Friday, July 29, 2011

வீட்டிற்கே வந்து வில்லங்கத்தை ஏற்படுத்தும் மொபைல் போன்!

வீட்டிற்கே வந்து வில்லங்கத்தை ஏற்படுத்தும் மொபைல் போன் மற்றும் இன்டர்நெட் பயன்பாடுகளால், "டீன் - ஏஜ்' பருவத்தினர் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். மனதளவிலும், உடல் அளவிலும் தங்கள் குழந்தைகள் பாதிப்படையாமல் தடுக்க, பெற்றோர் அவர்களது பக்கம் கவனத்தை திருப்ப வேண்டியது அவசியமாகும். உலக நாடுகளுக்கு இணையாக நமது நாட்டில் தொழில்நுட்ப வளர்ச்சியும், நவீனத்துவமும் போட்டி போட்டு வளர்ந்து வருகின்றன.

மொபைல் போன், ஐபோன் போன்றவற்றை பயன்படுத்துவதால் ?


மொபைல் போன், ஐபோன் போன்றவற்றை பயன்படுத்துவதால் பல்வேறு உடல்நலக் கேடுகள் ஏற்படுகின்றன என்ற நிலையில், மொபைல் போனை, உடலில் இருந்து 1.5 முதல் 2.5 செ.மீ., தூரத்தில் வைத்து பயன்படுத்தினால் பாதிப்பு ஏற்படாது என்று ஆய்வில் தெரியவந்துள்ளது.தகவல் தொடர்பு தொழில்நுட்பத்தில் மொபைல் போன் ஒரு புரட்சியை ஏற்படுத்தியது. இதுவரை ஒருவர், மற்றொருவருடன் தொடர்பு கொள்ள வீட்டில் உள்ள போனையோ அல்லது போன் பூத்தையோ பயன்படுத்தவேண்டும் என்று இருந்த நிலையை மொபைல் போன் வரவு தகர்த்தது.

"ஒவ்வொரு நாளும் 250 குழந்தைகள் உயிரிழக்கின்றனர்'


இந்த செய்தியை படித்தவுடன், ஏன் என்று கேட்க தோன்றும். எதுவும் புது நோய் பரவியுள்ளதா எனவும் கருத நேரும். ஆனால் இக்குழந்தைகளின் இறப்புக்கு காரணம் பட்டினி, என்றால் நம்ப முடிகிறதா? இது நமது நாட்டில் அல்ல. ஆப்ரிக்க நாடான சோமாலியாவில் தான் இந்த கொடூரம் நடந்துகொண்டு இருக்கிறது. இந்நாட்டில் பல ஆண்டுகளாக பட்டினி பஞ்சம் தலைவிரித்தாடுகிறது. 

Thursday, July 28, 2011

சர்க்கரை நோயை கட்டுக்குள் வைக்கும் உணவு வகைகள்!


உலகிலேயே இந்தியாவில்தான் சர்க்கரை நோயாளிகள் அதிகம் அதுவும் தமிழகத்தில் இன்னும் அதிகம் என்பது சாதாரண செய்தியாகிவிட்டது. அடுத்த பத்தாண்டுகளில் இந்தியாவில் சர்க்கரை நோயாளிகள் எட்டுக்கோடியே எட்டப்போகிறார்கள் என்ற பேராபத்தைப் பற்றி யாருக்கும் கவலை இல்லை அண்மையில் எடுத்த ஆய்வு.இந்தியர்களின் உணவுப் பழக்க வழக்கமே இவ்வளவு நோயாளிகளின் பெருக்கத்திற்கு காரணம் என்கிறது. 

பெண்கள் அழகாக இருப்பது எப்போது?


ஒரு பெண் எந்த வயதில் அழகாக இருப்பார். இதை சரியாக சொல்வது கொஞ்சம் கஷ்டம்தான். எந்தப் பெண்ணையும் நீ அசிங்கமாக இருக்கிறாய் என்று சொல்ல யாருக்குமே மனம் வராது. இருந்தாலும் ஒரு பெண் எந்த வயதில் அழகாக இருப்பார் என்பதை ஒரு டிவி சானல் கருத்துக் கணிப்பு நடத்தி வெளியிட்டுள்ளது.

செல்போனுக்கு ரீ-சார்ஜ் செய்ய புதிய கருவி



தொழில்நுட்ப வளர்ச்சியால் செல்போன்கள் பெரியவர்கள் முதல் சின்னஞ் சிறுசுகள் உள்பட அனைவரிடத்திலும் அங்கம் வகிக்கிறது. இன்னும் சில ஆண்டுகள் சென்றால் செல்போன் இல்லாத நபர்களே இருக்க முடியாது? என்னும் நிலை வரப் போகிறது. எனவே செல்போனை எளிதாக பயன்படுத்துவதற்கு வேண்டிய கருவிகளை விஞ்ஞானிகள் கண்டு பிடிப்பதில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். 

மரபணு மாற்றி முறை! "ஜீன் தெரபி''


"நான் ராஜபரம்பரையிலிருந்து வந்தவன்'', "நாங்கள் கொடுத்து பழக்கப்பட்டவர்கள்; கை நீட்டிப் பழக்கப்படவர்கள் இல்லை!'' இவையெல்லாம் சினிமா வசனங்களில் பார்த்திருப்பீர்கள். இவற்றிற்கும் அறிவியலுக்கும் தொடர்பு இல்லாமல் இல்லை. நிறைய தொடர்பு உண்டு. "அப்படியே இவன் அப்பனை உரிச்சு வச்சிருக்கான்''. இந்தப் பண்புகளையெல்லாம் பரம்பரை பரம்பரையாக கடத்தி வருவது ஜீன் எனப்படும் மரபணுதான்.

விண்வெளி மண்டலத்தில் கறுப்பு துவாரம் (Black Holes)


விண்வெளி பற்றி ஆராய்ந்தால் எல்லையில்லாத இன்பம் என்றுதான் சொல்ல வேண்டும். இன்னும் கண்டறியப்படாதது எவ்வளவோ இருக்கிறது. சூரியக் குடும்பத்திலிருந்தே இன்னும் புது புதுத் தகவல்களும் வந்து கொண்டுதானிருக்கிறது. அந்தக் காலத்தில் முன்னோர்கள் வான் மண்டலத்தைப் பற்றி பேசினாலே ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் ஒவ்வொரு கதை வைத்திருப்பார்கள். அறிவியல் முன்னேற்றம் ஏற்பட ஏற்பட விண்வெளியில் நம் பூமி ஓர் அணுவைப் போலத்தான் என்பது தெரிய வருகிறது. பூமியைப் பற்றியே மாறுபட்ட கருத்துக்கள் பல்வேறு வானவியல் வல்லுனர்களால் கூறப்பட்டது.

கரப்பான் பூச்சி ஸ்பிரே' + சமையல் கேஸ் = 'குபீர்' ஆபத்து !


'மகாராஷ்டிர மாநிலம், புனே நகரைச் சேர்ந்த அந்த இல்லத்தரசி, மே 13-ம் தேதியன்று வழக்கம்போல கேஸ் ஸ்டவ்வை பற்ற வைத்து சமையலை ஆரம்பித்தார். அப்போது, சமையல் மேடையில் அலைந்த கரப்பான் பூச்சியைக் கண்டவர், அதற்கான 'ஸ்பிரேவை எடுத்து அழுத்தினார். அடுத்த நொடியே குபீரென தீப்பற்றி, கேஸ் சிலிண்டரும் வெடிக்க... 65 சதவிகித தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். காப்பாற்றச் சென்ற கணவருக்கும் தீக்காயங்கள்’ - இப்படி ஒரு தகவல், இன்டர்நெட்டில் 'தீ'யாக உலா வருகிறது. ஆனால்…..

எது நல்லது? காபியா அல்லது டீயா?’ Coffee or Tea

சிலர் காபி முகத்தில் தான் கண் விழிப்பார்கள். இன்னும் சிலரோ டீ வாசனை முக்கைத் துளைக்கும் போதுதான் படுக்கையில் இருந்தே எழுவார்கள். இப்படி காபி, டீயுடன் அன்றைய நாளைத் தொடங்கும் சுவைப்பிரியர்களின் மனதில் கூட எப்போதாவது எட்டிப்பார்க்கும் கேள்வி: `எது நல்லது? காபியா? டீயா?’

அழகுக்கும் ஆண்மை விருத்திக்கும் வெண்டைக்காய்!


வெண்டைக்காயின் பூர்வீகம் எத்தியோப்பியா. அங்கிருந்து அரேபியா, நைல் நதியோரத்தைச் சேர்ந்த நாடுகளுக்கு வந்து, இந்திய மண்ணில் அடியெடுத்து வைத்துள்ளது. அடிமை வியாபாரத்தைத் தொடங்கிய காலகட்டத்தில், ஆப்பிரிக்க அடிமைகள் இதை அமெரிக்கா, ஐரோப்பா போன்ற மேலைநாடுகளுக்கு எடுத்துச் சென்றனர்.

லேசர் [Laser] தொழிற்நுட்பம் உருவானது எப்படி?


நாம் சாதாரணமாகப் பயன்படுத்தும் ஒளியில் ஒளி மூலத்தின் அணுக் களும், மூலக்கூறுகளும் தனித்தனியாக வெவ்வேறு நிறங்களில் (அலைநீளங் களில்) ஒளியை வெளியிடுகின்றன. இத்தகைய ஒளி எளிதில் சிதறக்கூடியதாக இருக்கிறது. எனவே இந்த ஒளியை உண்டாக்குவதற்குச் செலவான ஆற்றலும் வீணாகிப் போய்விடுகிறது.

பிளாஸ்மா மூலம் மின் ஆற்றல் சாத்தியமா..?


பிளாஸ்மா என்பது இயற்பியல் பொருளின் நான்காவது நிலை. திடப்பொருளைச் சூடாக்கினால் திரவப் பொருளாகிறது. அதை மேலும் சூடுபடுத்தினால் ஆவியாகிறது. அதாவது, வாயுப் பொருளாகிறது. அந்த வாயுவை மேலும் சூடுபடுத்தினால் என்ன ஆகும்?

“ராக்கெட் பிளேன்” தொழிற்நுட்பம்! Tokyo to Paris just 2 ½ Hrs.


அறிவியல் தொழில்நுட்பத்தின் உதவியால் போக்குவரத்து நேரம் நாளுக்கு நாள் குறைந்துகொண்டே செல்கிறது. இதில் அடுத்த புரட்சியாக `ராக்கெட் பிளேன்உருவாகவிருக்கிறது. ஐரோப்பிய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான `ஈ.ஏ.டி.எஸ்.’, ஜப்பான் நாட்டுடன் இணைந்து இதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது.

Wednesday, July 27, 2011

உயிரினங்களுக்கு தூக்கம் ஏன் வருகிறது..?


தூக்கம் ஏன் ஏற்படுகிறது என்று பல விஞ்ஞானிகள் பல ஆய்வுகளை நடத்தி, தாங்கள் கண்டறிந்த உண்மைகளை வெளியிட்டிருக்கிறார்கள். நம் உடலில் உள்ள உறுப்புகள் அனைத்தையும் அடக்கி ஆள்வது மூளை. நரம்பு மண்டலத்தில் முக்கிய உறுப்பும் மூளையே. நம் உடலின் உள்ளும், புறமும் ஏற்படும் உணர்ச்சிகள் அனைத்தும் நரம்புகளின் வழியே மூளைக்குச் செல்கின்றன.

இதய செல்களை உயிர்பிக்கும் ஸ்டெம் செல் சிகிச்சை...!


இதயம் தனக்குத் தானே பழுதுநீக்கிக்கொள்ளும் முறையை இங்கிலாந்து ஆய்வாளர் பால் ரைலி கண்டுபிடித்துச் சாதனை படைத்துள்ளார். இதுதொடர்பாக, எலியின் இதயத்தில் அவர் ஆய்வு செய்துள்ளார். அதில், ஸ்டெம் செல்லை இடம்மாற்றம் செய்வதன் மூலம், சேதம் அடைந்த செல்கள் தாங்களாகவே தங்களைச் சீர்படுத்திக் கொள்ளச் செய்ய முடியும் என்று நிரூபித்துள்ளார்.

மனித உடம்பில் நரம்பு மண்டலம் ஓர் அதிசயம்...

மனித உடம்பில் நரம்பு மண்டலம் ஓர் அதிசயம். மூளையும், தண்டுவடமும், அவற்றில் இருந்து புறப்படும் பல நரம்புகளும் இதில் அடக்கம். மூளையில் இருந்து 12 ஜோடி நரம்புகள் புறப்படுகின்றன. சுண்டுவிரல் அளவுக்குத் தடிமன் உள்ள தண்டுவடம் மூளையின் அடிப்பாகத்தில் இருந்து தலையின் துவாரம் வழியாகச் செல்லும் வடமாகும். 

தவறைச் செய்யாதீர்கள்... பெண்களே!


சமுதாயத்தைப் பொறுத்தவரை எந்த தவறையும் ஆண்கள் செய்யலாம். ஆனால் பெண்கள் செய்யக் கூடாது என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ள ஒரு விதி. ஆனால் இதை பெண் அடிமைத்தனம் என்று எடுத்துக் கொள்வதை விட, ஆண் செய்யும் தவறால் சமுதாயத்தில் எந்த பெரும் சிக்கலும் உருவாகாது. ஆனால் அதே தவறை பெண் செய்யும் போது பல கேள்விக்குறிகள் எழும்.

