Friday, April 8, 2011

அடையாள அட்டை இல்லாதவர்கள் வாக்களிக்க 13 ஆவணங்கள்

சென்னை, ஏப்ரல் 08: வாக்காளர் அடையாள அட்டை இல்லாதவர்கள் பாஸ்போர்ட், பான்கார்டு உள்ளிட்ட 13 ஆவணங்களில் ஏதாவது ஒன்றை காட்டி வாக்களிக்கலாம் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் உள்ள 32 மாவட்டங்களில் 234 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. இந்த தொகுதிகளில் ஜனவரி 10-ம் தேதி வெளியிடப்பட்ட வாக்காளர் பட்டியலின்படி மொத்தம் 4 கோடியே 59 லட்சத்து 50 ஆயிரத்து 620 வாக்காளர்கள் உள்ளனர். இதில் ஆண் வாக்காளர்கள் 2,30,86,295, பெண் வாக்காளர்கள் 2,28,63,481, இதர வாக்காளர்கள் 844. பின்னர் ஜனவரி 1-ம் தேதியை அடிப்படை தேதியாக கொண்டு வாக்காளர்கள் பெயர் சேர்க்கப்பட்டன.
இதில் சுமார் 20 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் சேர்க்கப்பட்டன.இவர்களில் 60 ஆயிரம் பேருக்கு இன்னும் புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்படவில்லை. அடையாள அட்டை இல்லாதவர்கள், அடையாள அட்டைக்கு பதிலாக மாற்றாக 13 ஆவணங்களை காட்டி தேர்தலில் வாக்களிக்கலாம் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.


1.பான் கார்டு 

2.டிரைவிங் லைசென்ஸ் 
3.பாஸ்போர்ட் 
4.மத்திய மாநில, பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் உள்ளாட்சிகளில் பணிபுரியும் ஊழியர் அடையாள அட்டை
5.பொதுவங்கி, தபால் அலுவலகங்களில் அளிக்கப்படும் புகைப்படத்துடன் கூடிய பாஸ் புக் 
6.ஓய்வூதிய ஆவணங்கள் 
7.சுதந்திர போராட்ட வீரருக்கான அடையாள அட்டை 
8.பட்டா பதிவு செய்யப்பட்ட சொத்து ஆவணங்கள் 
9.ஆதிதிராவிடர், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு வழங்கப்பட்ட சான்றிதழ் 
10.ஆயுத லைசென்ஸ் 
11.மாற்றுத்திறனாளிக்கான சான்று 
12.ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தில் வழங்கும் பணிக்கான அடையாள அட்டை 
13.மத்திய தொழில் அமைச்சகம் அளித்துள்ள சுகாதார காப்பீட்டு அட்டை 



ஆகிய 13 ஆவணங்களில் ஏதாவது ஒன்றை காட்டி வாக்களிக்கலாம். இந்த ஆவணங்கள் பிப்ரவரி 28-ம் தேதிக்கு முன்னதாக பெற்றிருக்க வேண்டும். அதற்கு பிறகு பெறப்பட்ட ஆவணத்தை காட்டி ஓட்டு போட முடியாது. தேர்தல் ஆணையம் சார்பில் வீடுவீடாக பூத் சிலிப் வழங்கப்பட்டு வருகிறது. போட்டோவுடன் கூடிய அந்த பூத் சிலிப்பை காட்டியும் வாக்களிக்கலாம் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment