Saturday, April 9, 2011

தகுதியுள்ள வேட்பாளர்களுக்கு ஆதரவு! த.த.ஜ அறிவிப்பு


புதுச்சேரி: நடைபெறபோகும் தமிழகம் மற்றும் புதுவை சட்டசபை தேர்தலில் அந்தந்த பகுதியில் உள்ள வேட்பாளர்களுக்கு கட்சி பாகுபாடின்றி தகுதி அடிப்படையில் ஆதரவு அளிக்க தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அத் முடிவு செய்துள்ளது. இது குறித்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தை சேர்ந்த புதுச்சேரி பஹ்ருதீன் நிருபர்களிடம் கூறியதாவது:
முஸ்லிம் சமுதாயத்திற்கு 6.1 சதவீதம் தனி இட ஒதுக்கீடு, இஸ்லாமிய வங்கி, வட்டி இல்லா கடன், அரபி, உருதுமொழி பாடத்திட்டம், பள்ளிவாசல் சொத்துகளைப் பள்ளிவாசல்களே நிர்வகிக்கும் உரிமை கேட்டு பல கட்ட போராட்டங்களை நடத்தியும் கண்டுக்கொள்ளப்படாமல் உள்ளது.
மேலும் சட்டசபை தேர்தல் அறிக்கைகளிலும் முஸ்லிம்களுக்கென்று எந்த ஒரு வாக்குறுதியும் அளிக்கவில்லை. எனவே வரும் தேர்தலில் தவ்ஹீத் ஜமாஅத் தன்னுடைய ஒட்டுமொத்த ஆதரவை எந்த கூட்டணிக்கும் வழங்குவதில்லை என முடிவு செய்துள்ளது.
வாக்களிப்பது மக்களின் கடமை என்பதால், வேட்பாளர்களின் செயல்பாடு போன்ற தகுதிகளின் அடிப்படையில் கட்சி பாதுபாடின்றி அந்தந்தத் தொகுதிகளில் வேட்பாளர்களைத் தேர்ந்தெடுக்க ஆதரவு அளிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார். புதுச்சேரி மாநில தலைவர் தாஸீன்,பொருளாளர் அக்பர் கரீம், நிர்வாகிகள் ஹாபி, கவுசர்,நஸீர் உடனிருந்தனர்.

No comments:

Post a Comment