பள்ளிகள் அங்கீகாரம் அறிய இணையதளம்! கல்வித்துறை துவக்கியது

தனியார் பள்ளிகள் தங்கள் பள்ளிகளின் அங்கீகாரம் மற்றும் இதர விவரங்களை அறிந்து கொள்ளும் வகையில் முதன் முறையாக  இணையதளத்தை அறிமுகம் செய்ய, பள்ளிக் கல்வித் துறை முன்னோட்டம் நடத்தி வருகிறது. தனியார் பள்ளிகளின் அங்கீகாரம் குறித்து, ஆண்டுதோறும் பெற்றோருக்கு குழப்பம் ஏற்படுகிறது. ஆய்வகம், விளையாட்டு மைதானம், நூலகம், கழிப்பிடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாமலேயே, பல இடங்களில் பள்ளிகள் துவக்கப்பட்டன. புற்றீசல் போல் ஏராளமான பிரைமரி, நர்சரி பள்ளிகள் அதிகரித்தன.

அதிக புத்தக சுமையால் மாணவர்களுக்கு தண்டுவடம் பாதிப்பு?


கடந்த தி.மு.க., ஆட்சியில் மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்பட்ட நலத்திட்ட உதவிகள், அ.தி.மு.க., அரசிலும் தொடரும் என முதல்வர் தெரிவித்தார். அதன்படி, பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் கை, கால்களின் நிலையை கண்டறிந்து, முன்கூட்டியே மாற்றுத்திறனாளிகள் உருவாகாமல் தடுக்கும் நோக்கில், "இலவச மருத்துவ முகாம்' நடத்தும் திட்டத்தை முதல்வர் அறிவித்தார்.

Monday, July 25, 2011

சாலை விதிகளைத் தெரிந்துகொள்வோம்....


புவிவெப்பம், பருவநிலை மாற்றம், சுனாமி, பூகம்பம் போன்ற இயற்கை பேரழிவுகளால் பல்வேறு அச்சுறுத்தல்களை மனிதர்கள் எதிர்கொண்டு வருவது ஒருபுறம் இருந்தாலும், கவனமின்மையால் வாகன விபத்துகள் ஏற்பட்டு மனிதர்கள் உயிரிழக்கும் போக்கு மறுபுறம் அதிகரித்து வருவதும் கவலையளிக்கச் செய்வதாக உள்ளது.

Friday, July 22, 2011

கட்டி கட்டியாக தங்கம்; கடவுளைக் காட்டி பயமுறுத்தும் மதவாதம்!


உலக பணக்கார கடவுள்[?] என்று சொல்லப்படும் திருப்பதியாரையே திரும்பி பார்க்க வைத்தவர் பத்மநாப சுவாமி. தனது ஸ்தலத்தின் ரகசிய அறைகளில் தனது செலவுக்கு[?]கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள ஆபரணங்களை அடுக்கி வைத்தவர். ஒருவர் கோர்ட்டில் தொடர்ந்த பொது நல வழக்கின் மூலம் தான் பத்மநாப சுவாமி கோயிலில்  பதுக்கி வைக்கப்பட்டுவைகள் பட்டவர்த்தனமாக வெளியானது.   

கழகத்திற்கோர் 'எமெர்ஜென்சி'; கலக்கத்தில் கருணாநிதி..?

தமிழகத்தில் ஆக்கிரமிக்கப்பட்ட நிலங்கள் குறித்து வரும் புகார் குறித்து நடவடிக்கை  மேற்கொள்ள காவல்துறையில் தனிப் பிரிவை ஏற்படுத்தியுள்ளார் முதல்வர் ஜெயலலிதா. இதையடுத்து அடுத்தடுத்து நில மோசடி வழக்கில் திமுக புள்ளிகள் கைதாவது திமுக தலைவருக்கு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது போல் தெரிகிறது. 

குடிமக்கள் அரசா? 'குடிமகன்' களின் அரசா?


மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் அரசு மக்கள் நலப்பணிகளை மட்டுமே கவனத்தில் கொள்ளவேண்டும். அந்த மக்கள் நலப் பணிகளுக்கு தேவையான நிதிகளை உரிய நியாயமான வரிவிதிப்பின் மூலம் பெற்று, அதை சரியான வகையில் செலவிடுவதில் கவனம் செலுத்த வேண்டும்.

மாணவர்கள் கற்க வேண்டிய பத்துப் பாடங்கள். அஜீம் பிரேம்ஜி



நமது நாட்டில் மட்டுமின்றி, சர்வதேச அளவில் தகவல் தொழில்நுட்பத் துறையில் கொடி கட்டிப்பறக்கும் முக்கிய நிறுவனமான விப்ரோ நிறுவனத்தின் தலைவர் அஜீம் பிரேம்ஜி, ஒரு விழாவில் மாணவர்கள் கற்க வேண்டிய பத்துப் பாடங்களை விளக்கினார். அவை...

நாம தான் அட்ஜஸ் பண்ணி வாழ கத்துக்கணும்


மவுண்ட் ரோடு, டி.வி.எஸ்., ஸ்டாப்பில் தான், நான் ஏறினேன்.  11 எச் நிறைந்து வழிந்தது; முண்டியடித்து ஏறினேன். இடதுகால் ஸ்லிப் ஆகி விடப் போகிறதோ என்ற பயம் வேறு. பதிமூன்று வருடங்களுக்கு முன், விபத்தாகி, முட்டியில்  பந்து கிண்ண மூட்டில், பந்தில் மெல்லிய விரிசல் பரிசோதித்த டாக்டர், "ப்ளேட் எல்லாம் இந்த வயசில் வைக்க வேண்டாம்... மூணு மாசம், "பிசியோதெரபி'க்கு அப்புறம் பார்த்து நடங்க. ஹீல்ஸ் வெச்ச ஷூ போடாதீங்க... கால் ஸ்லிப் ஆச்சுன்னா, பந்து நகர்ந்து உட்காரும்... உயிர் போற மாதிரி அஞ்சு நிமிஷம் வலிக்கும்; அப்புறம் சரியாகும்...' என்றார்.

படிக்காமலே ஆயிரம் ஆயிரமாக சம்பாதிக்க!'



"ஸ்மார்ட்' பயிற்சி திட்டத்தின் முதன்மைச் செயல் அலுவலர் செந்தில் குமார்: இந்தியாவில் அதிகளவில், பணிவாய்ப்பை வழங்கும் துறையில் விவசாயத் துறைக்கு அடுத்த இடம் ஜவுளித் துறைக்கு உண்டு. இந்த துறையில், தற்போது 70 லட்சம் பேர் நேரடியாகவும், இரண்டரை லட்சம் பேர் மறைமுகமாகவும் பணியாற்றி வருகின்றனர்.

கைத்தொழில் ஒன்றை கற்றுக் கொள்.....


பெண்களுக்கு, ஆண்களுக்கு, என அனைத்து பால் இனத்தவர்களும் பொருளாதார ரீதியாக தங்களை உயர்த்திக் கொள்வதற்கு உதவும் எண்ணற்ற தொழிற்பயிற்சிகளை அளித்து வருகின்றது சென்னை, சூளைமேட்டில் இயங்கிவரும் "மக்கள் கல்வி நிறுவனம்'. மத்திய அரசின் ஓர் அங்கம் இது. இம்மையத்தின் தலைவர் கி.கிருஷ்ண மூர்த்தியும், இயக்குனர் தங்கவேலுவும், திட்ட அதிகாரி ராஜாராமனும் நம்மிடம் மையத்தின் பயிற்சி முறைகளைப் பற்றியும் இதனால் பயன் அடைந்தவர்கள் பற்றியும் பேசியதிலிருந்து.

பெண்களின் உயர்கல்விக்கு தனியார் நிறுவனம் உதவி



பட்டதாரிகள், முதுகலை பட்டதாரிகள், பி.எச்.டி ஆய்வு மேற்கொள்ளும் பெண்கள் ஆகியோருக்கு ஃபேர் அன்ட் லவ்லி நிறுவனம் உதவித் தொகை வழங்க உள்ளது.

Wednesday, July 20, 2011

கழிவுகள் கழிதலும்...


கிகாலி (Kigali) ஆப்பிரிக்காவின் ருவாண்டா (Rwanda) நாட்டிலுள்ள நகரம். இங்கு ஜுலை 19, 2011 செவ்வாயன்று நடைபெற்ற ஆப்பிரிக்காஸான் மாநாட்டில் (AfricaSan Conference) 42 மில்லியன் - அதாவது நாலு கோடி இருபது இலட்சம் - அமெரிக்க டாலர் நன்கொடை அளித்துள்ளது பில் கேட்ஸின் பில் அண்ட் மெலிண்டா கேட்ஸ் ஃபவுண்டேஷன் (Bill & Melinda Gates Foundation). எதற்கு இவ்வளவு பெரிய நன்கொடை?

Tuesday, July 19, 2011

உண்மையை மறைக்கும் மருத்துவமனைகள்..!


நாள்தோறும் சமையலில் எண்ணெய்க்குப் பதில் தண்ணீரைப் பயன்படுத்தலாம் என இதயநோய் நிபுணரும் சேவோல் சுகாதார ஆராய்ச்சி அறக்கட்டளையின் நிறுவனருமான டாக்டர் பிமல் சாஜ்ஜர் கூறினார். இது குறித்து சென்னையில் செய்தியாளர்களிடம் செவ்வாய்க்கிழமை அவர் கூறியது:  1992-ம் ஆண்டில் 1.6 கோடியாக இருந்த இதய நோயாளிகள் எண்ணிக்கை 2010-ம் ஆண்டில் 10 கோடியாக உயர்ந்துள்ளது.

டி.வியில் வரும் விளம்பர மருந்துவர்கள்! உஷார்.....

தங்களிடம் வந்து அறுவைச் சிகிச்சை செய்து கொள்ளுமாறு டாக்டர்கள் விளம்பரங்களைச் செய்யக் கூடாது என்று தேசிய நுகர்வோர் குறை தீர்வு ஆணையம் கூறியுள்ளது. இதுபோன்ற விளம்பரங்களை டாக்டர்கள் வெளியிடுவது நியாயமற்ற வணிக நடவடிக்கை என்றும் அந்த ஆணையம் கூறியுள்ளது.

பகவத் கீதையை விரும்பாதவர்கள் நாட்டை விட்டு வெளியேறவேண்டும் - பா.ஜ.கவின் மதவெறிப் பேச்சு

பெங்களூர்:கர்நாடகாவை ஆளும் பா.ஜ.க தலைமையிலான அரசு பசுவதை தடைச்சட்டம், பள்ளிக்கூடங்களில் பகவத் கீதையை படிப்பதை கட்டாயமாக்குதல் போன்ற ஹிந்துத்துவ பயங்கரவாத அஜண்டாக்களை அமுல்படுத்தி வருகிறது. இதற்கு பல தரப்பிலும் கடும் கண்டனம் எழுந்து வருகின்றன.

சிறுபான்மை முஸ்லிம் மாணவிகளுக்கு ஸ்காலர்ஷிப் திட்டம்


MAULANA AZAD EDUCATION FOUNDATION
SCHOLARSHIPS FOR MERITIOUS GIRLS STUDENT BELONGING TO MINORITIES
(Ministry of Minority Affairs, Govt. of India)
SOCIAL JUSTICE SERVICE CENTRE, CHELMSFORD ROAD, NEW DELHI-110055.


Monday, July 18, 2011

தங்கத்திற்கு இத்தனை மகிமையா?


தங்கம் ஓர் ஆபரணப் பொருளாக மட்டுமில்லாமல் பலவகையிலும் நமது அன்றாட வாழ்க்கையில் பயன்பட்டுவருகிறது. ஆயுர்வேதத்தில் தங்க பஸ்பத்திற்கு தனிச் சிறப்பு உண்டு. சருமத்தின் பொலிவை அதிகரிக்கவும் சுருக்கங்களை மாற்றுவதற்கும் பயன்படுத்தப்படும் அழகு பூச்சுகளில், தங்கம் முக்கிய இடம் வகிக்கிறது.

சமச்சீர் கல்வி தொடர வேண்டும் : சென்னை ஐகோர்ட் பரபரப்பு தீர்ப்பு


சென்னை: தமிழகத்தில் சமச்சீர் கல்வி தொடர்பாக சென்னை ஐகோர்ட் பரபரப்பு தீர்ப்பை வெளியிட்டுள்ளது. நடப்பாண்டில் அனைத்து வகுப்புகளிலும் சமச்சீர் கல்வியை தொடர வேண்டும் என்றும் வரும் 22 ம் தேதிக்குள் சமச்சீர் கல்வி தொடர்பான புத்தங்கள் வழங்கிட வேண்டும் என்றும் ஐகோர்ட் பரபரப்பு தீர்ப்பளித்துள்ளது.

30 கோடி பெண்களைத் தாக்கவிருக்கும் எலும்புத் தேய்மானம்!


நாற்பது வயதைத் தாண்டி விட்டாலே பல்வேறு நோய்களோடு எலும்பு தேய்மானமும் பெண்களைத் தேடி வந்து ஒட்டிக் கொள்கிறது. இந்தியாவில் சுமார் 6 கோடி பெண்கள் எலும்பு தேய்மானம் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். அடுத்த 40 ஆண்டுகளில் இந் நோய் 30 கோடி பேரைத் தாக்கும் என்று நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

குறைந்து வரும் சுக பிரசவங்களும் பெருகி வரும் சிசேரியன்களும்...!


