிர்பார்த்து காத்திருக்கும் போது திடீரென உறைபனி வந்து மூச்சுத்திணற வைப்பது....
இப்படி எல்லாமே தலைகிழாக திகையும் இயற்கையின் சூதத்துக்கு வானிலை நிபுணர்கள் வைத்திருக்கும் பெயர் 'எல் நினோ' . தென் அமெரிக்கா கண்டத்திலிருந்து பேரு, எகவ்டார் போன்ற நாடுகளில் 'எல் நினோ' 'இயேசுவின் ஆசி பெற்ற சிசு' என்று அழைக்க படுகின்றது. ஸ்பானிய மொழியில் 'எல் நினோ' என்றால் புதிய குழந்தை என்று பெயர்.

Monday, June 25, 2012

கைது நடவடிக்கையில் போலிஸ் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள்!

குற்றவாளி ஒருவரை கைது செய்யும் போலீஸ் அதிகாரி, அடையாள அட்டை பொருத்தியிருக்க வேண்டும். ஆனால், எந்த அதிகாரியும் அடையாள அட்டையை பொருத்தி, கைது செய்வதில்லை. "நேம் பேட்ஜ்' மட்டுமே அணிந்திருக்கின்றனர்.

கைது செய்தவுடன், அங்கேயே கைது குறித்து அறிக்கை தயாரிக்க வேண்டும். சட்டம் ஒழுங்கு, குற்றவழக்குகளில் இந்த நடைமுறையை போலீசார் கண்டுகொள்வதில்லை. லஞ்ச வழக்கில் மட்டும் சம்பவ இடத்திலேயே கைது குறிப்பு தயாரிக்கப்படுகிறது.

கைது செய்யும் தகவலை, உறவினர், நண்பர், தெரிந்தவருக்கு தெரிவிக்க வேண்டும். சாதாரண வழக்குகளில் கைது செய்தால் மட்டுமே, உறவினர், நண்பர்களுக்கு தகவல் தெரிவிக்கப்படுகிறது.

எப்படி நடக்கிறது இந்தியாவின் ஜனாதிபதி தேர்தல்...?


உலகின் மிகப் பெரிய குடியரசு இந்தியா என்பதும் இந்தியாவின் குடியரசுத்தலைவருக்கான தேர்தல் நேரம் நெருங்கிக் கொண்டிருக்கிறது என்பதும்குடியரசுத் தலைவருக்கான வேட்பாளர்கள் திரு.பிரனாப் முகர்ஜியும் திரு.சங்கமாவும் என்பதும் நாம் அனைவரும் அறிவோம். ஆனால், குடியரசுத்தலைவருக்கான தேர்தல் எப்படி நடக்கிறது ? அதற்கான விதிமுறைகள்என்ன? இந்த சந்தேகங்களை தெளிவு படுத்தும் நோக்கமே இந்த பதிவு….
குடியரசுத் தலைவருக்கான தேர்தலில் யார் போட்டியிடலாம் ?
இந்திய அரசியலமைப்பின் படி, குடியரசுத் தலைவருக்கான தேர்தலில்போட்டியிட பின் வரும் அனைத்து தகுதிகளும் பெற்றிருக்க வேண்டும்:

