Friday, June 17, 2011

ஹார்ட் அட்டாக் ஆறு விதம்..... 2010ன் புதிய கண்டுபிடிப்பு!



மாரடைப்பா… இல்லையா என்பதை ஐந்தே நிமிடத்தில் கண்டுபிடித்து விடலாம். இதை உடனடியாக கவனிக்காவிட்டால் இதயத்தின் திசுக்களை செயலிழக்க செய்துஇதயத்தின் பம்ப் செய்வது பாதிக்கப் பட்டுமார்பு வலிமூச்சு இரைப்புபடபடப்புமயக்கம் என்று அடுத்தடுத்து தொடர்ந்து,கடைசியில் திடீர் மரணம் சம்பவித்துவிடும்.உலக இதய குழுஐரோப்பிய இதயக் கழகம்அமெரிக்க இதயக் கழகம்அமெரிக்க ஹார்ட் சங்கம் இந்த நான்கும் சேர்ந்துஉலக ஆய்வு கூட்டமைப்பு அமைத்துமாரடைப்பின் வகைகளை வகுத்துள்ளன.

ஆறு வகை மாரடைப்பு
மாரடைப்புகள் மொத்தம் ஆறு வகையாக பிரிக்கப்பட்டுள்ளதுஇவற்றில்,ஐந்துஆறாவது வகை மாரடைப்புகளுக்கு காரணம்ஸ்டென்ட்டையும்பைபாஸ் கிரங்குகளையும் சரியாக பாதுகாக்காததால் தான். பெரும்பாலான சர்ஜன்களும்மருத்துவர்களும் வேறு மாநிலத்திலிருந்து இறக்குமதி செய்யப்படுவோர் தான்இவர்களுக்கு மொழி சரியாக தெரியாது,நோயாளிகளிடம் பேசும் நேரம் குறைவுநிறைய நோயாளிகளை ஸ்டென்ட்பைபாஸ் செய்து நிறைய எண்ணிக்கையைக் கட்டி பெரும் பணம் பார்க்கும் நோக்கமாகிவிட்டது. அமெரிக்காஐரோப்பியா போன்ற நாடுகளை போல  மருத்துவர்நோயாளி இவர்களின் ஆலோசனை பல மணி நேரம் ஆகிறது. இதனால்நோயாளிகள் எது எப்போதுஎன்ன செய்ய வேண்டும் என்பதை துல்லியமாக தெரிந்து கொள்கின்றனர். பேராசிரியர் சு.அர்த்தநாரி எம்.டி.டி.எம் அவர்களின் ஆலோசனை

முதல் வகை மாரடைப்பு
முதல் வகைமாரடைப்பு ரத்த நாளத்தில் கெட்டக்கொழுப்பினால் அடைப்பு ஏற்பட்டுஇறுதி கட்டத்தில் ரத்தம் உறைந்து முழு அடைப்பு ஏற்படுவதுஇதனால்இ.சி.ஜி.,யில் மாற்றம் ஏற்படுகிறது. இதை ஸ்டெமி மாரடைப்பு என்று அழைக்கின்றனர்இதை உறுதி செய்ய டிரோப்டி டெஸ்ட்செய்ய வேண்டும். அருகில் உள்ள மூன்றாம் நிலை மருத்துவமனையாக இருந்தாலும், 2 மணி நேரத்திற்குள் ஆஞ்சியோ கிராம்பிளாஸ்டி ஸ்டென்ட்பைபாஸ் செய்ய வேண்டும். மாரடைப்புக் காரணமான ரத்தக் கட்டியை கரைக்க பல்வேறு ஊசிகளை போடுவதுண்டு. கட்டியை கரைத்தவுடன் மீதியுள்ள அடைப்பை பலூன் ஸ்டென்ட் வைத்து குணப்படுத்த வேண்டும்.