ஒரு நாட்டில் 15 சதவீதத்துக்கு மேல் சிசேரியன் பிரசவங்கள் இருந்தால், அந்த நாட்டில் பெண்கள் ஆரோக்கியமாக இல்லை என அர்த்தம்' என, உலக சுகாதார அமைப்பு கூறுகிறது. சென்னையில், சிசேரியன் சதவீதம் 50க்கும் மேல் உள்ளது.சிசேரியன் பிரசவங்களின் எண்ணிக்கை உயர்ந்து வருவது உண்மைதான் என, டாக்டர்களே ஒப்புக் கொள்கின்றனர்.

Sunday, July 17, 2011

கொட்டி கிடக்கிறதா வளைகுடா நாடுகளில்?

இரவின் கடுங்குளிரில் தினமும் சுள்ளி பொறுக்குபவனை பார்த்து வழிபோக்கன் கேட்டானாம் எதற்காக சுள்ளி பொறுக்குகிறாய்? என்ன கேள்வி இது? குளிர் காயத்தான். எப்போது குளிர் காய்வாய்? இவனிடம் பதிலில்லை. எழுபதுகளிலும் எண்பதுகளிலும்(1970களிலும், 1980களிலும்) வேலை வாய்ப்புத் தேடி இங்கு வளைகுடா நாடுகளுக்கு வந்தவர்கள் இந்த வேலைதான் செய்ய வேண்டும் என்ற இலக்கில்லாமல் ஏதோ கிடைக்கின்ற பணிகளில் சேர்ந்து.அயல்நாட்டு நாணய மதிப்பில் சம்பளம் வழங்கப்படுவதால் அது நம் நாட்டு மதிப்பில் பெரும் பணமாக இருக்கும்.

பால், காய்கறியில் ஆக்சிடோசின் நஞ்சு! உணவில் பயங்கரவாதம்!

பெருகி வரும் மக்கள் தொகையின் விளைவாக உணவுத் தேவை வேகமாக அதிகரித்து வருகிறது. இதைப் பயன்படுத்தி பல குறுக்கு வழிகளில் உணவுப் பொருள்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. குறுகிய காலத்துக்குள் அதிக அளவில் உணவுப் பொருள்களைத் தயாரித்து லாபம் பார்க்க வேண்டும் என்ற எண்ணம் பெரும்பாலான தயாரிப்பாளர்களிடம் அண்மைக் காலமாக மேலோங்கி வருகிறது.

மல்டி லெவல் மார்கெட்டிங் ஒரு ஏமாற்று வேலை!

"இதனால் தன் அரசாங்க, உயர்பதவிகளைத் தொலைத்தவர்கள் கணக்கிலடங்காதவர்கள். உழைப்புக்கு இருக்கும் மரியாதையை கேவலமான ஆள்காட்டி வேலை செய்து சோம்பேறிகளாகவும் தான்தோன்றிகளாகவும் மக்களை ஆக்கும் முயற்சி தான் இந்த மல்டி லெவல் மார்க்கட்டிங். இது இந்தியாவில் எனக்குத் தெரிந்து அறிமுகமானது" ஆம்வே எனும் அமெரிக்க நிறுவனத்தால்.

என்ன நடக்கிறது அரபு மண்ணில்…? CMN சலீம்

 இந்த ஆண்டு தொடக்கத்தில் வட ஆப்ரிக்காவில் உள்ள இஸ்லாமிய நாடுகளில் சிறிய நாடான துனீஸியாவில் ஏற்பட்ட மக்கள் போராட்டம் கொஞ்சம் கொஞ்சமாக பல அரபு நாடுகளுக்கும் பரவி வருகிறது. துனீஸியாவிலும் எகிப்திலும் இந்தப் போராட்டம் அந்நாட்டின் அதிபர்களை நாட்டைவிட்டு ஓடச் செய்துள்ளது. தற்போது லிபியாவிலும் ஏமனிலும் போராட்டத் தீ பற்றி எரிகிறது. எதனால் இந்தப் போராட்டம் நடக்கிறது? அரபு மண்ணில் என்ன நடக்கிறது? இந்தப் போராட்டங்களின் பின்னணியில் யாருடைய கை உள்ளது? என்பன குறித்து இந்த கட்டுரை விரிவாக அலசுகிறது.

Saturday, July 16, 2011

செல்ஃபோனின் கதிர்வீச்சும் காதுகளின் பாதிப்பும்...!