Friday, June 22, 2012

ஸ்டெம் செல் சிகிச்சை..! இந்தியாவில் களமிறங்கும் வெளிநாட்டு நிறுவனங்கள்

"ஸ்டெம் செல்" உதவியுடன் உயிர்காக்கும் சிகிச்சைகளில் நம்பிக்கை தரும் வெற்றிகள் அவ்வப்போது வந்துகொண்டிருக்கின்றன. சில நாள்களுக்கு முன்பு, ஸ்வீடன் நாட்டில், பத்து வயது சிறுமியின் ஸ்டெம் செல் உதவியால், ரத்த நாளத்தை வளர்த்தெடுத்துப் பொருத்தியுள்ளனர். இந்தச் சிகிச்சையை வெற்றிகரமாகச் செய்திருப்பவர் மருத்துவர் சுசித்ரா ஹோல்கர்சன். உறுப்புமாற்று அறுவைச் சிகிச்சையில் 25 ஆண்டுகால அனுபவம் உள்ள இவர் மும்பை பல்கலைக்கழகத்தில் படித்தவர். பத்து வயது சிறுமியின் கல்லீரலுக்கு ரத்தம் கொண்டு செல்லும் நாளம் முற்றிலுமாகப் பாதிக்கப்பட்டதால், அந்தச் சிறுமிக்கு கல்லீரல் மாற்று அறுவைச் சிகிச்சை செய்தாக வேண்டும் என்ற கட்டாயம் நேர்ந்தது. 

28 மாதங்களில் 30 தூக்குதண்டனை கைதிகளுக்கு மன்னிப்பு.... பிரதீபாவின் சாதனை

 ஓவ்வொரு குடியரசுத் தலைவரும் குடியரசுத் தலைவர் மாளிகையிலிருந்து விடைபெறும்போது, அவர்களது பதவிக்காலத்தில் நிகழ்த்திய சாதனைகள் என்று சொல்லிக் கொள்ள ஒரு சில முக்கியமான நிகழ்வுகள் இருக்கும். சுதந்திர இந்தியாவின் 12-வது குடியரசுத் தலைவராக ஐந்தாண்டுகள் பதவி வகித்துவிட்டு விடைபெற இருக்கும் குடியரசுத் தலைவர் பதவியை அலங்கரித்த முதல் பெண்மணி என்கிற பெருமைக்குரிய பிரதிபா பாட்டீலின் சாதனை பெருமிதப்படத் தக்கதுதானா என்பதில்தான் நமக்குச் சந்தேகம் எழுகிறது.கொலைக் குற்றவாளி உள்ளிட்ட எந்தக் குற்றவாளியாக இருந்தாலும் அவருக்குத் தூக்குத் தண்டனையிலிருந்து மன்னிப்பு வழங்கும் அதிகாரம் குடியரசுத் தலைவருக்கு உண்டு. 

Wednesday, June 13, 2012

அரசின் இலவச கல்வி உதவி தொகை பெற...


1. பள்ளி படிப்பிற்க்கு தமிழக அரசால் வழக்கப்படும் உதவித்தொகை, சீருடை, நோட்டு புத்தகம், காலனி அரசு பள்ளியில் படிப்பவர்களுக்கே வழங்கப்படுகின்றது (தனியார் பள்ளிகளுக்கு கிடையாது). இதை பெருவதில் சிரமம் இல்லை, இதில் கல்வி கட்டணத்தை தவிர அனைத்தும் தானகவே கிடைக்கின்றது. கல்வி உதவி தொகை விண்ணப்பித்தால் கிடைக்கும்,
அரசு பள்ளிகளில் கல்வி கட்டணம் மிக மிக குறைவு( சில நூறு ரூபாய்கள்). எனவே (அரசு பள்ளிகளில் பிள்ளைகளை படிக்க வைக்கும்) பெற்றோர்கள் இதை
பெறுவதில் ஆர்வம் காட்டுவதில்லை. .
2. அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்காக மத்திய அரசு ஒரு தகுதி தேர்வுவை (NET/NTSE/NMMS தேர்வுகள்) நடத்துகின்றது, இந்த தேர்வை எழுதி தேர்ச்சி பெற்றால் (பாஸ் பன்னினால் ) மட்டுமே உதவி தொகை கிடைக்கும். (8-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு) மாதம் 500 ரூபாய் வரை கிடைக்கும். இந்த தேர்வை பற்றிய விபரம் அறிய http://dge.tn.gov.in/ மற்றும் www.ncert.nic.in இந்த இனையத்திற்க்கு செல்லுங்கள், மேலும் விபரம் அறிய....