முதல் மணி நேரம் கோல் டன் ஹவர்’ என்று அழைக்கப் படுகிறது.கரோனரி ரத்தக்குழாயில் முழு அடைப்புக்கு காரணமான ரத்தக் கட்டியை மணி நேரத்தில் கரைக்க வேண்டும். இல்லையேல்அந்த ரத்த நாளம் ரத்தம் செலுத்தும் இதயத்தசைகள் அழிந்து (நெக்ரோசில்) இதயத்தின் ரத்தத்தைச் செலுத்தும் திறன் இஜச்சன் பிராக்ஸன் (இ.எப்) குறைந்துமூச்சு திணறல்படபடப்புரத்த அழுத்தம் குறைதல்பலவித சிக்கலை ஏற்படுத்தி மரணத்தை ஏற்படுத்தும். அதனால்தான் நேரம் விரயமாகாமல் மணி நேரத்தில் சிகிச்சையைத் தொடங்கி இதயத்தை காப்பாற்ற வேண்டும். இதை முதன்மை பலூன் சிகிச்சை என்று கூறுகிறோம்.

இரண்டாவது வகை
இந்த இரண்டாவது வகை மாரடைப்புக்கு காரணம் வேறு விதமானதுஇதயத் தசைகளுக்கு பிராண வாயுத் தேவை. அதற்கு ஈடு கொடுத்து சமமாக பிராண வாயுவை கொடுக்க வேண்டிய சமநிலையில் வேறுப்பட்டால்குறை ஏற்பட்டு முழு அளவு தடைப்பட்டால் மாரடைப்பு மரணம் ஏற்படும். ரத்தம் தடைப்பட்டால் ரத்தம் உறைந்து விடும். இந்த வகை மாரடைப்பு மரணம்இளம் வயதினருக்கும் வரும்ஆஞ்சியோ கிராம் செய்து பார்த்தால்கரோனரி   ரத்தக்குழாய்கள் அடைப்பு இன்றி இருக்கும். நடுத்தர இளம் பெண்களுக்கு சாதாரணமாக வரும்.

என்னிடம் சிகிச்சைப் பெற்ற பெண்மணி வயது 42,  கள்ளக்குறிச்சியைச்  சேர்ந்தவர். ஒரு மாதம் முன்ஆஞ்சியோ கிராம் செய்துப் பார்த்ததில் ஆஞ்சியோ கிராமில் எந்த அடைப்பும் இல்லை. மறுநாள் ஊர் திரும்பும் வழியில் மூச்சிரைப்பு படப்படப்பு ஏற்பட்டு திடீர் மரணமடைந்தார். இதற்கு காரணம்ரத்த நாள சுருக்கம்கண்ணுக்கு தெரியாத மைக்கிராஸ் கோப் இதயத்தினுள் இருக்கும் நாளங்களில் சுருக்கம்  அடைப்பும்இஸ்மியாவும்அர்த்திமியாவும் தான் காரணம். இதே போல இருபது ஆண்டுகளுக்கு முன்நான் கோவை மருத்துவக்கல்லூரியில் இதய நோய் பேராசிரியராக இருந்த போது, 20 வயது திருமணமான கூலித் தொழிலாளி பெண் சேலத்தைச் சேர்ந்தவருக்கு மாரடைப்பு ஏற்பட்டுகோவை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை அளித்தேன். இதை மருத்துவ சங்கத்தில் பேசும் போதுசில மருத்துவர் சிரித்தனர். இந்த செய்தியை மக்களுக்கு கொண்டுப் போனேன்.இன்று ரத்த நாளத்தின் சிறியக் குழாய்கள் ஸ்பெசம் என்ற சுருக்கம் என்பது உலகுக்கு தெரிய வந்துள்ளது.


மூன்றாவது வகை
நீண்ட நேரம் ரத்த நாளம் சுருங்கினால்ரத்தம் உறைந்து அடைப்பு ஏற்பட்டு அதன் மூலம் மாரடைப்பு உண்டாவது தான் இந்த வகை.

நான்காவது வகை
மாரடைப்பு வந்த பின்பலூன் ஸ்டென்ட் சிகிச்சை செய்யும் போது ஸ்டென்டில் ரத்தம் உறைந்து அடைப்பு ஏற்படும் இதுஇன்ஸ்டென்ட் அடைப்பு எனப்படும். அதனால் வரும் மாரடைப்பு மூலம்விளைவுகளை ஏற்படுத்தும். நல்ல மருந்துகளால்இதை உடனடியாக தடுத்துவிடலாம். கேத்லேப்பில் நல்ல உயிர்காக்கும் வசதிகளும் உள்ளன.