காதில் எப்போதும் ஒரு வித வலி இருந்து கொண்டே இருந்தது அந்த மனிதருக்கு.... காதுக்குள் புண் இருக்கும் என்று நினைத்து மருந்து வாங்கி போட்டுப்பார்த்தார். வலி குறையவில்லை. ஆனால் காது கேட்கும் திறனும் குறைந்தது. பின்னர் டாக்டரிடம் போனார், காதை சோத்தித்து டாக்டர் காது நரம்புகளில் பாதிப்பு என்று சொன்ன போது அதிர்ந்து போனார். அவர் ஒரு பிசினஸ்மேன். தினமும் பல மணி நேரம் செல்போனில் பேசுபவர். அதுதான் காரணம் என்பதை அவர் உணர்ந்தார்.

வருகிறது.... வகுப்புக் கலவரத் தடுப்பு சட்டம்!

நடக்க இருக்கின்ற மழைக்கால நாடாளுமன்ற தொடரில் ஒரு முக்கிய சட்டம் நிறைவேற்றப்பட உள்ளது. அதுதான் - வகுப்புக் கலவரத் தடுப்பு சட்டமாகும். மகளிர் மசோதா வழக்கம் போல கூறப்பட்டாலும் அது நிறைவேற்றப்பட்ட பின்தான் உறுதியாகச் சொல்ல முடியும். வகுப்புக் கலவரத் தடுப்புச் சட்டம் இதற்கு முன்பேகூட 2005இல் கொண்டு வரப்பட்டு  பின் நிறுத்திக் கொள்ளப்பட்டது. இப்பொழுது அறிமுகப் படுத்தப்பட்டுள்ள சட்டத்தில் பல முக்கிய அம்சங்கள் இடம் பெற உள்ளன.

மொபைல் ஃபோன்களை பராமரிப்பது எப்படி?

காஸ்ட்லியான மொபைல்போன், குறைந்த விலை மொபைல்போன் எதுவாயினும், அதை பராமரிக்கும் முறைகளிலேயே அதன் ஆயுட்காலம் இருக்கிறது. சரியான பராமரிப்பு இல்லாத மொபைல்போன்கள் அதன் மதிப்பை வெகுசீக்கிரத்திலேயே இழந்துவிடும். சில எளிய முறைகளை கையாண்டால், உங்கள் மொபைல்போனின் மெருகு குலையாமல் நீண்ட காலம் பயன்படுத்த முடியும். உங்களுக்காக சில எளிய வழிமுறைகள்...

ஆதரவற்ற விதவைகளுக்கு அரசாங்க உதவித் திட்டம்!


ஆதரவற்ற முதியோர்களுக்கு அரசு உதவி செய்வது போலவே, ஆதரவற்ற விதவைகளின் எதிர்காலம் இருண்டு போய்விடக் கூடாது என்ற நல்லெண்ணத்தில் அரசு செயல்படுத்தும் திட்டம் இது. எதிர்பாராத விதமாக கணவனை இழந்து, வாழ்க்கையில் தடுமாறிக் கொண்டிருக்கும் விதவை பெண்கள் இந்த திட்டத்தில் பயன்பெற முடியும்.

Friday, July 15, 2011

ஆண்மைக்குறைவை உண்டாக்கும் கறிக்கோழிகள்! எச்சரிக்கை தகவல்

கறிக்கோழிகளை வேகமாக வளர வைப்பதற்காக உணவுடன் வேதிப் பொருள்கள் கலந்து வழங்கப்படுவதால், அதை சாப்பிடுகிறவர்கள் நோயில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. நாட்டின் உணவுத்தேவை வேகமாக அதிகரித்து வருகிறது. அண்மைக்காலமாக அசைவு உணவுகளின் தேவை அதிகரித்து வருகிறது. இன்று அசைவ உணவில், கோழிக்கறி முக்கியமான இடத்தைப் பிடித்துள்ளது.

Thursday, July 14, 2011

Required following positions to work in a RAIL PROJECTS in Doha, Qatar.


Need of the following positions to work in a RAIL PROJECTS in Doha, Qatar.   with the SUBJECT LINE: Application for Rail Opportunities – Qatar ( POSITION APPLIED FOR ).  Please forward below e-mail to anyone who is interested and/or those has been released from JT Metro.

Looking for an Auditor to work in Qatar


Looking for an Auditor to work in Qatar having the below qualifications, noting that the duration of the hiring may vary according to the monthly cost, but it may be extended for one year. If you know somebody, please ask him to contact me as soon as possible.

IT professionals required immediately in Riyadh (local hiring)


Minimum University degree in computer field and 7 -10 years in System Implementation. University degree in Computer related field or in Accounting/Finance and professional Training /Certification in IT Field. Knowledge of Oracle E-Business Suite 11 in the areas of Finance, HR and Project, Oracle 9i developer Suite, analytical and communication Skills.