ஐந்தாவது வகை
ஸ்டென்ட் சிகிச்சைக்கு பிறகு அந்த ஸ்டென்ட் என்ன வகை எப்படிப்பட்டது போன்ற முக்கிய குறிப்புகளை நன்கு தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டும். அப்படி தெரிந்து கொண்டுகண்ணும் கருத்துமாக பாதுகாத்து வர வேண்டும். அதாவது ஸ்டென்ட் வைத்த டாக்டர் அல்லது ஸ்டென்டைப் பற்றி நல்ல தெளிவாகவும் தெரிந்த ஊருடுவல் நிபுணரிடம் ஆலோசனைப் பெற்றுஸ்டென்டின் இன்றைய நிலை. அதில்கொழுப்பு படிந்துள்ளது என்ற விவரங்களை அறிந்து கொள்ள வேண்டும்.

ஸ்டென்ட் மூடி மாரடைப்பு வராமல் தடுக்க நிபுணரின் கண்காணிப்பில் பரிசோதனைகள் செய்து காத்துக் கொள்ள வேண்டும். ஸ்டென்ட் சிகிச்சை செய்துஇருபது ஆண்டுகள் என்னிடம் மருத்துவம் பார்த்து நலமாக உள்ளவரும் உண்டு. இரண்டு ஆண்டுகளில் ஸ்டென்ட் மூடி மாரடைப்புடன் வந்தவரும் உண்டு. முதலாமவர் நல்ல வாழ்க்கை முறையை கடைபிடிப்பவர்;   இரண்டாமவர்தான் தோன்றிய முறையில் வாழ்பவர்ஸ்டென்ட் முழுவதும் மூடினால் மாரடைப்புமூச்சு இரைப்புபடபடப்புஇனம் தெரியாத அசதிஇது வராமல் தடுக்க பல கட்டங்களில் பரிசோதனைகள் செய்துக் கொள்ள வேண்டும்.

ஆறாவது வகை
மாரடைப்புக்கு பின்பைபாஸ் சர்ஜரி செய்தவர்களுக்கு வரும் மாரடைப்பு இங்கு பைபாஸ் செய்த பல கிராப்டுகளில் அடைப்பு ஏற்பட்டு மாரடைப்பு ஏற்படும். பைபாஸ் செய்தவர்கள் நமக்கு பைபாஸ் கிராப்டுகள் வைக்கப்பட்டுள்ளது. இது ரத்தநாளம் போன்ற ரத்த ஓட்டமில்லை. கிராப்ட் வெறும் இணைப்பு தான். ஆகையால் இதை அதி ஜாக்கிரதையாக பாதுகாத்துக் கொள்ள வேண்டும். எத்தனை கிராப்ட்கள் எந்தெந்த இடங்களில் உள்ளது போன்றவற்றை வைத்து கண்காணிக்க வேண்டும். இதற்கு தேவையான பல பரிசோதனை கிராம்களை செய்து டி.எட்.டி.எக்கேகாடியோ கிராம் செக் ஆஞ்சியோ கிராம் செய்ய வேண்டும். ரத்த கொதிப்புசர்க்கரை நோய்கொழுப்புகளை கட்டுப்பாட்டில் வைக்க வேண்டும். இவர்கள் தனது இதயம் பைபாசால் 100 சதவீதம் நலமாக உள்ளது என்று  எண்ணாமல்கிராப்ட்களை கண்காணிக்க வேண்டும். என்ன செய்யணும்?

ரத்தக் கொதிப்புசர்க்கரை நோய்அதிக கெட்டக் கொழுப்புகள் உள்ளவர்களும்ரத்தக்குழாய் அடைப்புள்ளவர்களும் ஸ்டென்ட் சிகிச்சை செய்து ஸ்டென்ட் வைத்துள்ளவர்களும்பைபாஸ் கிராப்ட் வைத்துள்ளவர்களும் தங்களது வாழ்க்கை முறையை மாற்றிக்கொள்ள வேண்டும். தனி மனித ஒழுக்கம்மது மங்கைபல மனைவிகள்புகை பிடித்தல் இல்லாமல் இயற்கை உணவு வகையிலும் ஒழுக்கநெறியோடும் உடற்பயிற்சியோகாவும்இதய ஊடுருவல் வல்லுனர் ஆலோசனையின்படி இதயத்தை காப்பாற்றிக் கொள்ளுங்கள்.
நன்றி: "உங்களுக்காக"


No comments:

Post a Comment